என் மலர்
நீங்கள் தேடியது "13 விடுதிகள் இயங்கி வருகின்றன"
- 4 செட் சீருடை,. பாய், போர்வை போன்றவை வழங்கப்படுகிறது
- ஆதார் அட்டை நகல், வங் கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகள் கல்லூரி மாணவ,மாணவியர் ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது;
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், கல்லூரி மாணவர் விடுதிகளும், 6 பள்ளி மாணவர் விடுதிகளும், 3 பள்ளி மாணவிகள் விடுதிகளும் என மொத்தம் 13 விடுதிகள் இயங்கி வருகின்றன.
இதில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகளில் பயி லும் அனைத்து மாணவ, மாணவியரும் தங்கி, உணவருந்தி கல்வி பயில தகுதியுடையவர் உரிய இட ஒதுக்கீடு விதிகளின்படி விடுதி வசதி வழங்கப்படும்.
மேற்படி, விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விடுதியில் தரமான உணவு, பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடை,. பாய், போர்வை போன்றவை வழங்கப்படுகிறது.
மாலை நேரங்களில் விளையாட விளையாட்டு பொருள்கள் வழங் கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக் குள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங் கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.






