search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupattur Collector"

    • 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை விடுதி வசதியுடன் கூடிய மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • மாணவிகளுக்கு தேவையான பொருட்கள், சான்றிதழ்கள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள மாடப்பள்ளி அண்ணாநகரை சேர்ந்த கணவன், மனைவி கூலி தொழில் செய்து வருகின்றனர். தம்பதிக்கு 3 மகள் மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகள் திருப்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 3-வது மகள் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் மது போதைக்கு அடிமையானார்கள்.

    வீட்டில் குழந்தைகளுக்கு சரியாக சாப்பாடு கூட கிடைக்கவில்லை. மேலும் பிள்ளைகளுக்கு பள்ளி செல்வதற்கான சீருடை கூட இல்லை. இதனால் பள்ளிக்குச் செல்லாமல் மாணவிகள் வீட்டில் முடங்கினர்.

    இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாடபள்ளி அண்ணாநகரில் உள்ள தம்பதியின் வீட்டிற்கு சென்றார். கலெக்டர் வந்தபோது வழக்கம் போல கணவன், மனைவி இருவரும் போதையில் இருந்தனர்.

    அவர்களுக்கு கலெக்டர் அறிவுரைகளை வழங்கினார். மேலும் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை விடுதி வசதியுடன் கூடிய மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதன்படி மாணவி அந்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். மேலும் அவரது தங்கையை அங்குள்ள தொடக்கப் பள்ளியில் மீண்டும் கலெக்டர் சேர்த்தார். இரு மாணவிகளும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்களுக்கு தேவையான பொருட்கள், சான்றிதழ்கள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். போதையில் அடிமையான தம்பதியினருக்கு கடன் உதவி செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    அவர்கள் முதல் கட்டமாக குடிப்பழக்கத்தை மறக்க மறுவாழ்வு மையத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் போதையால் வீட்டில் முடங்கிய இரண்டு மாணவிகளை பள்ளியில் சேர்த்த கலெக்டருக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளி விடுதியில் சேர்க்கப்பட்ட மாணவி கூறுகையில்:-

    எனது பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். நாளடைவில் அவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் வீட்டில் எங்களுக்கு உணவு கூட கிடைக்கவில்லை. மேலும் பள்ளி செல்வதற்கான சீருடை இல்லை. இதுவரை எங்களுக்கு ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகியவை இல்லை. அதனால் பள்ளிக்கு செல்லாமல் நானும் எனது தங்கையும் வீட்டிலேயே முடங்கினோம்.

    கலெக்டர் நடவடிக்கையால் தற்போது மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது பெற்றோர் மீண்டும் நல்வழிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு வாக்குசாவடிகளில் பணியில் இருக்க வேண்டிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இல்லாதது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • இனிவரும் நாட்களில் நடக்கும் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் பணிபுரியாத வாக்குசாவடி நிலை அலுவலர்கள், மைய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று தேர்தல் சிறப்பு சுருக்க திருத்தம் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்தது.

    இதில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீர் சோதனை மேற்கொண்டார்.

    அப்போது பல்வேறு வாக்குசாவடிகளில் பணியில் இருக்க வேண்டிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இல்லாதது தெரியவந்தது.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து வாணியம்பாடி நகராட்சியில் அனிமேட்டராக பணிபுரிந்து வந்த கலைவாணி, ஆம்பூர் தொகுதியில் பணியில் இல்லாத சுவாதிலட்சுமி, கவிதா, பத்மாவதி, மாதனூர் கிராம உதவியாளர் வசந்தி ஆகியோரை சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    அதேபோல் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அங்கன்வாடி பணியாளர்களான புள்ளானேரி எஸ்.கீதா, ஏலகிரி விமலா, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி குனிச்சி மோட்டூர் ராணி, திருப்பத்தூர் டவுன் சத்துணவு அமைப்பாளர் சிவானந்தம், வசந்தி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இதுதவிர ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பூரிகா மானிமிட்டா அங்கன்வாடி பணியாளர் தீபா, திருப்பத்தூர் தொகுதியில் சத்துணவு அமைப்பாளர்களான சேவியர் புஷ்பராஜ், ஆரோக்கியதாஸ் ஆகியோர் கலெக்டர் அமர்குஷ்வாஹா பரிந்துரையின்பேரில் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இனிவரும் நாட்களில் நடக்கும் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் பணிபுரியாத வாக்குசாவடி நிலை அலுவலர்கள், மைய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×