search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
    X

    முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

    முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு

    • தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது.
    • நேற்று 1127 அடியாக குறைக்க ப்பட்டது. இன்றுகாலை தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 600 கனஅடி நீர் திறந்துவிடப் படுகிறது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி 14707 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த வாரம் திடீரென பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 120 அடியை கடந்தது.

    இதனால் அணை யிலிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்ப ட்டது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.35 அடியாக உள்ளது. அணைக்கு 680 கனஅடிநீர் வருகிறது. நேற்று முன்தினம் 1200 கனஅடிநீர் திறக்க ப்பட்ட நிலையில் நேற்று 1127 அடியாக குறைக்க ப்பட்டது. இன்றுகாலை தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 600 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 51.08 அடியாக உள்ளது. 858 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 89.97 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    Next Story
    ×