என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
போடியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி
- ஜே.கே.பட்டி அம்பிகாபதி தெருவைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
- இவரிடம் போடி சாரல்நகரைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நிலக்கரி வியாபாரம் செய்து வருவதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ஜே.கே.பட்டி அம்பிகாபதி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் போடி சாரல்நகரைச் சேர்ந்த யசோதா மற்றும் அவரது தந்தை தர்மலிங்கம் ஆகியோர் தாங்கள் நிலக்கரி வியாபாரம் செய்து வருவதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
மேலும் தங்கள் தொழிலுக்கு ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும் அதனை கொடுத்தால் மாதம் ரூ.2 லட்சம் வட்டி தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கணேசன் மற்றும் அவரது தந்தை சுந்தர் ராஜ் ஆகியோர் ரூ.20 லட்சம் பணத்தை கடந்த வருடம் கொடுத்தனர்.
ஒரு சில மாதங்கள் மட்டுமே வட்டித் தொகைையை வங்கி கணக்கல் செலுத்தி வந்த யசோதா அதன் பிறகு பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து அவரிடம் தொலைபேசியில் கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லை. நேரடியாக சென்று கேட்ட போது பணம் தர முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






