என் மலர்tooltip icon

    தேனி

    • கள்ளக்காதலை தட்டிகேட்ட மனைவியை கணவர் மற்றும் கள்ளக்காதலி ஆகியோர் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கணவரை கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஷோபனா(42). இவர் வேலூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் தங்கபாண்டியன் மற்றும் குழந்தைகளுடன் தேவாரத்தில் வசித்து வருகிறார். இதனிடையே தங்கபாண்டியனுக்கும் , கேரளமாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சதீஸ் மனைவி ரமா(33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

    ஷோபனா வேலை விசயமாக வெளியூரில் இருப்பதால் ரமாவுடன் தங்கபாண்டியன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இதுகுறித்து ஷோபனாவுக்கு தெரியவரவே உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தங்கபாண்டியனை வரவழைத்து இனிமேல் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அதன்பிறகும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனை தட்டிகேட்ட ஷோபனாவை தங்கபாண்டியன் மற்றும் ரமா ஆகியோர் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர். படுகாயமடைந்த ஷோபனா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ேசர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து தேவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குபதிவு செய்து தங்கபாண்டியனை கைது செய்தார்.

    • நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் விரைவில் நீர்மட்டம் 122 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி முல்லை ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.60 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விரைவில் நீர்மட்டம் 122 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 2157 கன அடியாக உள்ளது. திறப்பு 1022 கன அடி. இருப்பு 2945 மி.கன அடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.98 அடியாக உள்ளது. நீர்வரத்து 509 கன அடி. மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1862 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது. அணைக்கு 11 கன அடி நீர் வருகிறது. இருப்பு 405. 22 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 49.43 மி. கன அடியாக உள்ளது.

    பெரியாறு 14.2, தேக்கடி 9, கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • அவரைச்செடிகளில் பூக்கள் மட்டுமே அதிக அளவு பூத்த நிலையில் காய்கள் சரிவர காய்க்கவில்லை. பெரும்பாலான காய்கள் மஞ்சள் நிறத்தில் அதிகமாக புழு க்கள் கொண்டதாக இருந்தது.
    • வேளாண்துறை அதிகாரிகள் இப்பகுதி விவசாய நிலங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது பொட்டிபுரம் கிராமம். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தேர்வு செய்ய ப்பட்ட இடம் என்பதன் மூலம் உலகளவில் இந்த கிராமம் பிரசித்தி பெற்றது. முற்றிலும் விவசாயத்தைச் சார்ந்தே உள்ள இப்பகுதியில் தற்போது அவரைக்காய் அதிக அளவில் பயிரிட ப்பட்டுள்ளது.

    கடந்த முறை நடப்பட்ட அவரை விதைகள் மூலம் உருவாக்கப்பட்ட அவரைச்செடிகளில் பூக்கள் மட்டுமே அதிக அளவு பூத்த நிலையில் காய்கள் சரிவர காய்க்கவில்லை. பெரும்பா லான காய்கள் மஞ்சள் நிறத்தில் அதிகமாக புழு க்கள் கொண்டதாக இருந்தது.

    இதனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லை. இங்கு பறிக்கப்படும் காய்கள் தரம் பிரிக்கப்பட்டு தேவாரம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மஞ்சள் பூத்த காய்கள் பறிக்காமல் செடியிலேயே விடப்படுகிறது.

    மேலும் நோய் தாக்கம் ஏற்பட்ட காய்கள் விற்பனை யாகாமல் சாலையோரம் கொட்டப்பட்டு மாடுகளுக்கு இறையாக மாறியுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவரைக்காய் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.18 முதல் ரூ.25 வரை மட்டுமே வியாபாரி களால் வாங்கப்படுகிறது.

    விளைச்சல் பாதிப்பு குறித்து தேனி மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக விவசாயிகள் புகார் அளித்தனர். இதனையடுத்து ஆர்.டி.ஓ. தலைமையில் ஆய்வுக்குழுவை நேரில் அனுப்பி விசாரணை நடத்தவும், நிவாரணம் பெற்றுத் தருவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்த னர்.

    ஆனால் இது வரை விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காத தால் மிகுந்த மனவேதனை யடைந்துள்ளனர். எனவே வேளாண் துறை அதிகாரி கள் இப்பகுதி விவசாய நிலங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பைக் விவசாயி மீது மோதியதில் செல்வம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). விவசாயி. இவர் தனது மனைவியுடன் சொக்கத்தேவன் பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது மீனாட்சிபுர த்தைச் சேர்ந்த செந்தூர் பாண்டி என்பவர் ஓட்டி வந்த பைக் இவர் மீது மோதியதில் செல்வம் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தனது மனைவி கண் முன் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மாமனார் ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் கண்ட மனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கம்பம் வடக்கு போலீசார் கே.கே.பட்டி, நாககன்னி யம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
    • கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.

    கம்பம்:

    கம்பம் வடக்கு போலீசார் கே.கே.பட்டி, நாககன்னி யம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது கோம்பை ரோடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவபிரகாஷ் (வயது31) மற்றும் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்த ராஜாங்கம் மகன் ஜெயச்சந்திரன் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆண்டிபட்டி போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்ட போது ராஜகோபாலன்பட்டி மேலத்தெருவை சேர்ந்த சின்னச்சாமி மகன் நாகராஜ் (21) பையில் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • கரட்டுப்பட்டி மற்றும் சண்முகசுந்தராபுரம் ஊராட்சி எஸ்.ரெங்கநாரதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் கலெக்டர் பார்வையாளராக கலந்து கொண்டார்.
    • ‘எல்லாருக்கும் எல்லாம்”கிடைத்திட வேண்டும் என்ற மையக் கருத்துடன் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள கோவில்பட்டி ஊராட்சி கரட்டுப்பட்டி மற்றும் சண்முகசுந்தராபுரம் ஊராட்சி எஸ்.ரெங்கநாரதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் கலெக்டர் ஷஜீவனா பார்வையாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கிராம சபை கூட்டத்தின் நோக்கம் மக்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை பூர்த்தி செய்வதற்கும், ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் விவாதித்து மக்களின் முழு ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி அதனை செயல்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 'எல்லாருக்கும் எல்லாம்"கிடைத்திட வேண்டும் என்ற மையக் கருத்துடன் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.

    இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்,

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், 2023-24 ம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஆற்றிய உரையினை மக்களுடன் இணைந்து கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார்.

    • தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசாா ரோந்து சென்றனர்.
    • அப்போது அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரம் போலீசார் வெங்கலாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற பாண்டி முருகன் (வயது51) என்பவரை கைது செய்து 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் வடபுதுபட்டி பகுதியில் வீட்டின் அருகே மது விற்ற பாண்டி (49) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அல்லிநகரம் எஸ்.என்.ஆர். சந்திப்பு அருகே உள்ள கழிப்பறை பகுதியில் மது விற்ற பிரசாத் (20) என்பவரை கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிபட்டி போலீசார் குமராபுரம் மயான பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற கார்த்திக் (27) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கடமலைக்குண்டு போலீசார் உப்போடை பாலம் அருகே ரோந்து சென்றபோது மது விற்ற பாண்டியன் (39) என்பவரை கைது செய்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கண்டமனூர் போலீசார் ஜல்லிக்கட்டு பிரிவு சாலையில் ரோந்து சென்றபோது மது விற்ற வேலுச்சாமி (42) என்பவரை கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கோம்பை ேபாலீசார் பண்ணைபுரம்- பல்லவராயன்பட்டி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடையில் மது விற்ற ஈஸ்வரன் (51) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியை முருகன் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்து செஸ்போர்டு தருவதாக கூறியுள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது மனைவி தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேவையான கேரம், செஸ் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வீட்டில் வைத்திருந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியை முருகன் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்து செஸ்போர்டு தருவதாக கூறியுள்ளார். பின்னர் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கேட்ட போது, முருகன் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறினார். இதனையடுத்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மையான பாரதம் சேவா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீமாதவ சேவா மையம் மற்றும் மலை ஆர்மி கோச்சிங் சென்டர், பாய்ஸ்,கோர்ஸ் கிளப் இணைந்து தூய்மையான பாரதம் சேவா நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.

    பின்னர் தலைமை டாக்டர் சிவக்குமார், அரசு டாக்டர் நீதிமன்னன் தலைமையில் மலை கோச்சிங் சென்டர் கொடியரசன், ஸ்ரீமாதவ சேவா மைய பொறுப்பாளர் , தூய்மை பாரதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஸ்ரீமாதவ சேவா மையத்தின் மாவட்ட, நகர மற்றும் இந்துமுன்னணி, பா.ஜ.க. பொறுப்பாளர்கள் மற்றும் 100-க்கும்மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • நேற்று 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை அணையில் இருந்து 933 கன அடி வெளியேற்றப்படுகிறது.
    • பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து வரும் தமிழக - கேரள எல்லை வனப்பகுதிகளிலும், கேரளாவின் உள் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று முன்தினம் வினாடிக்கு 822 கன அடி நீர் வந்த போது அணையின் நீர் மட்டம் 119.65 அடியாக இருந்தது. நேற்று வினாடிக்கு 1708 கன அடியாக இருந்த நீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் 120.25 அடியாக உயர்ந்தது. இன்று காலை அணைக்கு 2593 கன அடி நீர் வருகிறது.

    இதனால் அணையின் நீர் மட்டம் 121.20 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை அணையில் இருந்து 933 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2886 மி.கன அடியாக உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நீர் திறப்பு அதிகரிப்பின் காரணமாக பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    71 அடி உயரமுள்ள வைகை அணை நீர் மட்டம் 48.69 அடியாக உள்ளது. நீர் வரத்து 139 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 1826 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.50 அடி. வரத்து 11 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 90.20 அடி. வரத்து 5 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 49.43 மி.கன அடி.

    பெரியாறு 49.4, தேக்கடி 21.6, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 2.6, சண்முகாநதி அணை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் சரியான முறையில் வந்து சேரவில்லை.

    சின்னமனூர்:

    தேனி மாவட்ட ஜெய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் சின்னமனூர் ராமகிருஷ்ண சேவாஸ்ரமம் மடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் சரியான முறையில் வந்து சேரவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நிறுவனதலைவர் ரவி தலைமை தாங்கினார். சுமார் 60க்கும் மேற்பட்டோர்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களது குறைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில், தேனி மாவட்ட த்தில் சிறப்பு பருவமாக நெற்பயிருக்கும், ராபி பருவ பயிர் மக்கா ச்சோளத்திற்கும் பிரதம மந்திரி பயிர் கா ப்பீட்டுத் திட்டம் செயல்படு த்தப்பட உள்ளது.
    • இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விருப்பத்தின் அடிப்படை யில் பதிவு செய்யப்படுவர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில், சம்பா நெற்பயிர் மற்றும் ராபி பருவ மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் புதுப்பிக்க ப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கேட்டு க்கொண்டுள்ளார்.

    பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்களால் எதிர்பா ராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்ப ங்களை கடை பிடிப்பதை ஊக்குவிப்பதற்காகவும் தொடர்ந்து செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில், தேனி மாவட்ட த்தில் சிறப்பு பருவமாக நெற்பயிருக்கும், ராபி பருவ பயிர் மக்கா ச்சோளத்திற்கும் பிரதம மந்திரி பயிர் கா ப்பீட்டுத் திட்டம் செயல்படு த்தப்பட உள்ளது.

    இதன்படி நடப்பு ஆண்டில் தேனி மாவட்ட த்தில் சம்பா பருவத்தில் நெல் பயிருக்கு 14 பிர்க்காக்கள் மற்றும் மக்காச்சோளப் பயிருக்கு 7 பிர்க்காக்கள் கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விருப்பத்தின் அடிப்படை யில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், பொது சேவை மையங்கள் மூலமாகவும், விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர கடைசி நாள் நவம்பர் 15-ந் தேதி மற்றும் மக்காச்சோள பயிருக்கு சேர கடைசி நாள் டிசம்பர் 30-ந் தேதி ஆகும்.

    நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.528.75 மற்றும் மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.429 பிரிமீயமாக செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்ப த்துடன் பதிவு கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டுத் தொகையை செலுத்திய பின்னர் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.

    இத்திட்டம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளா ண்மை விரிவாக்க மையத்தி ல் உள்ள அலுவலர்களை அணுகி தெரிந்து கொ ள்ள லாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்து ள்ளார்.

    ×