என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள பாம்பு பிடிப்பட்டது
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே வீட்டிற்கு நுழைய முயன்ற 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நாட்டறம்பள்ளி அருகே வேட்டப்பட்டு பகுதியில் வசித்து வரும் பெருமாள் இவரது மகன் ஆனந்த் என்பவரது வீட்டிற்குள் பாம்பு நுழைய முயன்றது ஆனந்த் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது வீட்டின் வரண்டாவில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருப்பதை கண்டனர். பாம்பு பிடிக்கும் கருவி மூலம் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு உயிருடன் பிடித்தனர். திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
Next Story






