என் மலர்
நீங்கள் தேடியது "ஆற்றல் அறக்கட்டளை"
- பொதுமக்கள் அரசு பள்ளி தரம் குறைவாக இருக்கும் என்று கருத வேண்டாம்.
- 25 தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ஆற்றல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது
தாராபுரம் :
74-வது குடியரசு தினத்தையொட்டி ஆற்றல் அறக்கட்டளை மற்றும் வேர்கள் அமைப்பு சார்பில் தாராபுரம் தேன்மலர் பள்ளி விளையாட்டு அரங்கத்தில் "பிறர் நலன் சிந்திப்போர் சந்திப்பு நிகழ்ச்சி" மற்றும் தாராபுரம் பகுதியில் சமூக சமுதாய பணியில் முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த நிர்வாகிகளுக்கு ஆற்றல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
விழா குறித்து சிறப்பு விருந்தினரும் ஆற்றல் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான ஆற்றல் அசோக் குமார் பேசியதாவது:- பொதுமக்கள் அரசு பள்ளி தரம் குறைவாக இருக்கும் என்று கருத வேண்டாம். அரசு ஆசிரியர்கள் திறமை மிக்கவர்கள்.
அரசு பள்ளிகளில் எங்களை போன்ற சமூக நல அமைப்புகளை ஒருங்கிணைத்து பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.ஆகவே பொதுமக்கள் அரசு பள்ளிகளை ஒன்று சேர்ந்து மேம்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் அரசு பள்ளிக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்வதற்கு தயாராக உள்ளோம் .
உங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் தேவையான வசதிகள் குறித்து தெரிவித்தால் செய்து தரப்படும். மேலும் 62 ஊராட்சிகளில் 100 சமுதாயக்கூடங்கள் கட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். நீங்கள் அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் தாராபுரம் ,மூலனூர் ,குண்டடம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு சேவை செய்யும் 2500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு யோஷாபாத் சிம்மர் கனி ராம், கோபால் ரத்தினம் , ஆற்றல் அசோக் குமார் ஆகியோர் பங்கேற்று ஆற்றல் விருதுகளை வழங்கி கவுரவித்தனர். 25 தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ஆற்றல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது
நிகழ்ச்சியில் மூலனூர் வேர்கள் அமைப்பு நிர்வாகி சிவராஜ் வரவேற்று பேசினார்.தாராபுரம் நிர்வாகி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராம் ரகுபதி. முன்னிலை வகித்து பேசினார். முடிவில் வேர்கள் அமைப்பின் நிர்வாகி ராஜசேகரன் நன்றி கூறினார்.விழாவில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
- காலை 500 பேருக்கும், மதியம் 500 பேருக்கும், இரவு 500 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு தற்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- வயதானவர்கள், கூலி தொழிலாளர்கள், குழந்தைகள் குடும்பம் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு விசைத்தறி, மஞ்சள், ஜவுளி, தோல் தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கி வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஈரோடு பிரப் சாலையில் புதிய உணவகம் தொடங்கப்பட்டு உள்ளது. ஆற்றல் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் மலிவு விலையில் ரூ.10-க்கு உணவு கிடைக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரை சுடச்சுட இட்லி, சாம்பார், சட்னியும், மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சாதம், சாம்பார், பொரியல், மோர் மற்றும் ஊறுகாயும், இரவு 7 மணி முதல் 9 மணி வரை இட்லி, சாம்பார், சட்னியும் சுடச்சுட வழங்கப்படுகிறது.
இங்கு ரூ.10 கட்டணத்தில் பசியாற விரும்புவோருக்கு ருசியான தரமான உணவை வாரம் 7 நாட்களும் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் அளவில்லா உணவு வழங்கப்படுகிறது. இதற்காக சிறந்த சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து உணவு சாப்பிடும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உணவகம் ஈரோட்டில் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. காலை 6.30 மணி முதலே உணவகத்தில் மக்கள் சாப்பிடத் திரண்டு விடுகின்றனர். கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் பொதுமக்கள் நின்று சாப்பிட்டு செல்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இட்லி தீர்ந்து விடுகிறது.
இதேபோல் மதியம் 40 நிமிடங்களுக்குள்ளாகவே சாதம் தீர்ந்து விடுகிறது. இரவும் இதே நிலைமை தான் இருக்கிறது. சாதாரண கூலி தொழிலாளர்கள் ஏழைகள் மட்டுமின்றி வசதி படைத்தவர்களும் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.
சாப்பிட வருபவர்களிடம் உணவை வீணடிக்க வேண்டாம் என்று கூறி தான் உணவு பரிமாறப்படுகிறது. சாப்பிட்டு முடித்ததும் அவர்களே தட்டுகளை கழுவி ஊழியரிடம் கொடுக்க வேண்டும். நல்ல காற்றோட்ட வசதியுடன் உணவு அருந்தும் வகையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. சாப்பிட வருபவர்களுக்கு ஆர்.ஓ. வாட்டர் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆற்றல் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் கூறியதாவது:-
ஆற்றல் அறக்கட்டளை சார்பில் ஏராளமான சமுதாய பணிகள் செய்து வருகிறோம். எங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சம உரிமை வழங்குவது தான்.
எங்கள் அறக்கட்டளை மூலம் கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்துதல், சமுதாயக்கூடம் கட்டி கொடுத்தல், ஆட்டோ டிரைவர்கள், கூலித்தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர்களை பாராட்டி கவுரவித்தல் உள்பட ஏராளமான சேவைகளை ஆற்றி வருகிறோம்.
தற்போது புதிய முயற்சியாக பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு மலிவான விலையில் தரமான உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு முதல் முறையாக ஆற்றல் அறக்கட்டளை சார்பாக மலிவு விலை உணவகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
முதலில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் உணவின் மதிப்பு தெரியாமல் போய்விடும் என்பதால் 10 ரூபாய் கட்டணத்தில் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் தலா ரூ.10-க்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காலை 500 பேருக்கும், மதியம் 500 பேருக்கும், இரவு 500 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு தற்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது. பார்சல் வசதி கிடையாது. பொதுமக்கள் நேரடியாக உணவகத்திற்கு வந்து சாப்பிட்டு செல்லலாம்.
இதன் முக்கிய நோக்கம் அனைத்து தரப்பு மக்களும் வயிறார தரமான உணவை சாப்பிட்டு செல்ல வேண்டும் என்பதுதான். உணவகம் தொடங்கி சில நாட்களே ஆகிறது. ஆனால் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
வயதானவர்கள், கூலி தொழிலாளர்கள், குழந்தைகள் குடும்பம் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்கின்றனர். சாப்பிட வருபவர்களிடம் உணவை வீணாக்க வேண்டாம் என அன்பு கட்டளை இடுகிறோம். ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் தான் உணவு அருமை நமக்கு தெரிய வந்தது. உணவுக்காக பலர் கஷ்டப்பட்டனர்.
கொரோனா காலகட்டத்தில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்களை நேரடியாக சென்று சந்தித்து உணவு பொட்டலங்களை வழங்கினார்கள். இதன் அடிப்படையிலேயே தற்போது மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்களை காக்க வைக்காமல் இருப்பதற்காக நவீன எந்திரங்கள் மூலம் ஒரே நேரத்தில் 100 இட்லி வரை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த உணவகத்திற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கும் ஆற்றல் உணவகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிராம மக்களுக்கு தடையின்றி குடிநீர் பெற தண்ணீர் பம்பிங் நிலையம், 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சார வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.
- குடிநீர், உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைப்பதற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி சாலையில் உள்ள மடத்துப்பாளையம் பகுதியில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் தொப்பம்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்களுக்கு தடையின்றி குடிநீர் பெற தண்ணீர் பம்பிங் நிைலயம், 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சார வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து தடையில்லா மின்சாரம்- குடிநீர் வினியோகம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆற்றல் அறக்கட்டளை அசோக்குமார் தலைமை தாங்கினார். தொப்பம்பட்டி ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர்.ஆற்றல் அசோக்குமார் குடிநீர் செல்லும் இணைப்பினை தொடங்கி வைத்து பேசியதாவது:-
மக்களுக்கு அடிப்படை தேவை குடிநீர். இந்த பகுதியில் அமராவதி ஆற்றுப்பாசனம் இருந்தும் மும்முனை மின்சாரம் பழுதால் குடிநீர் கிடைக்காமல் சுமார் 9 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தவிப்பதாக ஊர் தலைவர்கள் மூலமாகவும் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மூலமாகவும் அறிந்தோம் . உடனடியாக மக்களின் முக்கிய தேவையாக உள்ள குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சுமார் ரூ.3.50 லட்சம் செலவில் மின் இணைப்பு கருவிகள், உதிரி பாகங்கள் அனைத்தையும் வழங்கி மின்சார பணிகளை முடித்துவிட்டு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொப்பம்பட்டி ஊராட்சி பெரிய குமார பாளையம், பெட்டிக்காம்பாளையம், வேலாயுதம்பாளையம், மருதூர் , மோனார்பட்டி உள்ளிட்ட 9கிராம பஞ்சாயத்து மக்களின் குடிநீர் தேவையை ஆற்றல் அறக்கட்டளை பூர்த்தி செய்வதில் மகிழ்கிறோம். ஆற்றல் அறக்கட்டளை சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் முக்கிய தேவைகளான குடிநீர், உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைப்பதற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.
அறக்கட்டளை மூலம் திருக்கோவில்கள் புனரமைப்பு, அரசு பள்ளிகள் மேம்பாடு, சமுதாயக்கூடங்கள் கட்டித் தருதல் போன்ற பணிகளை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மட்டுமின்றி, மொடக்குறிச்சி, காங்கேயம் ,வெள்ளகோவில், முத்தூர், குண்டடம் மற்றும் ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் சிறப்பாக செய்து வருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக கிடைக்க தொடர்ந்து ஆற்றல் அறக்கட்டளை பெரும் உதவியாக இருக்கும். இந்த உதவியை பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த ஆற்றல் அசோக்குமாருக்கும் அவரது குழுவினர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி தலைவர்கள் லட்சுமி சரண்யா ,சேகர் ,மகேந்திரன், பி. கே. ராஜ், தேவி ,ரத்தின சாமி, முத்து பிரியா மற்றும் ஊர் தலைவர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.






