search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.25 lakh"

    • விவசாயி வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.
    • புகாரின்பேரில் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே டி.ரெங்க நாதபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது60). விவசாயி. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். மகன் சுருளிராஜ் தனது குடும்பத்து டன் சென்னையில் வசித்து வருகிறார்.

    விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் உறவினர்களுக்கு கடன் கொடுத்து வந்துள்ளார். பணத்ைத தனது வீட்டில் உள்ள பீரோவில் வைத்துள்ளார். தோட்ட வேலைக்கு உதவியாக முத்துகாமாட்சி என்பவர் இருந்துள்ளார்.

    சம்பவத்தன்று தோட்ட த்தில் இருந்த ஈஸ்வரி மதியம் சாப்பிட்டு வர முத்துகாமாட்சியிடம் வீட்டு சாவியை கொடுத்துள்ளார். அவர் மீண்டும் ேதாட்ட த்துக்கு வந்தார். பின்னர் இரவு வீட்டுக்கு சென்ற போது வீடு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை தேடி வருகின்றனர். பட்டபகலில் வீடு புகுந்து ரூ.25 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனியார் கம்பெனிக்கு சொந்தமான குடோன் ஒன்று பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் உள்ளது.
    • குடோனுக்குள் இருந்த சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 52 துணி பேல்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

    பெருந்துறை:

    ஈரோடு பார்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 46). இவர் ஒரு தனியார் டெக்ஸ்டைல் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருடைய கம்பெனியின் தலைமை அலுவலகம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ளது. இந்த கம்பெனிக்கு சொந்தமான குடோன் ஒன்று பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் உள்ளது.

    இந்த கம்பெனியின் பொறுப்பாளராக உள்ள ரமேஷ் என்பவர் கடந்த மாதம் 30-ந் தேதி குடோனை திறந்து பார்த்த போது குடோனுக்குள் இருந்த சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 52 துணி பேல்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

    கடந்த 25-ந் தேதி குடோனில் சரக்குகளை கையாளும் பொழுது துணி பேல்கள் சரியாக இருந்து ள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் யாரோ மர்ம நபர்கள் சாவி போட்டு குடோனை திறந்து துணி பேல்களை திருடி இருக்கலாம் என தெரியவந்தது.

    இது தொடர்பாக சுரேஷ்குமார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×