என் மலர்
தேனி
- தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளில் நீர் வர தொடங்கி உள்ளது.
- கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு இம்முறை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்றே அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று பெய்த சாரல் மழை காரணமாக உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி காணப்பட்டது.
அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக தேனி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு இம்முறை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணைகளில் நீர் வர தொடங்கி உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.20 அடியாக உள்ளது. அணைக்கு வருகின்ற 50 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. இருப்பு 2303 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 52.76 அடியாக உள்ளது. அணைக்கு 56 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2375 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்தும் திறப்பு இல்லை. இருப்பு 207.32 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.40 அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 47.44 மி.கன அடியாக உள்ளது.
தேனி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக பெரியாறு 3.2, தேக்கடி 0.6, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 8.6, சண்முகாநதி அணை 11.6, வைகை அணை 20.6, ஆண்டிபட்டி 30.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
- விரைவில் யானை வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என தெரிவித்தனர்.
உத்தமபாளையம்:
இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை, தேவிகுளம் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் அரிசிக்கொம்பன் யானை சுற்றி வந்தது. 108 வீடுகள், 20 ரேசன் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் 11க்கும் மேற்பட்டோரை உயிர் பலி வாங்கியதால் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பனை வனத்துறையினர் பிடித்து குமுளி பகுதியில் கொண்டுவிட்டனர். ஆனால் அதன்பிறகு அரிசிக் கொம்பன் மாவடி, வட்ட தொட்டி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேகதானமெட்டு வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை மீண்டும் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் வந்தது. அதன்பின் குமுளிரோசாப்பூ கண்டம் பகுதியில் புகுந்தது. ஜி.பி.எஸ்.சிக்னல் மூலம் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தை கண்டறிந்த வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டும், வேட்டுகளை வெடிக்கச்செய்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு தேக்கங்காடு வழியாக கம்பம் பகுதிக்குள் புகுந்தது.
நேற்று காலை கம்பம் நகருக்குள் வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரிய வரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் கம்பம் நகரில் பொதுமக்கள் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தொடர்ந்து யானை ஊருக்குள் ஆக்ரோசத்துடன் சென்றது. யானை தாக்கி பால்ராஜ் என்பவர் படுகாயமடைந்தார். உடனே வனத்துறையினர் அவரை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் கம்பம் பைபாசில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சுருளிப்பட்டி சாலையில் சென்றது. அங்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தோட்டத்தில் முகாமிட்டு பின்னர் சுருளி அருவி பகுதிக்கு சென்றது. தொடர்ந்து ரேடியோ காலர் மூலம் கண்காணித்த போது அரிசி கொம்பன் யானை மேகமலை ஹைவேவிஸ் பகுதி நோக்கி சென்றது தெரியவந்தது.
அரிசி கொம்பன் யானையை மயக்க மருந்து செலுத்தி பிடித்திட கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதுமலையில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் முத்து என்ற மற்றொரு கும்கி யானையும் வர உள்ளது. யானையை பிடிக்க ஏதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கம்பம் நகரில் இன்று 2-வது நாளாக 144 தடை உத்தரவு தொடர்கிறது. மேலும் சுருளிப்பட்டி, சுருளி அருவி பகுதிக்கும் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. 6 கி.மீ தொலைவுக்கு முன்பே வனத்துறையினர் மற்றும் போலீசார் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

பொதுமக்கள் அரிசி கொம்பன் யானைக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். படம் பிடிப்பது மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே கூறுகையில் வனத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.
யானையை காட்டுக்குள் அனுப்பும் வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார். அரிசி கொம்பன் யானை நடமாட்டம் குறித்து அறிந்ததும் அமைச்சர்கள் இ.பெரியசாமி, ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டும். விரைவில் யானை வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என தெரிவித்தனர். இருந்தபோதும் சுருளி அருவி பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் தற்போது முதல்முறையாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பொள்ளாச்சியில் இருந்த 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளது.
கம்பம்:
கம்பம் நகருக்குள் இன்று காலை ஒய்யாரமாக வந்த அரிசிக்கொம்பன் யானையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தனியார் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு எதுவும் கிடைக்காததால் அருகில் இருந்த டாஸ்மாக் கடையையும் நோட்டமிட்டு பின்னர் தெருவில் கோவில் யானை போல ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியது. யானை ஊருக்குள் புகுந்த விபரம் தெரியவரவே வனத்துறையினர் விரைந்து வந்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதுவரை வனப்பகுதியில் மட்டுமே சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் தற்போது முதல்முறையாக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வனத்துறையினர் தொடர்ந்து அதனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பத்தில் இன்று காலையில் அரிசிக்கொம்பன் ஊருக்குள் புகுந்ததால் வேலைக்கு செல்பவர்கள் கூட வீட்டிற்குள்ளேயே முடங்கிகிடக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரிசிக்கொம்பன் யானை பிடிபடும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரிசிக்கொம்பன் யானையை விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியில் இருந்த 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளது.
மக்கள் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
- கட்டப்பட்ட செப்டிக் டேங்க் பாதுகாப்பான முறையில் கட்டப்படாமல் லேசான கடப்பாக்கல் வைத்து அதன் மேல் மண்ணை போட்டு மூடி அமைத்தனர்
- அதிகாரி கள் பார்வையிட்டு நட வடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் 2021-2022 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுகாதார கழிப்பிட வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. உயரமான பகுதியில் கட்டப்பட்டதால் செப்டிக் டேங்க் கழிவு நீர் சாலையில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சுகாதார கழிப்பிட வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் ஊராட்சி நிர்வாகம் தாழ்வான பகுதியில் புதிதாக செப்டிக் டேங்க் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பின்னர் கட்டப்பட்ட செப்டிக் டேங்க் பாதுகாப்பான முறையில் கட்டப்படாமல் லேசான கடப்பாக்கல் வைத்து அதன் மேல் மண்ணை போட்டு மூடி அமைத்தனர்.
இதனால் 2 நாட்களில் செப்டிக் டேங்க் மேலே போடப்பட்ட கடப்பாக்கல் உடைந்தது. செப்டிக் டேங்க் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே அதிகாரி கள் பார்வையிட்டு நட வடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிக குளிரும், ஆப்பிரிக்க நாடுகளில் மாறுபட்ட சீதோஷ்ண நிலையும் இருப்பதால் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முருங்கை இலைகளை பயன்படுத்து கின்றனர்.
- ஆப்பிரிக்க நாடுகளில் உணவுகழக அதிகாரிகள் சோதனைக்குபிறகும் நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளதாக ஒப்புதல் பெற்று விவசாயிகள் முருங்கை இலைகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
தேனி:
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது, முருங்கையில் பல வகைகள் உள்ளன. தேனி மாவட்டம் வலையபட்டியில் முருங்கை 2900 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. 1500-க்கும் மேற்பட்ட சிறுவிவ சாயிகள் முருங்கை சாகு படியில் ஈடுபட்டுள்ளனர்.
முருங்கை மண்டலத்தில் தேனி உள்ளதால் இங்கு அதிநவீன சாகுபடி உத்திகள் கையாளப்பட்டு ஏற்றுமதி தரம் வாய்ந்த முருங்கை இலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதுதவிர முருங்கைக்காய் 25 செ.மீ நீளமும், 170 கிராம் எடையிலும் இருக்கும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 1500 காய்கள் வரை காய்க்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் முருங்கை இலைகளுக்கு ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகவரவேற்பு உள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளில் அதிக குளிரும், ஆப்பிரிக்க நாடுகளில் மாறுபட்ட சீதோஷ்ண நிலையும் இருப்பதால் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முருங்கை இலைகளை பயன்படுத்து கின்றனர். ஐேராப்பிய யூனியன் உணவு கழகத்தின் ஒப்புதல் பெறப்பட்டும், ஆப்பிரிக்க நாடுகளில் உணவுகழக அதிகாரிகள் சோதனைக்குபிறகும் நார்ச்சத்துகள் அதிகளவில் உள்ளதாக ஒப்புதல் பெற்று விவசாயிகள் முருங்கை இலைகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
வலையபட்டி முருங்கை இலைகள் ஆண்டுதோறும் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தலா 200 டன், 10 டன் பவுடர், காஸ்மெட்டிக் இதர தேவைகளுக்காக 100 லிட்டர் ஆயில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் முருங்கை இலை, காய்களின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- பலாப்பழம் உள்பட உணவுகளின் ருசி கண்டு திரும்ப திரும்ப குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- மின் நிலைய ஆஸ்பத்திரி அருகே யானைக் கூட்ம் முகாமிட்டுள்ளதால் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒரு வித பீதியுடனே சென்று வரு கின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளியாறு மின் நிலையம் உள்ளது. இதனையொட்டி மின் ஊழியர்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பளியங்குடி, வண்ணாத்தி ப்பாறை, மங்கலதேவி பீட், மாவடி, வட்டிதொட்டி உள்ளிட்ட பகுதிகள் பெரியாறு புலிகள் சரணாலயமாக உள்ளது. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக காட்டு யானைகள் உள்ளன. யானைக் கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. வனப்பகுதியில் கிடைக்காத பயிர்கள் விவசாய நிலங்களில் உள்ளதால் அங்கு புகுந்து சேதப்படுத்தி செல்கின்றன. மேலும் பலாப்பழம் உள்பட உணவுகளின் ருசி கண்டு திரும்ப திரும்ப குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதால் பொது மக்கள் அச்சமடைந்து ள்ளனர்.
தற்போது சுருளியாறு மின் நிலைய ஆஸ்பத்திரி அருகே யானைக் கூட்ம் முகாமிட்டுள்ளன. இதனால் ஊழியர்கள் மற்றும் குடு ம்பத்தினர் ஒரு வித பீதியுடனே சென்று வரு கின்றனர். ஏற்கனவே முணாறு அருகே சின்னக்கானல் பகுதியில் அட்டகாசம் செய்த அரிசி கொம்பன் யானையை பிடித்து மங்கலதேவி கண்ணகி கோவில் வனப்பகுதியில் விட்டனர்.
ஆனால் அந்த யானை மாவடி வனப்பகுதி வழியாக தமிழக எல்லைக்குள் புகுந்து மேகமலையில் தங்கியது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அரிசி கொம்பன் யானை கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்கு அரிசி கொம்பன் மீண்டும் திரும்பியுள்ளது. குமுளியில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள சீனியர் ஓடை பகுதியில் அரிசி கொம்பன் நடமாட்டம் உள்ளது ஜி.பி.எஸ். காலர் மூலம் வனத்துறையினருக்கு தெரிய வந்தது.
இது குறித்து அவர்கள் கூறுகையில், அரிசி கொம்பன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யானை மீண்டும் மேகமலைக்கு செல்ல வாய்ப்பு இல்லை. எனினும் சுற்றுலா பயணி களுக்கான தடை இன்னும் விளக்கப்படவில்லை. கள நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.
- தேனி அருகே வெவ்வேறு பிரச்சினையில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே தேவா ரத்தை சேர்ந்தவர் மணி கண்டன் மகன் அய்யனார் (வயது21). இவர் சிந்தலைச்சேரியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு செல்ல பைக் வேண்டும் என பெற்றோ ரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் பொருளாதார வசதி இல்லை. படித்து முடித்தவுடன் வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதனால் மனவேதனை யடைந்த அய்யனார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது57). இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அப்போது முதல் மன உளைச்சலில் இருந்த தங்கத்துரை விஷம் அருந்தி மயங்கினார். கடமலை க்குண்டு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கத்துரை உயிரிழந்தார். இது குறித்து கடமலை க்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெயமங்கலத்தை சேர்ந்த வர் சின்னச்சாமி (45). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சின்னசாமி சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பலத்த காற்று வீசியதால் தூக்கிவீசப்பட்ட தகரத்தை எடுக்க முயன்றபோது மின்வயரில் எதிர்பாராமல் கைபட்டு தூக்கிவீசப்பட்டார்.
- பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
தேனி:
தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி(65). சம்பவத்தன்று அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் தூக்கிவீசப்பட்ட தகரத்தை எடுக்க முயன்றபோது மின்வயரில் எதிர்பாராமல் கைபட்டு தூக்கிவீசப்பட்டார்.
மின்சாரம் தாக்கி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட அவரை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அழகர்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வெவ்வேறு 3 பெண்கள் மாயமானதையொட்டி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். அதன்பே ரில் போலீசார் வழக்குபதிவு செய்து கனகவள்ளியை தேடி வருகின்றனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனி செட்டிபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் நித்ய ஸ்ரீ(21). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். மேற்படிப்பு படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் அவரது தந்தை அதற்கு உடன்படவில்லை. படித்தது போதும் என கூறியுள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்த நித்யஸ்ரீ திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கா ததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
தேனி சிவராம்நகரை சேர்ந்தவர் வேல்பாண்டி மகள் ஷீலாதேவி(21). இவர் பி.பி.ஏ, படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடை க்காததால் தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஷீலா தேவியை தேடி வருகின்றனர்.
கம்பம் சுருளிபட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகள் கனகவள்ளி(24). சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குபதிவு செய்து கனகவள்ளியை தேடி வருகின்றனர்.
- சதீஸ்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கோம்பை அணைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் சதீஸ்குமார் (28). கூலித்தொழிலாளி. இவர்மீது தேனி, கோம்பை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
மேலும் அடிக்கடி இரட்டை மாட்டுவண்டி பந்தயமும் நடத்தி வந்துள்ளார். இதனால் சதீஸ்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அவர் அரண்மனைத்தெரு குளம் அருகே மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சதீஸ்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் மாட்டு வண்டியில் இருந்த அச்சாணிக்கட்டை, உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் இரும்புக்கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கோம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் 9 பேர் கொண்ட கும்பல் சதீஸ்குமாரை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து கக்கன்ஜி காலனியை சேர்ந்த மணிகண்டன், திரு.வி.க. தெருவை சேர்ந்த பிரவீண், தீபக், கிராம சாவடி தெருவை சேர்ந்த புகழேந்தி ஆகிய 4 பேரை கைது செய்து சூர்யா உள்பட மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
- அணைக்கரைப்பட்டி-அகமலை செல்லும் சாலையில் வள்ளுவன்தொழு பகுதியில் தோட்டத்தில் கருப்பையா என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தார்.
- கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டி-அகமலை செல்லும் சாலையில் வள்ளுவன்தொழு பகுதியில் தோட்டத்தில் கருப்பையா என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தார். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே உத்தரவின்படி போதை ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்புபடையினர் விரைந்து சென்று 20 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக கருப்பையாவை கைது செய்தனர். போடி மற்றும் மலையடிவார பகுதிகளில் அதிகளவில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
- மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தநிலையில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்ற போது மதுஅருந்தி வந்துள்ளார்.
- இதனால் மனஉளைச்சலில் இருந்த மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன்தெருவை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ரோகேஷ்(20), அஸ்வந்த்(19) என 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றனர். அப்போது ஜெயக்குமார் மதுஅருந்தி வந்துள்ளார்.
இதனால் வேதனையடைந்த மகன் ரோகேஷ் தனது தந்தையை கண்டித்துள்ளார். மேலும் மனஉளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டுக்கு வந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
க.விலக்கு அருகே பந்துவார்பட்டியை சேர்ந்தவர் வீரபுத்ரன்(70). இவர் தோட்டத்து வீட்டில் தனது மனைவியுடன் தங்கி விவசாய வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த வீரபுத்ரன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






