என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.20 லட்சம் மோசடி"

    • 4 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • கணவன்-மனைவி இருவரும் சிறையில் இருப்பதும் தெரியவந்தது.

    கோவை,

    கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 36). இவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு எனது முகநூலில் இடம், வீடு விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் பார்த்தேன். இதுகுறித்து நான் விசாரித்த போது மீனா எஸ்டெட்டை சேர்ந்த ஜெகநாத் சிங் மற்றும் அவரது மனைவி கலைவானி மற்றும் இளவரசி, ரித்திகா, அஸ்வினி, அஜய் ஆகியோர் அறிமுகமானார்கள்.

    அவர்கள் ஒரு இடத்தை காட்டி அந்த இடத்தில் வீடு கட்டி தருவதாக கூறினர். அதற்காக முன் பணமாக ரூ.20 லட்சத்தை ெசலுத்துமாறு தெரிவித்தனர். இதனை உண்மை என நினைத்து நான் ரூ.20 லட்சத்தை கொடுத்தேன்.ஆனால் வெகு நாட்கள் ஆகியும் அவர்கள் நிலத்தையே, வீட்டையே தராமல் இருந்து வந்தனர். இதுகுறித்து கேட்கும்போது முன்னுக்கு பின் முரனாக பதில் கூறிவந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த நான் எனக்கு தருவதாக கூறிய இடத்திற்கு சென்று விசாரித்தேன்.

    அப்போது அந்த இடத்தின் உரிமையாளர் அந்த இடத்தை விற்பனை செய்யவில்லை என்பது தெரியவந்தது. மேலும் கணவன்-மனைவி இருவரும் சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் போலீசில் புகார் அளித்தேன்.எனவே என்னிடம் ரூ.20 லட்சம் வாங்கி மோசடி செய்த கணவன்-மனைவி, 3 பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜே.கே.பட்டி அம்பிகாபதி தெருவைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
    • இவரிடம் போடி சாரல்நகரைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நிலக்கரி வியாபாரம் செய்து வருவதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ஜே.கே.பட்டி அம்பிகாபதி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் போடி சாரல்நகரைச் சேர்ந்த யசோதா மற்றும் அவரது தந்தை தர்மலிங்கம் ஆகியோர் தாங்கள் நிலக்கரி வியாபாரம் செய்து வருவதாக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

    மேலும் தங்கள் தொழிலுக்கு ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும் அதனை கொடுத்தால் மாதம் ரூ.2 லட்சம் வட்டி தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கணேசன் மற்றும் அவரது தந்தை சுந்தர் ராஜ் ஆகியோர் ரூ.20 லட்சம் பணத்தை கடந்த வருடம் கொடுத்தனர்.

    ஒரு சில மாதங்கள் மட்டுமே வட்டித் தொகைையை வங்கி கணக்கல் செலுத்தி வந்த யசோதா அதன் பிறகு பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து அவரிடம் தொலைபேசியில் கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லை. நேரடியாக சென்று கேட்ட போது பணம் தர முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதனையடுத்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.3 கோடி கடன் பெற்று சொந்தமாக தொழில் செய்ய முயற்சி செய்து வந்தார்.
    • ரூ.21.20 லட்சத்தை நாகூர் மீரான், சவுகத்திடம் பெற்றதாக தெரிகிறது.

    கோவை,

    கோவை போத்தனூர் சாரதாமில் ரோட்டை சேர்ந்தவர் சவுகத்(54), கராத்தே மாஸ்டர். இவர் தனது வீட்டு ஆவணங்களை அடமானம் வைத்து ரூ.3 கோடி கடன் பெற்று சொந்தமாக தொழில் செய்ய முயற்சி செய்து வந்தார்.

    அப்போது, அவருக்கு தென்காசியை சேர்ந்த நாகூர் மீரான்(57) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதையடுத்து 5 சதவீதம் கமிஷனுக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக நாகூர் மீரான் தெரிவித்தார்.

    மேலும், சட்ட ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி வெவ்வேறு கட்டங்களாக ரூ.21.20 லட்சத்தை நாகூர் மீரான், சவுகத்திடம் பெற்றதாக தெரிகிறது. ஆனால், அதன் பின்னரும், ரூ.3 கோடி கடன் தொகை பெற்று தருவதற்கான ஏற்பாடுகளை நாகூர் மீரான் செய்யாமல் இருந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து சவுகத், தென்காசி சென்று நாகூர் மீரானிடம் கடன் தொகை பெற்று தருமாறும், இல்லையென்றால் தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

    ஆனால், நாகூர் மீரான் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சவுகத் போத்தனூர் போலீசில் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இருபிரிவுகளின் கீழ் நாகூர் மீரான், அவரது நண்பர் ஜான் ஆகிய 2 மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×