என் மலர்tooltip icon

    தேனி

    • 12 ஆண்டுகளுக்கு பின்பு ரெயில் மூலம் தேனி மாவட்டத்திற்கு குடிமை ப்பொருட்கள் கொண்டுவ ரப்பட்டுள்ளது.
    • லாரி களில் குடிமை ப்பொரு ட்களை ஏற்றும் பணிகளில் 120-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் அகல ரெயில் பாதை அமைத்த பிறகு முதன் முறையாக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தெ லுங்கான மாநிலத்திலிருந்து குடிமைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் கிட்டங்கி களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளுக்கு குடிமைப்பொருட்கள் இதுநாள் வரை திண்டுக்கல் மாவ ட்டத்திலிருந்து லாரியின் மூலம் கொண்டு வரப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் அகல ரெயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து, தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட த்திற்கு ஆண்டு ஒன்றிற்கு 8000 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான ஒதுக்கீடு தெலுங்கானா மாநிலம் வாராங்கால் மாவட்டம் சுங்கன்பாத் ரெயில் நிலையத்திலிருந்து 21 பெட்டிகளில் 1326 டன் அரிசி 26,436 மூட்டைகள் ஏற்றிக்கொண்டு தேனி ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

    12 ஆண்டுகளுக்கு பின்பு ரெயில் மூலம் தேனி மாவட்டத்திற்கு குடிமை ப்பொருட்கள் கொண்டுவ ரப்பட்டுள்ளது. ரெயில் மூலம் கொண்டுவரப்பட்ட குடிமை ப்பொருட்களை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், போடி, தேனி ஆகிய 5 நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். லாரி களில் குடிமை ப்பொரு ட்களை ஏற்றும் பணிகளில் 120-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக பொது மேலாளர் (போக்குவரத்து) ஹரிகுமார், தென்னக ரயில்வே துணை வணிக மேலாளர் மணி வண்ணன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று முதல் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர்.
    • சில சுற்றுலா பயணிகள் அருவியின் கீழ்ப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கோம்பைத் தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று முதல் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர். கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருவியில் நீண்ட நேரம் காத்திருந்து குளித்துவிட்டு சென்றனர். சில சுற்றுலா பயணிகள் அருவியின் கீழ்ப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்ததால் மயிலாடும்பாறை போலீசார் மற்றும் மேகமலை வனவர் கள் ஈஸ்வரன், செல்வகுமரேசன் மற்றும் சட்டவனத்துறையினர் அருவியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே வனத்துறை சோதனை சாவடி அமைத்துள்ள இடம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். எனவே சோதனை சாவடியில் இருந்து அருவி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அருவி வரை வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் அல்லது பெண்கள், வயதானவர்கள் வசதிக்காக வனத்துறையினர் சார்பில் சோதனை சாவடியில் இருந்து அருவி வரை வாகனம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது.
    • இதனால் மனமுடைந்த மாரியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தென்கரையை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது29). இவருக்கு திருமணமாகி 2 மகள், ஒரு மகன் உள்ளனர். கூலி வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த மாரியப்பன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அன்னஞ்சி விலக்கு அருகே ஒருவர் லிப்ட் கேட்டு பைக்கில் வந்துள்ளார்.
    • இதையடுத்து உடன் வந்தவர் சம்பவ இடத்தில் இருந்து பைக்கை திருடி சென்றுள்ளார்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அன்னஞ்சி விலக்கு அருகே ஒருவர் லிப்ட் கேட்டு இப்ராஹிம் உடன் பைக்கில் வந்துள்ளார். வழியில் வாகனத்தை நிறுத்திவிட்டு இப்ராஹிம் சென்றுள்ளார்.

    இதையடுத்து உடன் வந்தவர் சம்பவ இடத்தில் இருந்து பைக்கை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசில் இப்ராஹிம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே தென்கரையை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியில் மெடிக்கல் கடை வைத்துள்ளார். இந்நிலையில சம்பவத்தன்று அருகில் உள்ளஓட்டலுக்கு சாப்பாடு வாங்க சென்ற போது, கடையில் இருந்த செல்போனை மர்மநபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டு விஷேசத்தில் மது அருந்தி அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்.
    • சிறிது நேரத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன ்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல்ராஜன் (வயது49). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தேனி கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

    மது பழக்கம் இருந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டு விஷேசத்தில் மது அருந்தி அசைவ உணவு சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு முதல் உதவி செய்த பின்னர் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டி தேனி அருகே உள்ள வீரபா ண்டியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாநில மாணவரணி துணை செயலாளர்கள் மதளை செந்தில்குமார், கோகுல் ஆகியோர் தலைமை தாங்கினர். பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார், தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி, தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஸ்டீபன் வரவேற்றார். தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி உள்பட தி.மு.க. நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நீட் விலக்கு கோரும் தபால் அட்டையை ஜனாதிபதிக்கு கடிதம் வழியாக அனுப்ப கையெழுத்து அட்டைகள் சேகரிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் கலைஞர் பெற்று தந்த உரிமைகள், மாணவர் நலனில் கலைஞர் மற்றும் பேச்சு போட்டியில் கலைஞர் காத்த மனிதநேயம், கலைஞர் ஆட்சியில் கல்வி புரட்சி, ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட கலைஞர், பெரியார் அண்ணா வழியில் கலைஞர் என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    அதேபோல கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் வள்ளுவம் போற்றிய கலைஞர், திராவிடத்தின் எழுச்சி கலைஞர் மற்றும் பேச்சு போட்டியில் இந்திய ஜனநாயகத்தில் கலைஞர் பங்கு, நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர், மகளிர் மாண்பு காத்த கலைஞர், கலைஞரும் சுயமரியாதையும் என்ற தலைப்புகளில் நடத்தப்பட்டது.

    இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக தலைமை ஆசிரியர் இளம்பரிதி, பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை, முதுகலை ஆசிரியர்கள் முத்துக்குமார், செல்வம் ஆகியோர் செயல்பட்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் வீரபாண்டி பேரூர் தி.மு.க. செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டம், வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
    • இதனால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையில் நீர்மட்டம் போதிய அளவு இல்லாததால் முதல் மற்றும் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டம், வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.35 அடியாக உள்ளது. 1366 கனஅடிநீர் வருகிறது. மதுைர மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 60 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

    நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 754 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 123.25 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1322 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையி ன்நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. 126.28 அடிஉயரம் கொண்ட சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் 125.39 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • நகையை திருப்பி தராததால் கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
    • குடும்ப பிரச்சினையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுக்காங்கால்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கண்ணன் மனைவி தேவி (வயது48). இவர்கள் சொந்த தேவைக்காக நகையை அடகு வைத்துள்ளனர். அந்த நகையை திருப்பி தராததால் கணவருடன் தேவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்றும் நகை திருப்புவது குறித்து அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முத்துக்கண்ணன் வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பியபோது தேவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் தேவியின் இறப்பு குறித்து தெரிய வரும். இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மலைச்சாலையில் தாழ்வான தடுப்புச்சுவர் பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • குடிநீர் குழாய்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணை அருகே தேக்கடி ஏரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இங்கிருந்து தரைப்பகுதியான லோயர் கேம்ப் வரை 6கி.மீ தூரம் மலைச்சாலையாகும். எனவே தேக்கடியில் சுரங்க வாய்க்கால் அமைத்து அங்கிருந்து 4 ராட்சத குழாய்கள் மூலம் மலைச்சரிவு வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த குழாய்களில் அதிக பட்சமாக 1800 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லலாம். இக்குழாய்கள் குமுளி மலைச்சலையின் 3 இடங்களில் சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பலரும் இந்த குழாய்களை பார்ப்பதுடன் அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.

    இப்பகுதி பாலத்தின் தடுப்பு சுவர் தாழ்வாக இருப்பதால் தவறி விழுந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் இப்பகுதியில் நிலை தடுமாறி பள்ளத்தில் விழும் நிலையும் இருந்தது. இதனை தடுக்க தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தாழ்வான தடுப்புச்சுவர் பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆரம்ப த்தில் உயரமாக இருந்த தடுப்புசுவர் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சாலை பணியால் தாழ்வாக மாறிவிட்டது. குழாய்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதால் விபத்து ஏற்படும் சூழல் இருந்தது. இதனையடுத்து இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1 வாரத்தில் இப்பணிகள் நிறைவடையும் என்றனர்.

    • எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.
    • எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முக வர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் கால தாமதம் மற்றும் நுகர்வோர் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப் போக்கு ஆகிய குறைபாடுகள் தொடர்பான புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. எனவே எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • கடமலைக்குண்டு புதிய பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது முதல் தற்போது வரை பஸ் நிலையத்திற்குள் எந்த பஸ்களும் வந்து செல்வது இல்லை.
    • தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்க கூடாது என நுழைவாயில் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைத்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. பயன்பாட்டிற்கு வந்தது முதல் தற்போது வரை பஸ் நிலையத்திற்குள் எந்த பஸ்களும் வந்து செல்வது இல்லை. மேலும் பஸ் நிலையம் தனியார் ஆட்டோ, லாரி நிற்கும் இடமாக பயன்பட்டு வந்தது.

    இதனால் பஸ் நிலையத்தில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்களை அதிரடியாக வெளியேற்றினர். மேலும் தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்க கூடாது என நுழைவாயில் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைத்தனர்.

    இந்நிலையில் கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், கடமலைக்குண்டு சார்பு ஆய்வாளர் ரெங்க ராஜன் துணைத்தலைவர் பிரியா தனபாலன், ஊராட்சி செயலர் சின்னச்சாமி உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் போலீசார் உதவியோடு அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் அனுப்பினர்.

    மேலும் அனைத்து நேரங்களிலும் பஸ் நிலை யத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என டிரைவர்க ளுக்கு அறிவுறுத்தினர். பல வருடங்களாக பயன்பாடின்றி இருந்த பேருந்து நிலையத்தை தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகத்தினர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தற்போது வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    கொடைக்கானலில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

    கடந்த 9 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இன்று மழை குறைந்து நீர்வரத்து சீரானது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் கும்பக்கரை அருவியில் உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். 

    ×