search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்
    X

    பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்

    • விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
    • திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜர்நகர் வென்னிமலை வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதையொட்டி அன்று காலையில் கும்பஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனையும் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று இரவு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×