search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
    X

    கோப்பு படம்

    தேனி அருகே கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

    • போலீசார் கோட்டூர் காலனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
    • கஞ்சா கடத்தி வந்த 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் தலைமையிலான போலீசார் கோட்டூர் காலனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது வீரபாண்டியைச் சேர்ந்த சுபாஷ்குமார் (வயது 21), சின்னமனூரைச் சேர்ந்த முனீஸ்வரன் (19) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் 320 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்தனர்.

    போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வயல்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×