என் மலர்
தென்காசி
- மர்ம நபர் அய்யாகுட்டியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
- கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையம் அருகே உள்ள தெருவில் வசித்து வருபவர் அய்யாகுட்டி(வயது 55). இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கனக லெட்சுமி. இவர்களுக்கு ஆவுடை செல்வி என்ற மகள் உள்ளார். இவர் பட்டமேற்படிப்பு முடித்துள்ளார்.
இந்நிலையில் ஆவுடைச்செல்விக்கு வருகிற 23-ந்தேதி சிவகிரி அருகே உள்ள ராயகிரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கான பணிகளை அய்யாகுட்டி செய்து வந்த நிலையில், நேற்று இரவு வரை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு அவர் திருமண அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு வீடு திரும்பினார்.
சுமார் 11 மணி அளவில் அவர் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். அப்போது வீட்டுக்கு வெளியே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த ஆவுடை செல்வி, கதவை அடைக்க மறந்து தூங்க சென்றுவிட்டார். கனக லெட்சுமியும், ஆவுடை செல்வியும் மற்றொரு அறையில் தூங்க சென்ற நிலையில் அய்யாகுட்டி மட்டும் தனி அறையில் படுத்திருந்தார்.
அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த கத்தரிக்கோலால் அய்யா குட்டியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். உடனே அய்யாகுட்டி வலி தாங்க முடியாமல் அலறி துடித்த நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் மகள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் அய்யாகுட்டியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட அய்யாகுட்டி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யாகுட்டியை கொலை செய்த வாலிபர் யார்? எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி தப்பி ஓடிய மர்ம நபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
- நிகழ்ச்சியை காண பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிர மணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாரா தனையும், மாலையில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை காண பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- சித்ரா 10-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- விஷப்பூச்சி கடித்ததால் சித்ரா வலி தாங்க முடியாமல் அலறினார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூரை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி. இவரது மகள் சித்ரா(வயது 17). இவர் 10-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்றிரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு சித்ரா தனது பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 1 மணிக்கு அவரை விஷப்பூச்சி ஒன்று கடித்தது. உடனே எழுந்த சித்ரா வலி தாங்க முடியாமல் அலறினார். மேலும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசிக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல்சிகிச்கை க்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போட்டியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
தென்காசி:
தேசிய கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பால் இந்தியா ஸ்வச் பாரத் என்னும் தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டி, கட்டுரை போட்டி, வண்ணம் தீட்டுதல் போட்டி, படம் வரைதல் போட்டி மற்றும் போஸ்டர் தயாரித்தல் போன்ற பல்வேறு வகையான போட்டிகளை இந்தியா முழுவதும் நடத்தியது.
பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இதில் 5-ம் வகுப்பு மாணவன் அபினவ் ஜெய் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 7-ம் வகுப்பு மாணவன் முஹம்மது சுலை மான் கையெழுத்து போட்டி யிலும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் 12 பேர் கையெழுத்து போட்டியிலும், 3 பேர் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 3 பேர் கட்டுரை போட்டியிலும் பள்ளி அளவில் முதலிடம் பெற்றனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளி தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.
- விழாவையொட்டி தினமும் அன்னதானம் மலைக்கோவிலில் வழங்கப்பட்டது.
- சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 13 -ந்தேதி கந்த சஷ்டி விழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை வழிபாடு, சுவாமி சப்பர வீதிஉலா வருதல் நடைபெற்றது. தினமும் அன்னதானம் மலைக்கோவிலில் வழங்கப்பட்டது.
கந்த சஷ்டி முக்கிய நாளான நேற்று மாலையில் சூரனை வதம் செய்வதற்காக குதிரை வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்னர் நகரின் மேலரத வீதியில் முதலில் யானைமுகம் கொண்ட சூரனையும், பின்னர் சிங்கமுகம் கொண்ட சூரனையும், இறுதியில் ஏழாம் திருநாள் மண்டபம் முன்பாக சூரபத்மனையும் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். சூரசம்ஹாரம் நிறைவு பெற்றதும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் என்ற சின்னத்தம்பியார் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
இதபோல் சிவகிரி அருகே கூடலூர் நாதகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில், தென்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆய்வின்போது உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், குறைகளை கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.
- கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ.விடம் ரூ.5 லட்சம் மதிப்பில் 2 கருவிகளையும் வாங்கித் தருமாறு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் கோரிக்கை விடுத்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கடையநல்லூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு, பெண்கள் வார்டு மற்றும் குழந்தைகள் வார்டுகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. விடம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு பாய்ல்ஸ் அப்பாரட்டஸ் என்ற கருவியும், ஸ்கேன் எடுப்பதற்கு அல்ட்ரா சோனோகிராம் அப்டாமன் என்ற கருவியும் அவசரமாக தேவை ப்படுவதால் ரூ.5 லட்சம் மதிப்பில் 2 கருவிகளையும் வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்தார்.
அந்த கருவிகள் வாங்குவதற்கு நடவடி க்கை எடுப்பதாக கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். ஆய்வின் போது, தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் கணேசன் மற்றும் அரசு மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளா்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
- மருத்துவர் அக்கினோ விமல் நவீன பாடத்திட்டமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் போதகர் ஜான் கென்னடி யின் சிறப்பு பிரார்த்தனையுடன் ஆவுடையானூர் மருத்துவர் சி. தர்மராஜ் பள்ளிக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தென்காசி கலெக்டர் ரவிச்சந்திரன் பள்ளியின் கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் கலெக்டர் ரவிச்சந்திரன், மருத்துவர்கள் அன்புமலர், மதுபாலா, ராஜேஸ்வரி, தார்ஷினி சினோலா விமல் மற்றும் பள்ளியின் செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து சாரா லாசர் பிரார்த்தனை செய்தார். பள்ளியின் முதல் தளம் போதகர் ஜெப ரெத்தினம் , இரண்டாவது தளம் போதகர் கிங்ஸ்லி ஜான் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
போதகர் ஜெயஹர் தாமஸ் பள்ளியின் கலைய ரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தை பிரார்த்தனை யுடன் தொடங்கி வைத்தார். பள்ளியின் இயக்குநர் மருத்துவர் பிராம்டன் ரெத்தின பெல் வரவேற்றார். மருத்துவர் திருவன், மருத்துவர் தர்மராஜை அறிமுகப்படுத்தி னார். ராம்ஜி, மருத்துவர் அக்கினோ விமல், ஐ.எப்.எஸ், நார்வே ராஜ்ஜியத்திற்கான இந்திய அரசு தூதுவரை அறி முகப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர் தென்காசி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதை தமது சிறப்புரையில் குறிப்பிட்டார். மருத்துவர் அக்கினோ விமல் நவீன பாடத்திட்டமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார். முக்கியப் பிரமுகர்களாக கடையநல்லூர் எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா, குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதர பாண்டியன், ஆயிரப்பேரி ஊராட்சி தலைவர் சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவை பள்ளி தாளாளர் ஆர்.ஜே.வி.பெல், பள்ளி செயலாளர் கிரேஸ் கஸ்தூரி பெல், பள்ளி இயக்குநர் மருத்துவர் பிராம்டன் ரெத்தின பெல், பள்ளி அறங்காவலர் தார்ஷினி ஷினோலா, டாக்டர் பபிதா ஆகியோர் பள்ளி திறப்பு விழாவை ஒருங்கிணைத்தனர். முடிவில் பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி. பெல் நன்றி கூறினார்.
- முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு தாது உப்புக்கள் வழங்கப்பட்டது.
- விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து அவைகளுக்கு தடுப்பூசி, மருந்துகள் பெற்று சென்றனர்.
கடையம்:
கடையம் யூனியனுக்குட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர் கிருஷ்ணராஜ், உதவியாளர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு தாது உப்புக்கள் வழங்கினர். இதில் துணைத்தலைவர் ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் விவசாயிகள் பலர் தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து அவைகளுக்கு தடுப்பூசி போட்டு, மருந்துகள் பெற்று சென்றனர்.
- துறவி கொலையில் முகமது அலி, சுடலைக்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
- கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரன்படி கொலையாளிகள் 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி:
தென்காசியில் தென்பழனி ஆண்டவர் கோவில் பின்புறம் உள்ள படித்துறையில் துறவி ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பான விசாரணையில் முகமது அலி மற்றும் சுடலைக்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரன்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கொலையாளிகள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைத்தார்.
- பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
- குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதாகி குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்திற்கு ஏராளமான கிராம பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மட்டும் இன்றி பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய காய்கறி சந்தைக்கு உள்ளூர், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதியில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள், விவசாயிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
சுத்திகரிப்பு எந்திரம்
இந்நிலையில் பஸ் நிலையத்தில் புதிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக பழுதாகி குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது. இலவச கழிப்பிட கட்டிடம் பழுது பார்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டு அதுவும் மூடப்பட்டு அருகில் இருக்கும் கட்டண கழிப்பிடம் செல்லும் நிலையில் அதுவும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருகிறது.
மழைக்காலங்களில் பஸ் நிலையத்தினுள் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிப்பதோடு குப்பைகள் அகற்றப்படாமலும், மதுக்குடிப்போரின் கூடாரமாகவும் பஸ் நிலையம் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.
பயணிகள் கோரிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் புகார் செய்தும், அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தி அங்கு குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வள்ளியம்மாள் புரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கினார்.
- விழாவில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார்.
கடையம்:
கடையம் யூனியன் மடத்தூர் ஊராட்சி க்கு உட்பட்ட வள்ளியம்மாள் புரத்தில் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கினார். அதன் திறப்பு விழா நடைபெற்றது. மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார்.
இதில் மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் கணபதி, மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாநில போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மதுரை, ஐந்தாம் கட்டளை பஞ்சா யத்து தலைவர் முப்புடாதி பெரியசாமி, பொ ட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், மடத்தூர் பஞ்சா யத்து துணை தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பயணியர் விடுதி முன்பு தொடங்கிய ஊர்வலம் சங்கரன்கோவில் தேரடி திடலில் முடிவு பெற்றது.
- கூட்டத்தில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் அனைத்து கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. பயணியர் விடுதி முன்பு தொடங்கிய ஊர்வலம் சங்கரன்கோவில் தேரடி திடலில் முடிவு பெற்றது. இதனைத் தொடர்ந்து மவுன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி துரை, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகரச் செயலாளர் பிரகாஷ், ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளர் ரத்தினவேல் குமார், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மருத்துவ அணி செயலாளர் திவான் மைதீன் உள்ளிட்ட பலர் அஞ்சலி உரையாற்றினர்.
கூட்டத்தில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், ஆதிதிராவிட அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகம்மது ஹக்கீம், ஒன்றிய செயலாளர் சசி முருகன், தே.மு.தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அயூப்கான், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தைச் சேர்ந்த செல்வின், மதியழகன், செந்தில் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.






