என் மலர்tooltip icon

    தேனி

    • மயிலாடும்பாறை நரியூத்து கிராமத்தில் வருகிற 11-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
    • பல்வேறு குறைகளுக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறை நரியூத்து கிராமத்தில் வருகிற 11-ந் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    ஆண்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேசன் அட்டை, விபத்து நிவாரணம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, விவசாயம் மற்றும் போக்குவரத்து துறை தொடர்பாக மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • உச்சத்தில் விற்ற தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது தக்காளி வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி யுள்ளது.
    • போக்குவரத்து செலவுக்கு கூட விலை கிடைக்காததால் செடியிலேயே பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை 1கிலோ ரூ.200க்கு மேல் விற்பனையானது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு ரேசன் கடை மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்க நடவடிக்கை எடுத்தது. சில வியாபாரிகள் தக்காளி விற்றே லட்சாதிபதி ஆனார்கள். ஆனால் தற்போது விலை கடுமையாக சரிந்துள்ளது தக்காளி வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி யுள்ளது.

    தேனி மாவட்டம் போடி அருகே ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் தக்காளி விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்தனர். ஆனால் வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.உரம், பூச்சி மருந்து பறிப்பு கூலி, போக்குவரத்து செலவுக்கு கூட விலை கிடைக்காததால் செடியிலேயே பறிக்காமல் விட்டு விடுகின்றனர்.

    இதனால் ரூ.200க்கும் மேல் விற்ற தக்காளி தற்போது யாரும் வாங்க முன்வராத நிலையில் செடியிலேயே அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேனி மாவட்ட ஊர்காவல் படையில் காலி யாக உள்ள பணியிடங்க ளுக்கு ஆண், பெண்கள் வருகிற 11-ந்தேதிக்குள் விண்ணப் பிக்கலாம்.
    • நாள் ஒன்றுக்கு ரூ.560வீதம் 5 நாட்களுக்கு ரூ.2800 ஊதியமாக வழங்கப்படும்.

    தேனி:

    தேனி மாவட்ட ஊர்காவல் படையில் காலி யாக உள்ள பணியிடங்க ளுக்கு ஆண், பெண்கள் வருகிற 11-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு பிரவீன் உமேஷ்டோ ங்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது,

    ஊர்காவல் படை பணிக்கு 20 வயது நிறைவடைந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வு அல்லது தோல்வி அடைந்த சமூகசேவையில் ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்க லாம். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். பணியில் சேர்ந்தவர்களுக்கு மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்க ப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.560வீதம் 5 நாட்களுக்கு ரூ.2800 ஊதியமாக வழங்க ப்படும். தகுதியுள்ளவர்கள் தேனி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் ஊர்காவல்படை அலுவலக த்தில் இன்று மற்றும் நாளை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சான்றிதழ்களின் நகலுடன் வட்டார தளபதி, மாவட்ட ஊர்காவல்படை அலுவல கம், தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முதல்தளம் என்ற முகவரிக்கு வருகிற 11-ந்தேதி க்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    • அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி வருகிற 7ந் தேதி காலை 6.00 மணிக்கு அரண்மனைபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து நடைபெறவுள்ளது.
    • மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர்களிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் விளையாட்டுத்துறையின் சார்பில் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி வருகிற 7ந் தேதி காலை 6.00 மணிக்கு அரண்மனைபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து நடைபெறவுள்ளது.

    இப்போட்டியில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 8 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ தூரமும் 25 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 10 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ தூரமும் போட்டி நடைபெற உள்ளது.

    ஓட்டப்போட்டியில் பங்குபெறும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்து தரவேண்டும்,

    மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர்களிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும். ஆதார் கார்டு, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வருதல் வேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது பிறப்புச்சான்றிதழ், ஆதார் கார்டு நகல் கொண்டு வருதல் வேண்டும்.

    இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தை முதல் பக்கம் நகல் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.

    எனவே போட்டியில் கலந்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்திட மற்றும் வயதுச்சான்றிதழ் சரிபார்ப்பதற்கு நாளை மாலை 6.00 மணிக்குள் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • நீர்வரத்து 915 கனஅடியாக நேற்று இருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 50 அடியை எட்டியது.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.75 அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தென்மேற்குபருவமழை தொடங்கி 3 மாதங்கள் ஆன நிலையில் தேனி மாவட்டத்தில் போதுமான மழை பெய்யவில்லை. கோடையை போல வறுத்தெடுத்த வெயிலால் பெரும்பாலான அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது.

    இதனால் 71 அடி உயரம் உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்துகொண்டே சென்றது. அணையில் போதிய நீர்இருப்பு இல்லாத காரணத்தால் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. வைகைஅணையிலிருந்து மதுரை , சேடபட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் பகுதி குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    வைகை அணையில் நீர்வரத்து என்பது பெரும்பாலும் முல்லைபெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்தே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் முல்லைபெரியாறு அணையிலிருந்து 1200 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக வைகை அணையின் நீர்வரத்து 915 கனஅடியாக நேற்று இருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 50 அடியை எட்டியது.

    இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது. வரத்து 823 கனஅடி, திறப்பு 69 கனஅடி, நீர்இருப்பு 1996 மி.ககனஅடியாக உள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.75 அடி, வரத்து 1104 கனஅடி, திறப்பு 1200 கனஅடி, இருப்பு 2975 மி.கனஅடி.

    1956-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரால் கட்டப்பட்ட வைகை அணை 72 உயரமும், 21.2 கி.மீ சுற்றளவும் கொண்டது. அணையில் அதிகபட்சமாக 71 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனால் 15 அடிக்குமேல் சேரும், சகதியுமாக இருப்பதால் தண்ணீர் தேங்கும் கொள்ளளவு மிகவும் குறைவாக உள்ளது. 67 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணை இதுவரை தூர்வாரப்படவில்லை. இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ.200 கோடி மதிப்பில் அணையை தூர்வார திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

    இந்தபணி விரைவில் மேற்கொள்ளும்பட்சத்தில் அணையில் கூடுதல் தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

    • மூலக்கடை கிராமத்தில் ஸ்ரீவில்லிப்புதூர்-மேகமலை புலிகள் காப்பக மேகமலை கோட்டம் சார்பில் மனித, வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்கு களால் தக்காளி, வாழை, கத்திரி உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக சேதம் அடைவதாக வனத்துறை அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே மூலக்கடை கிராமத்தில் ஸ்ரீவில்லிப்புதூர்-மேகமலை புலிகள் காப்பக மேகமலை கோட்டம் சார்பில் மனித, வன உயிரின மோதல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்குக் கண்டமனூர் வனச்சரகர் திருமுருகன் தலைமை தாங்கினார்.

    கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ், மந்திச்சுனை- மூலக்கடை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, வேளாண்மை துறை மற்றும் கால்நடை டாக்டர் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கூட்டத்தில் சிறப்பாறை, மூலக்கடை, மந்திச்சுனை, ஆலந்தூர் உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் மலைக்கிராம விவசாயிகளுக்கு வனத்து றை சார்பில் ஏற்படுத்த ப்பட்டு வரும் பாதுகாப்புகள் மற்றும் வனப்பகுதியை பாது காப்பதில் விவசாயி களின் பங்கு குறித்து எடுத்துரை க்கப்பட்டது. அதேபோல ஒவ்வொரு கிராமத்திலும் குழு அமைத்து அதன் மூலம் மரம் வெட்டுதல், வேட்டை யாடுதல் உள்ளிட்ட வன குற்றங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வனத்துறை யினருக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கூறுகையில், காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்கு களால் தக்காளி, வாழை, கத்திரி உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக சேதம் அடைவ தாக வனத்துறை அதிகாரி யிடம் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    • சமுதாய கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 8 மின் விசிறி களை திருடிச் சென்றனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட ராமகாரன் தெருவில் சமுதாய கூடம் உள்ளது. இங்கு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 8 மின் விசிறி களை திருடிச் சென்றனர்.

    இது குறித்து பேரூராட்சி செயல்அலுவலர் சிவக்கு மார் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.

    தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் காமு (வயது 50). இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளி. ஒரு ஆடு மற்றும் 2 குட்டிகளை வளர்த்து வருகிறார்.

    அவரது தோட்டத்தில் மேய்ச்சலு க்காக விட்டு வந்த போது ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வெளிமாநில தொழிலா ளர்கள் புதியதாக ரேசன் அட்டை வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தேனி மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரேசன் அட்டைகள் வழங்கப்படும்.

    தேனி:

    உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் தமிழ்நாட்டில் வசிக்கும் வெளி மாநில தொழிலா ளர்களுக்கு ரேசன் அட்டைகள் வழங்கு மாறு உத்திரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இணைய தளத்தில் பதிவு செய்தும் ரேசன் அட்டை இல்லாத வெளிமாநில தொழிலா ளர்கள் புதியதாக ரேசன் அட்டை வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட தனிவட்டா ட்சியர் (குடிமைப்பொருள்) / வட்ட வழங்கல் அலுவல ர்களிடம் விண்ணப்பி க்குமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    பிற மாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தம் காரண மாக தேனி மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரேசன் அட்டைகள் வழங்க ப்படும்.

    எனவே மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்தும் ரேசன் அட்டை இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள் புதியதாக குடும்ப அட்டை வேண்டி சம்மந்தப்பட்ட தனிவட்டாட்சியர் (குடிமைப்பொருள்) / வட்ட வழங்கல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தெரிவித்துள்ளார்.

    • மன உளைச்சலில் இருந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி ஜே.கே.பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ராஜேஸ்வரி (வயது 40). இவர்களது மகள் சுகன்யாவை தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த ராஜேஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

    மகன் கார்த்திக்கிற்கு கவுரி என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இவர்க ளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டு அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி சம்பவத்தன்று வீட்டு மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் கசியும் நீரை போட்டி போட்டு பெண்கள் குடங்களில் எடுக்கும் நிலைக்கு கண்ட மனூர் மக்கள் தள்ளப்பட்டு ள்ளனர்.
    • கண்டமனூர் கிராமத்தில் சுகாதாரமான குடிநீரை தடையற்ற முறையில் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் குடிநீர் தேவைக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு முதல் 3 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட 10க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டி கள் உள்ளன.

    இந்த குடிநீர் தேவைக்காக வீரபாண்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குன்னூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 6 லட்சம் லிட்டர் குடிநீர் நாள்தோறும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் பல்வேறு காரணங்களை கூறி கண்ட மனூர் ஊராட்சி நிர்வாகம் மூலம் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவ தாகவும், இதனால் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    குடிநீர் பற்றாக்குறையால் மாநில நெடுஞ்சாலையில் செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் கசியும் நீரை போட்டி போட்டு பெண்கள் குடங்களில் எடுக்கும் நிலைக்கு கண்ட மனூர் மக்கள் தள்ளப்பட்டு ள்ளனர்.

    கானாவிலக்கு - வருச நாடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கண்டமனூர் பகுதியில் செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் 2 இடங்களில் கசிந்து வரும் சுகாதாரமற்ற நீரை டப்பா க்களில் போட்டி போட்டுக் கொண்டு இறைத்து சல்லடையில் வடிகட்டி குடங்களில் நிரப்பி நாள்தோறும் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

    தண்ணீர் கலங்கலாக வந்தாலும் வேறு வழி இல்லை என்று கூறும் மக்கள் இதனையே குடிநீராக தொடர்ந்து குடித்து வருவதாகவும், இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதோடு, பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது டெங்கு, மலேரியா, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்கள் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரமற்ற குடிநீர்தான் இப்பகுதி மக்களுக்கு குறைந்த அளவு கிடைக்கிறது. எனவே மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கண்டமனூர் கிராமத்தில் சுகாதாரமான குடிநீரை தடையற்ற முறையில் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கூடுதல் மழையாலும், முல்லைபெரியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • 71 அடிஉயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 49.57 அடியாக உள்ளது. மாலைக்குள் 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தென்மேற்கு பருவமழையின்போது போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் முதல்போக சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே விவசாயிகள் மழையை எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கூடுதல் மழையாலும், முல்லைபெரியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் 71 அடிஉயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 49.57 அடியாக உள்ளது. அணைக்கு 915 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது. 1665 கனஅடிநீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1200 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.60 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. பெரியாறு 20.6, தேக்கடி 0.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • லோயர்கேம்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் ரூ.1295.76 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
    • தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளதால் 2 மாதத்திற்குள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகளும் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கூடலூர்:

    மதுரை மாநகராட்சி பகுதிக்கு தினசரி 125 மி.கனஅடி நீர் பெறும் வகையில் தேனி மாவட்டம் லோயர்கேம்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் ரூ.1295.76 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் தலைமை நீரேற்றுநிலையம் மற்றும் பெரியாறு குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்றன.

    25 மீட்டர் நீளம், அகலம் மற்றும் 22 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டு வரும் தலைமை நீரேற்று நிலைய கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் முல்ைலபெரியாற்றின் குறுக்கே தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.

    தடுப்பணையில் இருந்து தலைமை நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் அங்கிருந்து குழாய்மூலம் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்பட்டிக்கு எடுத்துச்செல்லப்படும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டத்தில் முக்கிய பணியான தலைமை நீரேற்று நிலைய கட்டுமான பணி பெரும் சவாலாக இருந்தது. ெதாடர் முயற்சி காரணமாக இந்த பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது.

    தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளதால் 2 மாதத்திற்குள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகளும் முடிவடையும் என்றனர்.

    ×