search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்ட ஊர்காவல்படை பணிக்கு 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் -எஸ்.பி தகவல்
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்ட ஊர்காவல்படை பணிக்கு 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் -எஸ்.பி தகவல்

    • தேனி மாவட்ட ஊர்காவல் படையில் காலி யாக உள்ள பணியிடங்க ளுக்கு ஆண், பெண்கள் வருகிற 11-ந்தேதிக்குள் விண்ணப் பிக்கலாம்.
    • நாள் ஒன்றுக்கு ரூ.560வீதம் 5 நாட்களுக்கு ரூ.2800 ஊதியமாக வழங்கப்படும்.

    தேனி:

    தேனி மாவட்ட ஊர்காவல் படையில் காலி யாக உள்ள பணியிடங்க ளுக்கு ஆண், பெண்கள் வருகிற 11-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு பிரவீன் உமேஷ்டோ ங்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது,

    ஊர்காவல் படை பணிக்கு 20 வயது நிறைவடைந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வு அல்லது தோல்வி அடைந்த சமூகசேவையில் ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்க லாம். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். பணியில் சேர்ந்தவர்களுக்கு மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்க ப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.560வீதம் 5 நாட்களுக்கு ரூ.2800 ஊதியமாக வழங்க ப்படும். தகுதியுள்ளவர்கள் தேனி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் ஊர்காவல்படை அலுவலக த்தில் இன்று மற்றும் நாளை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சான்றிதழ்களின் நகலுடன் வட்டார தளபதி, மாவட்ட ஊர்காவல்படை அலுவல கம், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முதல்தளம் என்ற முகவரிக்கு வருகிற 11-ந்தேதி க்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    Next Story
    ×