search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு
    X

    டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு

    • சாலையில் பேசிக்கொண்டே நடந்து சென்றார்
    • விநாயகர் ஊர்வலத்தில் பரிதாபம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பள்ளி தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 25). தொழிலாளி. இவர் நேற்று மாலை நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். சாலையில் பேசிக்கொண்டே தங்கராஜ் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக தங்கராஜ் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    அங்கு நின்றவர்கள் படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை தங்கராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×