என் மலர்
நீங்கள் தேடியது "மருந்து பெட்டகங்கள்"
- 45 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- பலர் கலெந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் தேவராஜ், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் மக்களை தேடி மருத்துவத்திட்டன் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 10 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள், 14 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 5 நபர்களுக்கு நத்தம் பட்டாகள், 5 நபர்களுக்கு இப்பட்டாக்கள், மற்றும் 1 நபருக்கு வாரிசு சான்றிதழ் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கலெக்டர் பேசும்போது:-
இந்த முகாமில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மாரிமுத்து, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் செந்தில், ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், துணை தலைவர் ஸ்ரீதேவிகாந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜாஜெகன், ஒன்றியக்குழு உறுப்பினர் உமாகன்ரங்கம், வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சிதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயபாரதிரவிகுமார், முருகன், சங்கர், அனுமந்தன், சுமதிஏழுமலை, மருத்துவர் புகழேந்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலெந்து கொண்டனர்.






