search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை
    X

    கோப்பு படம்

    தேனி அருகே மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை

    • கணவர் இறந்த நிலையில் மகளும் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் தாய் மன விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்தார்.
    • விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் பூதிப்புரம் வாழையாத்துப்பட்டியை சேர்ந்த சின்னமுத்து மனைவி மீனா(49). இவர்களுக்கு முருகேஸ்வரி என்ற மகள் இருந்தார்.

    சின்னமுத்து உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் முருகேஸ்வரியை போஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். முருகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தனது கணவன் மற்றும் மகள் அடுத்தடுத்து இறந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மீனா யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று மீனா தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது உறவினர் சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×