என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moped theft"

    • கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை
    • 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே ஏரிகோடி பகுதியை சேர்ந்தவர் ரவி. ரத்தப்பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். இவரது மனைவி நந்தினி. இவருக்கு பிறந்தநாள் பரிசாக ரவி மொபட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    அந்த மொப்பட்டை வீட்டின் வெளியே இரவு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றனர்.

    பின்னர் அதிகாலை எழுந்து வந்து பார்த்தபோது மொபட் மாயமாகி இருந்தது.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் 2 மர்ம நபர்கள் வீடுகளை நோட்டமிட்டு வந்தனர்.

    ரவியின் வீட்டின் அருகே வந்து வெளிபக்கமாக வீட்டை தாழிட்டனர், பின்னர் ஜன்னல் வழியாக சாவியை எடுத்து மொபட்டை திருடிச் சென்றுள்ளனர். மர்ம நபர்கள் மொபட்டை திருடிச்செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.

    இது குறித்து ரவி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் அதில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கிய மொப்பட்டை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×