search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சூரசம்ஹார விழா
    X

    செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சூரசம்ஹார விழா

    • சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
    • நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள குலசேகரநாதர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சஷ்டியை முன்னிட்டு காலை 10 மணிக்கு சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து மாலை வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி இடம்பெற்றது.

    அதனைத்தொடர்ந்து சுப்பிரமணியர் ஆனைமுகம், சிங்கமுகம், மகாசூரன் ஆகிய முகங்களை கொண்ட சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 முக்கிய பகுதிகளில் நடந்த இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

    Next Story
    ×