என் மலர்
திருப்பத்தூர்
- ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓ.பி.எஸ். தரப்பு நகர செயலாளர் கோபி சங்கர் தலைமையில் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஓ.பி.எஸ். தரப்பு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு கலந்துகொண்டனர். இதில் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி 100 பேர் ஓ.பி.எஸ். அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில் நகர அவை தலைவர் சாஜாத் உசேன், சிறுபான்மை நகர செயலாளர் ஆதில் அஹமத், சிறுபான்மை அவைத் தலைவர் அத்தாவுல்லா, சிறுபான்மை துணை செயலாளர் நாசிர் அஹமத், மாவட்ட பிரதிநிதி சலீம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
- நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வலியுறுத்தினர்
- மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி, ஏரியூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இன்று மாலை ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு அப்பகுதி மக்கள் போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
அதன்படி ஏரியூர் கிராமத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடன நிகழ்ச்சி நடத்திக் கொள்ள தமிழ்நாடு போலீஸ்துறை இயக்குனரின் சுற்றறிக்கை படி வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமார் அனுமதி வழங்கினர்.
நடன நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிராம மக்கள் ஒன்று கூடி விறுவிறுப்பாக செய்தனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் நடன நாட்டிய நிகழ்ச்சி நடத்த கூடாது என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து போலீசார் ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்த தடை செய்யப் போவதாக அறிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று கூடி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் திரண்டனர். மேலும் ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசின ர். மேலும் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- 15 நாட்கள் நடக்கிறது
- திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரத்தில் பிரீடம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பில் நபார்டு வங்கி நிதி உதவியோடு திருப்பத்தூர் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பெண் விவசாயிகளுக்கு பாரம்பரிய தின்பண்டம் செய்வது குறித்து பயிற்சி வகுப்பு தொடங்கியது.
15 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பை திருப்பத்தூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பாஸ்கரன், வெங்களாபுரம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் கணேசன், திருப்பத்தூர் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை அலுவலர் எழிலரசி ஆகியோர் மானிய திட்டங்கள் குறித்து பற்றி விளக்கி பேசினார்.
முடிவில் பிரீடம் பவுண்டேஷன் இயக்குனர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
- 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை விடுதி வசதியுடன் கூடிய மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார்.
- மாணவிகளுக்கு தேவையான பொருட்கள், சான்றிதழ்கள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள மாடப்பள்ளி அண்ணாநகரை சேர்ந்த கணவன், மனைவி கூலி தொழில் செய்து வருகின்றனர். தம்பதிக்கு 3 மகள் மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகள் திருப்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 3-வது மகள் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் மது போதைக்கு அடிமையானார்கள்.
வீட்டில் குழந்தைகளுக்கு சரியாக சாப்பாடு கூட கிடைக்கவில்லை. மேலும் பிள்ளைகளுக்கு பள்ளி செல்வதற்கான சீருடை கூட இல்லை. இதனால் பள்ளிக்குச் செல்லாமல் மாணவிகள் வீட்டில் முடங்கினர்.
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாடபள்ளி அண்ணாநகரில் உள்ள தம்பதியின் வீட்டிற்கு சென்றார். கலெக்டர் வந்தபோது வழக்கம் போல கணவன், மனைவி இருவரும் போதையில் இருந்தனர்.
அவர்களுக்கு கலெக்டர் அறிவுரைகளை வழங்கினார். மேலும் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை விடுதி வசதியுடன் கூடிய மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி மாணவி அந்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். மேலும் அவரது தங்கையை அங்குள்ள தொடக்கப் பள்ளியில் மீண்டும் கலெக்டர் சேர்த்தார். இரு மாணவிகளும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.
அவர்களுக்கு தேவையான பொருட்கள், சான்றிதழ்கள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். போதையில் அடிமையான தம்பதியினருக்கு கடன் உதவி செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
அவர்கள் முதல் கட்டமாக குடிப்பழக்கத்தை மறக்க மறுவாழ்வு மையத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் போதையால் வீட்டில் முடங்கிய இரண்டு மாணவிகளை பள்ளியில் சேர்த்த கலெக்டருக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளி விடுதியில் சேர்க்கப்பட்ட மாணவி கூறுகையில்:-
எனது பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். நாளடைவில் அவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதனால் வீட்டில் எங்களுக்கு உணவு கூட கிடைக்கவில்லை. மேலும் பள்ளி செல்வதற்கான சீருடை இல்லை. இதுவரை எங்களுக்கு ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகியவை இல்லை. அதனால் பள்ளிக்கு செல்லாமல் நானும் எனது தங்கையும் வீட்டிலேயே முடங்கினோம்.
கலெக்டர் நடவடிக்கையால் தற்போது மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது பெற்றோர் மீண்டும் நல்வழிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு
- பூச்சி மருந்தை குடித்தார்
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த ஊசிதோப்பை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). விவசாயி. மனைவி திலகவதி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கணவனை பிரிந்து 2 ஆண்டுகளாக திலகவதி தனியாக வாழ்ந்து வந்தார்.
இதனால் சண்முகம் மன உளச்சலில் காணப்பட்டார். மனைவி பிரிந்த விரக்தியில் இருந்த சண்முகம் கடந்த 18-ந் தேதி பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் மயங்கி கிடந்த வரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சண்முகம் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விசாரணை
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஏ.கஸ்பா, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36), லாரி டிரைவர். இவரது மகள் கீதாபிரியா (16). இவர் தேவலாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் கீதாபிரியா நேற்று மாலை அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிலைகளுக்கு சிறப்பு பூஜை
- ஏரியில் பலத்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 15-ந் தேதி இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள், இளைஞர்கள் சார்பில் 686 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று திலகர் இந்து இளைஞர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு விழா குழு தலைவர் பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் வி .அன்பழகன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஆர்.சண்முகம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன்கொடி அசைத்து அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இதில் பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் எம். தீபா, பொதுச் செயலாளர் கவியரசு, அருள்மொழி,, பா.ஜ.க. நகர துணைத் தலைவர் ஆர். ரவி, வர்த்தக அணி நகர தலைவர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலகமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் ஏரியில் பலத்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.
அதேபோல் ஆம்பூர் கிருஷ்ணாபுரம், கஸ்பா, பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து முக்கிய சாலைகள் வீதியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் அறை மடுகு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏரியில் கரைக்கப்பட்டது.
- கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோனாமேடு பகுதியை நகரை சேர்ந்தவர் விமலா (வயது 45) அதே பகுதியில் வீட்டில் சமைத்து எடுத்து சென்று அருகில் ஓட்டல் கடை வைத்து விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது தீப்பற்றி படுகாயம் அமைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விமலா பரிதாபமாக இறந்தார்.
- எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல
- திருப்பத்தூர் கலெக்டர் பேச்சு
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்து மாணவிகள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கல்வி பயின்ற காலகட்டங்களில் காதலிப்பது மகிழ்ச்சியாக இருக்கும், புரிந்து கொண்ட பிறகு ஏன் நாம் இதை செய்தோம் என்று இருக்கும். அதன் பிறகு அதில் இருந்து வெளியே வருவது மிகவும் பிரச்சினைக்குரியது.
இதிலிருந்து வெளியே வர நமது பெற்றோர்களிடம் தெரிவித்து அந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவர முயல வேண்டும். மேலும் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனைகளாக இருந்தாலும் சரி அதனை பகிர்ந்து கொள்வதில் மிக முக்கியமானவர்கள் நமது பெற்றோர். பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுகின்ற பொழுது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்.
கண்ணாடி முன்பு நம்மை நாம் ரசிப்பது மட்டுமல்ல நமது தன்னம்பிக்கையையும் உணர முடியும். அனைவரும் அழகாக உடை அணிவதற்கு முக்கிய காரணம் நம்மை நாம் நம்பிக்கையாக வைத்துக் கொள்ள முடியும். வாழ்க்கையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர்தான் தற்கொலை செய்து கொள்வதில்லை.
தற்கொலை செய்து கொள்பவர் தற்கொலை செய்து கொள்வதன் மூலம் அடுத்த நபருக்கு தண்டனை கொடுப்பதாக நினைக்கிறார்கள், அது அப்படி அல்ல அந்த நபர் பிரச்சனை இத்துடன் முடிந்து விட்டது என்று அடுத்த வேலையை பார்த்து கொண்டு செல்வார்கள்.
எனவே இதற்கான தீர்வு தாய், தந்தையர் மற்றும் நண்பர்கள் மூலமாக தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி அடுத்த மேலூரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் நாயக்கனேரி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். குப்புசாமி தனது 3 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் குப்புசாமி நேற்று மாலை தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
இதனை கேட்டு பதறிப்போன அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது குப்புசாமி நாட்டு துப்பாக்கியால் தனக்கு தானே கழுத்தில் சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். துப்பாக்கி எப்படி அவருக்கு கிடைத்தது என விசாரணை நடத்தினர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நிலாவூரிலிருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது
- பஸ்சை உடனடியாக நிறுத்தி சாலையில் கிடந்த மரக்கிளைகளை அகற்றினர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி,ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு நிலாவூரிலிருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது நரியனேரி கூட்டு ரோடு பகுதியில் சாலையில் மரம் சாய்ந்து கிடந்தது.
இதனைக் கண்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தி சாலையில் கிடந்த மரக்கிளைகளை அகற்றினார். பின்னர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் வேரோடு சாய்ந்த மரத்தை முற்றிலுமாக அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
- பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
- போலீஸ் நிலையத்தில் புகார்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சின்னபள்ளிகுப்பத்தில் இலங்கை தமிழ் வாழ் மக்கள் குடியிருப்பு பகுதி உள்ளது.
இங்குள்ள கூலி தொழிலாளியின் 14 வயதுடைய மகள் அதே பகுதியில் 10- வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவி நேற்று காலை சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அவர் கிடைக்காததால் உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.






