search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ அரசமர விநாயகர் சதுர்த்தியையொட்டி நலத்திட்ட உதவி
    X

    ஸ்ரீ அரசமர விநாயகர் சதுர்த்தியையொட்டி நலத்திட்ட உதவி

    • 1000 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினர்
    • பொதுமக்கள் எராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் ஸ்ரீ அரசமர விநாயகர் சதுர்த்தி விழாக்குழு அறக்கட்டளை சார்பில் 26-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதன் தலைவர் கே.மோகன் தலைமையில் நடைபெற்றது.இதில் உறுப்பினர்கள் வி.எஸ்.சரவணன், ஏ.ஐய்ப்பன், செயலாளர் எம்.விஜய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம். நாகேந்திர குமார், நகரமன்ற உறுப்பினர்கள் பா.சாந்தி பாபு, மா.பா சாரதி, சித்ரா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக நகர கூட்டுறவு வங்கி தலைவரும் நகர திமுக செயலாளருமான வி.எஸ்.சாரதி குமார் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கர சைக்கிள், ஏழை பெண்கள் 5 பேருக்கு தையல் இயந்திரங்கள், 1000 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிவப்பிர காசம், ஆர்.டி.கிரி, தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.சிரஞ்சீவி, விழாக்குழு பொருளாளர் எஸ்.கணேசன், துணை தலைவர் ஆர். ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் நரேஷ், ஜோதீஸ்வரன், ஆர்.வி. கெளசிகரம், ஜி. தீனு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் விழாக்குழு பொருளாளர் ஏ.பாலமுருகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×