search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவி தூக்கில் பிணமாக மீட்பு
    X

    கோப்புப்படம்

    பிளஸ்-2 மாணவி தூக்கில் பிணமாக மீட்பு

    • போலீசார் விசாரணை
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஏ.கஸ்பா, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36), லாரி டிரைவர். இவரது மகள் கீதாபிரியா (16). இவர் தேவலாபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் கீதாபிரியா நேற்று மாலை அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×