search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் போலீசிடம் நகை பறித்த 2 பேர் கைது
    X

    பெண் போலீசிடம் நகை பறித்த 2 பேர் கைது

    • கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள்
    • 3 பவுன் செயினை போலீசார் பறிமுதல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் அன்பரசன். அரசுப் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளமதி(வயது 33). இவர், தருமபுரியில் காவலராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இரவு 10 மணியளவில் கணவன் மனைவி இருவரும் பைக்கில் திருப்பத்தூரில் இருந்து தென்றல் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது, இவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இளமதி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து இளமதி கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் (25) மற்றும் கணபதி(38) ஆகியோர் இளமதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர். மேலும் வாலிபர்களிடமிருந்து மூன்றரை பவுன் செயினை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×