search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cloth bales worth"

    • தனியார் கம்பெனிக்கு சொந்தமான குடோன் ஒன்று பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் உள்ளது.
    • குடோனுக்குள் இருந்த சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 52 துணி பேல்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

    பெருந்துறை:

    ஈரோடு பார்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 46). இவர் ஒரு தனியார் டெக்ஸ்டைல் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருடைய கம்பெனியின் தலைமை அலுவலகம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ளது. இந்த கம்பெனிக்கு சொந்தமான குடோன் ஒன்று பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம் பகுதியில் உள்ளது.

    இந்த கம்பெனியின் பொறுப்பாளராக உள்ள ரமேஷ் என்பவர் கடந்த மாதம் 30-ந் தேதி குடோனை திறந்து பார்த்த போது குடோனுக்குள் இருந்த சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 52 துணி பேல்கள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

    கடந்த 25-ந் தேதி குடோனில் சரக்குகளை கையாளும் பொழுது துணி பேல்கள் சரியாக இருந்து ள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் யாரோ மர்ம நபர்கள் சாவி போட்டு குடோனை திறந்து துணி பேல்களை திருடி இருக்கலாம் என தெரியவந்தது.

    இது தொடர்பாக சுரேஷ்குமார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×