என் மலர்
திருப்பத்தூர்
- சாலையில் பேசிக்கொண்டே நடந்து சென்றார்
- விநாயகர் ஊர்வலத்தில் பரிதாபம்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பள்ளி தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 25). தொழிலாளி. இவர் நேற்று மாலை நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். சாலையில் பேசிக்கொண்டே தங்கராஜ் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக தங்கராஜ் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
அங்கு நின்றவர்கள் படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தங்கராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உமராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்
- பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்
ஆம்பூர்:
திருப்பதி செல்வதற்காக தருமபுரியில் இருந்து காரில் சக்தி, கிருபாகரன், மோகன், அறிவழகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். காரை மனோஜ் குமார் என்பவர் ஓட்டினார். தர்மபுரியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி அரசு பஸ் காரின் பின்னால் வந்து கொண்டிருந்தது.
வேலூர் - ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கார் டிரைவர், பஸ் டிரைவர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பஸ்சையும், காரையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விபத்து சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்பு துறையினர் மீட்டனர்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
நாட்டறம்பள்ளி தாயப்பன் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 24). இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் தனது நண் பர்களுடன் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையில் விநாயகர் சிலையை கரைத்துள்ளார்.
பின்னர் நண்பர்களுடன் அணையின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றார்.அப்போது அவர் நீரில் மூழ்கினார். அதேபோன்று ஜோலார் பேட்டையை அடுத்த கோனேரிக்குப்பம் கிரா மத்தை சேர்ந்த பூவரசன் (22) என்பவரும் தனது உறவினர்கள், நண்பர்களுடன் அதே அணைப்பகுதியில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு கரையின் மீது சென்று கொண் டிருந்தார்.
அப்போது அணையில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.
இதனை கண்ட அங்கிருந்த வர்கள், நீரில் மூழ்கிய இருவ ரையும் காப்பாற்ற முயன்றனர். பூவரசனை மட்டுமே பிணமாக மீட்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீரில் மூழ்கிய முரளியை இரவு 7 மணி வரை தேடியும் மீட்க முடியவில்லை. இதனால் தேடும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரம் தேடலுக்கு பின்பு முரளியை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து ஆந்திர மாநிலம், குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 22-ந்தேதி முதல் நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் பள்ளிக்கு வர இயலாமல் உள்ள இயலாமையுடைய சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் வருகிற 22-ந்தேதி (வெள் ளிக்கிழமை) திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள் ளியிலும், 23-ந் தேதி ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியிலும், 25-ந் தேதி ஆம்பூர் ஐ.இ.எல்.சி. காதுகே ளாதோர் நிதியுதவி மேல்நிலைப்பள்ளியிலும், 26-ந் தேதி நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 29-ந் தேதி ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 30-ந் தேதி கந்திலி கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
முகாமில் தகுதியான பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த முகாமில் 3 புகைப்படங்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
- 1000 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினர்
- பொதுமக்கள் எராளமானோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் ஸ்ரீ அரசமர விநாயகர் சதுர்த்தி விழாக்குழு அறக்கட்டளை சார்பில் 26-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதன் தலைவர் கே.மோகன் தலைமையில் நடைபெற்றது.இதில் உறுப்பினர்கள் வி.எஸ்.சரவணன், ஏ.ஐய்ப்பன், செயலாளர் எம்.விஜய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம். நாகேந்திர குமார், நகரமன்ற உறுப்பினர்கள் பா.சாந்தி பாபு, மா.பா சாரதி, சித்ரா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நகர கூட்டுறவு வங்கி தலைவரும் நகர திமுக செயலாளருமான வி.எஸ்.சாரதி குமார் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள், ஏழை பெண்கள் 5 பேருக்கு தையல் இயந்திரங்கள், 1000 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிவப்பிர காசம், ஆர்.டி.கிரி, தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.சிரஞ்சீவி, விழாக்குழு பொருளாளர் எஸ்.கணேசன், துணை தலைவர் ஆர். ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் நரேஷ், ஜோதீஸ்வரன், ஆர்.வி. கெளசிகரம், ஜி. தீனு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் விழாக்குழு பொருளாளர் ஏ.பாலமுருகன் நன்றி கூறினார்.
- வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதிகளை சுற்றியுள்ள அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது.
முகாம் தொடங்கிய முதல் நாளான நேற்று ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பெருமாள்பேட்டை, கொத்தக் கோட்டை, நிம்மியம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முகாமினை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாவட்ட தொற்று நோயியலாளர், மாவட்ட உதவி திட்ட மேலாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- தூக்கில் பிணமாக கிடந்தார்
- சப்- கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்த பரிந்துரை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ராமர் கோவில் தெரு சேர்ந்தவர் சுந்தர். ஆம்பூர் தாலுகா அலுவலகம் அருகே கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி தரணி (வயது 23) திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் தரணி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணையில் கணவன் மனைவி இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
வாணியம்பாடி சப்- கலெக்டர் பிரேமலதா விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்;
ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அர விந்தன் (வயது 35). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது உறவினர் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பெரியாங்குப்பம் பகுதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நாய் குறுக்கே வந்தது.
இதில் நிலை தடுமாறி அருகே உள்ள கால் வாய் தடுப்புச்சுவரில் மோதி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்
- தென்னை மரத்தில் விஷ பூச்சிகள் கூடு கட்டியிருந்தது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் விஷ பூச்சிகள் கூடு கட்டி உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்களை விஷ வண்டுகள் அச்சு றுத்தி வந்தன. இதனையடுத்து முருகேசன் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சென்று தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீ பந்தம் மூலம் அழித்த னர். மேலும் நாட்டறம்பள்ளி அடுத்த தகரகுப்பம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவரது வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்றையும் தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரி டம் ஒப்படைத்தனர்.
- மேம்பால தடுப்புச்சுவரில் மோதி விபரீதம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரம் அடுத்த ஈ.பி. ஆபீஸ் திருமால் நகர் பகு தியை சேர்ந்தவர் செல்வதாஸ் என்பவரின் மகன் சந்தோஷ் (வயது 27), பெயிண்டர். இவரது மனைவி ரேகா.
இந்த நிலையில் சந்தோஷ் தனது மாமியார் வீடான பாச்சல் ஜெய்பீம் நகருக்கு மோட் டார் சைக்கிளில் சென்றார்.
பாச்சல் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள் ளானது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக் கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர், பின்னர் மேல் சிகிச் சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஜோலார் பேட்டை போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் எச்சரிக்கையால் அகற்றம்
- இளைஞர்கள் பேனரை அப்புறப்படுத்தினர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோனாமேடு பகுதியை சேர்ந்த கார்த்திக்- அனுஸ்ரீ ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.
அவர்களுடைய திருமணத்திற்காக மணமக்களின் நண்பர்கள் திருமண நாளிதழ் என்ற பெயரில் மணமகளின் மனதை திருடி காதலித்ததற்காக மணமகனுக்கு பெற்றோர்களால் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என்று பேனர் வைத்துள்ளனர்.
மேலும் அதில் பேனரை வைத்த அந்த பகுதி இளைஞர்கள் குறித்தும் அச்சடிக்கப்பட்டு பேனர் வைக்கப்ட்டு இருந்தது.
அந்த வழியாக செல்பவர்கள் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ள பேனரை பார்த்து, படித்து விட்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேனர் வைத்தவர்களை எச்சரிக்கை செய்தனர். உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர். இதனை அடுத்து அந்த பகுதி இளைஞர்கள் பேனரை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் அருகே உள்ள பலபநத்தம் கிராமம் பூசாரிவட்டம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன்( வயது 47). கூலி தொழிலாளி.
இவர் நேற்று மாலை வேலை முடிந்ததும் ஆலங்காயத்தில் இருந்து வீட்டிற்கு தனது பைக்கில் சென்றார். அப்போது நரசிங்கபுரம் கங்கையாம்மன் கோவில் அருகே சென்றபோது பைக் நிலைதடுமாறி சாலையின் ஓரம் உள்ள ஒரு புளிய மரத்தில் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் குமரேசன் பலத்த காயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் உடனடியாக குமரேசனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






