search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் தி.மு.க. இளைஞரணி வாகன பேரணிக்கு வரவேற்பு
    X

    பாவூர்சத்திரத்தில் தி.மு.க. இளைஞரணி வாகன பேரணிக்கு வரவேற்பு

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சுரண்டையில் தொடங்கிய பேரணி பாவூர்சத்திரம் வருகை தந்தது.
    • கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தென்காசி:

    தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ந் தேதி நடை பெறுகிறது. இதனையொட்டி இளை ஞரணி நிர்வாகிகள் கன்னியாகுமரியில் இருந்து சேலம் வரை 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் திட்டமிட்டு இரு சக்கர வாகன பேரணியை நடத்தி வருகின்றனர். இந்த பேரணியானது தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு வருகை தந்தது.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் சுரண்டையில் தொடங்கிய பேரணி பாவூர்சத்திரம் வருகை தந்தது.

    பேரணிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், கல்லூரணி ஊராட்சி தலைவர், குல சேகரப்பட்டி மதிச்செல்வன், நிர்வாகிகள் குருசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×