என் மலர்
உள்ளூர் செய்திகள்

வைட்டமின்- ஏ திரவம் வழங்கும் முகாம்
- வட்டார மருத்துவ அலுவலர் ஆய்வு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதிகளை சுற்றியுள்ள அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது.
முகாம் தொடங்கிய முதல் நாளான நேற்று ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பெருமாள்பேட்டை, கொத்தக் கோட்டை, நிம்மியம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முகாமினை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாவட்ட தொற்று நோயியலாளர், மாவட்ட உதவி திட்ட மேலாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story






