என் மலர்
உள்ளூர் செய்திகள்

மிட்டாய் தயாரிக்கும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
சுகாதாரமற்ற முறையில் மிட்டாய்கள் விற்பனை?
- கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
- சுகாதாரத்தை பேணி பணியில் ஈடுபட அறிவுரை
வாணியம்பாடி:
வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பெட்டி கடைகள் உள்ளது.
இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் கடலை மிட்டாய்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், கடலை மிட்டாயில் மர குச்சி இருக்கும் படத்தை வாடிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து வேலூர் மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் (உணவு பாதுகாப்பு), வாணியம்பாடி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி (பொறுப்பு) ஆகியோர் வாணியம்பாடியில் உள்ள கடலை மிட்டாய் தயாரிக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்ப ட்டிருந்த அனைத்து கடலை மிட்டாய்களும் பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, உரிமையாளரிடம் சுகாதாரமான முறையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் என்றும், கடலை மிட்டாய் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தலைக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்.
பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் சுகாதாரச் சான்று பெற்றிருக்க வேண்டும். தன் சுத்தம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி உணவு பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.






