என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி பிணமாக மீட்பு"

    • மூதாட்டியின் உடல் பிணமாக கிடப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
    • மூதாட்டி தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார் என்று தெரியவில்லை.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சந்தைக்கடை பகுதியில் பவானி ஆறு செல்கிறது.இந்த ஆற்றின் கரையோரத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் பிணமாக கிடப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆற்றின் கரையோரம் கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரேத பரிசோதனையில் மூதாட்டி தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார் என்று தெரியவில்லை.

    இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக மீட்கப்பட்ட மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர். மேலும் இவர் தற்கொலை செய்து ெகாண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    • கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தியில் இருந்தவர் மாயமானார்.
    • அவரது குடும்பத்தினர் குழந்தையம்மாளை தேடி வந்தனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரை சேர்ந்தவர் சந்தானம் மனைவி குழந்தையம்மாள்(75). மகள் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தியில் இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார்.

    அவரது குடும்பத்தினர் குழந்தையம்மாளை தேடி வந்தனர். சம்பவத்தன்று துரைச்சாமிபுரம் முல்லைபெரியாறு அருகே உள்ள அரசமரபாறை பகுதியில் பிணமாக கிடந்த அவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இதனைதொடர்ந்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×