என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மக்கள் நலத்திட்டங்களில் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    • வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சுற்று வட்டார சாலையில் உள்ள அம்மா திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை நடக்கிறது. இதனை மக்களிடம் சென்று சொல்லிவிடுவோம் என்கிற பயத்தில் அ.தி.மு.க. கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர். அ.தி.மு.க. எனும் இயக்கம் தொண்டர்களால் ஆனது. விவசாய குடும்பத்தில் பிறந்த நானும் ஒரு தொண்டன்தான். தொண்டர்களாக இருந்து இந்த இயக்கத்தை வழி நடத்தி வருகிறோம்.

    ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது தொண்டர்கள் உள்ளத்தில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் சிதைந்து விடுவார்கள்.

    தி.மு.க.வின் 22 மாத ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் எனபதை ஸ்டாலின் உணர வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் ரூ.2கோடி செலவில் நினைவு சின்னமாக எழுதாத பேனாவை வைக்கலாம். மீதமுள்ள ரூ.79 கோடிக்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எழுதும் பேனாவை இலவசமாக வழங்கலாம்.

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவில்லை. இதேபோல அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மினி கிளினிக், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்பட பல திட்டங்களை முடக்கி உள்ளது. இதுதான் தி.மு.க..வின் சாதனை.

    தற்போது அ.தி.மு.க.வை சிதைக்கும் முயற்சியில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எதையும் எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளது. எங்களை பற்றி சிந்திப்பதை விடுத்து, மக்கள் நலனில் ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும். நலத்திட்ட உதவிகளை தடுத்து ஏழைகளை வஞ்சிக்கும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக சிவங்கை அரண்மனை வாசலில் உள்ள ராணி வேலு நாச்சியார் சிலை, பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலை ஆகியவற்றுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், கோகுல இந்திரா, எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, வி.பி.பரமசிவம், திண்டுக்கல் மாநகராட்சி முதல் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சரவணன், நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், செல்வமணி, சிவாஜி, ஸ்டீபன்அருள்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மகளிரணி வெண்ணிலா சசிக்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே.பி.ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சகாய செல்வராஜ், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மோசஸ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாதவன், சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அன்பு, அமைப்பு சாரா அணி துணை செயலாளர்அழகர்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை ஊரவயல் எஸ்.பி.ராம், காரைக்குடி நகர வட்ட செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் ெஜ.ஷோபியா பிளாரன்ஸ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், நகர நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இந்த கூட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி முன்னதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து சிவகங்கை அரண்மனையில் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலு த்தினார்.

    • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
    • முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.

    நெற்குப்பை 

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் பொன்னா டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன்.இவர் அ.திமு.க. மாவட்ட பேரவை துணைச் செயலாள ராகவும் பதவி வகித்து வருகிறார்.

    இவரது மகள் ஹரிப்பிரியாவுக்கும், மணமகன் ஜெயக்கு மாருக்கும் கடந்த பிப்ரவரி 12-ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தனது சொந்த கிராமத்தில் பிப்ரவரி 26-ந் தேதி நடந்த வரவேற்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச் சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அந்த சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் நடந்ததால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி குன்னத்தூரில் உள்ள ஓ.வி.எம். கார்டனில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பந்தலில் மாவட்ட குழு சேர்மன் முன்னிலையில் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, பாஸ்கரன், விஜய பாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள் உறுப்பி னர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மண மக்களை வாழ்த்திய எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.

    • ரவிச்சந்திரன் நகைக்கடை உரிமையாளர்களுக்கு போன் செய்து மர்ம நபர்கள் தன்னை கடத்தி நகை மற்றும் பணத்தை பறித்து சென்று விட்டதை தெரிவித்தார்.
    • போலீசார் ரவிச்சந்திரனை மீட்டு அவரை காரில் கடத்தி சென்று நகை-பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமுபிள்ளை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் காரைக்குடியில் உள்ள நகை கடைகளுக்கு மொத்தமாக தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ரவிச்சந்திரன் சென்னை சென்று தங்க நகைகளை வாங்கி கொண்டு ஒரு பஸ்சில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் காரைக்குடி வந்தார். அவரிடம் ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.2½ கோடி ரொக்கம் இருந்தது.

    அவர் கழனிவாசல் பகுதியில் சென்றபோது ஒரு சொகுசு காரில் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து டிப்-டாப்பாக சில மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ரவிச்சந்திரனிடம் போலீசார்போல் நடித்து அவரை காரில் ஏறும்படி கூறினர். அவர்கள் போலீசார் என நினைத்து ரவிச்சந்திரனும் காரில் ஏறினார்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் திருமயம் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ரவிச்சந்திரனை அழைத்துச் சென்று அவர் வைத்திருந்த ரூ.1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.2½ கோடி ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவரை தனியாக விட்டு விட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் நகைக்கடை உரிமையாளர்களுக்கு போன் செய்து மர்ம நபர்கள் தன்னை கடத்தி நகை மற்றும் பணத்தை பறித்து சென்று விட்டதை தெரிவித்தார். இதுபற்றி நகைக்கடை உரிமையாளர்கள் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் ரவிச்சந்திரனை மீட்டு அவரை காரில் கடத்தி சென்று நகை-பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அவரை கடத்தி சென்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்ற னர்.

    காரைக்குடியில் வியாபாரியை கடத்தி சென்று மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை பறித்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கவுன்சிலர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடும் என்று தலைவர் லதாஅண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
    • முடிவில் மேலாளர் தவ மணி நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை தலைமை யில் நடைபெற்றது. ஆணை யாளர் சாந்தி வரவேற்றார்.

    கூட்டத்தில் முதல் தீர்மானமாக கீழடி அருங்காட்சிய கத்தை திறந்து வைத்த தற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது.

    கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. கவுன்சிலர் முருகேசன் பேசும்போது, கீழபசலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசனேந்தல் சாலையை சீரமைக்க வேண் டும்.

    கீழபசலை நடுநிலைப் பள்ளி சுற்றுச்சுவரை உடனே கட்டித் தர வேண்டும். எம்.கரிசல்குளம் பகுதியில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை மோச மான சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதே போல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து வலியுறுத்தினர்.

    தலைவர் லதா அண்ணா துரை பேசும்போது, கூட்டத்தில் கவுன்சி லர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் திட்ட பணிகள் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் என்றார். முடிவில் மேலாளர் தவ மணி நன்றி கூறினார்.

    • மானாமதுரை நகராட்சி பகுதியில் ரூ.10 கோடியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மானாமதுரை நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் தேவைகளுக்கென ராஜகம்பீரம் தலைமை நீரேற்று நிலையத்தில்

    15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாகவும், மானாமதுரை பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருசக்கர வாகன நிறுத்தம் தொடர்பாகவும் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

    மானாமதுரை பேரூராட்சியாக இருந்து, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் கூடுதல் அலுவலகக் கட்டிடத்திற்கென ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், மானா மதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய நகர்ப்புற சுகாதார மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தொடர்பாகவும், மானா மதுரை நகராட்சியின் உரக்கிடங்கு மையத்தில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் ஆய்வு செய்தேன்.

    இந்த மையத்தின் கசடு கழிவு நிலைய மேலாண்மைப் பணிக்கான இடத்தை தேர்வு செய்வது குறித்தும், அரசக்குழி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மின் மயான கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் என மொத்தம் ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது போன்று சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை விரைந்து முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசிரவிக்குமார், மானாமதுரை நகர்மன்றத் தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, நகராட்சி ஆணையாளர் சக்திவேல், நகர்மன்றத் துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • பிரதான கால்வாய்களில் ரூ.28.80 கோடியில் நடைபெறும் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது
    • கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நீர்வளத்துறையின் சார்பில் மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டங்க ளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் புனர மைப்பு பணிகள் மற்றும் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டுமானப் பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயரச்செய்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், துரிதமாக பல்வேறு நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் கண்மாய்கள் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மானாமதுரை , திருப்புவனம் வட்டங்களில் பிரமனூர், திருப்புவனம், சக்குடி, மடப்புரம், இடைக்காட்டூர், முத்தனேந்தல், ராஜகம்பீரம் ஆகிய கிராமங்களில் வைகை யாற்றின் குறுக்கே விரகனூர் மதகணையில் இருந்து பிரியும் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் மொத்தம் ரூ.28.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

    இதன்மூலம் மானா மதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிரமனூர், திருப்புவனம், சக்குடி, மடப்புரம், இடைக்காட்டூர், முத்தனேந்தல், ராஜகம்பீரம் ஆகிய கிராமங்களில் உள்ள 40,743.00 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன் 82 கண்மாய்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. மேலும், இந்த பகுதியைச் சுற்றியுள்ள 3,180 ஏக்கர் இடைவெளி நிலங்களும் பயன்பெறும்.

    மேலும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மானாமதுரை கிராமம் கீழப்பசலை மற்றும் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க வைகை ஆற்றின் குறுக்கே மானாமதுரை சிவகங்கை சாலை இணைப்பு பாலத்திற்கு மேல்புறத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு ரூ.16.86 கோடி மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த அணைக்கட்டின் மூலம் கீழப்பசலை மேலப்பசலை ஆதனூர் மற்றும் சங்கமங்கலம் ஆகிய 4 கண்மாய்கள் வழியாக 461.82 எக்டேர் (1140.70 ஏக்கர்) பாசன நிலங்களும், கால்பிரிவு மற்றும் செய்களத்தூர் கிராமங்களில் உள்ள 27 விவசாய கிணறுகள் வழியாக 85.75 எக்டேர் (211.80 ஏக்கர்) பாசன நிலங்களும் பயன்பெறு கின்றன. மொத்தமாக 547.57 எக்டேர் (1352.50 ஏக்கர்) பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.

    இந்த அணைக்கட்டு மூலம் 9.36 மி.க.அடி (எம்.சி.எப்.டி) தண்ணீர் தேக்க இயலும். இதன் பொருட்டு அணைக்கட்டின் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும். இதனால் பாசன வசதி பெற்று விவசாயிகளின் பொருளாதார வாழ்க்கை தரம் மேம்படுவதோடு மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் தமிழக அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வெள்ள காலங்களில் வைகை யாற்றில் இருந்து உபரிவெள்ள நீரை மேலப்பசலை கண்மாய் வழியாக நாட்டார் கால்வாய் திட்டத்தின் மூலம் பயன்பெறும் 16 கண்மாய்களில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 கண்மாய்களுக்கும் ராமநா தபுரம் மாவட்டத்திலுள்ள 4 கண்மாய்களுக்கு இந்த அணைக்கட்டு மூலம் திருப்பிவிட இயலும்.

    இந்த 10 கண்மாய்கள் மூலம் சுமார் 614.30 எக்டேர் (1517.32 ஏக்கர்) பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை (சருகனியாறு கோட்டம்) செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், இளம்பொறியாளர் போஸ், உதவிப்பொறியாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • காரைக்குடி வித்யாகிரி பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வித்யாகிரி பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் க நடைபெற்றது. விழாவில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுவாமிநாதன் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன் மற்றும் பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை மற்றும் என்.சி.சி. கமாண்டிங் ஆபீசர் ரஜ்னீஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி னர். பின்னர் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஆசிரிய- ஆசிரியைகள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் முதல்நாள் நடைபெற்ற கே.ஜி. மழலையர் பள்ளி மாணவர்க ளுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் காட்வின் சந்தீப், டாக்டர் குமரேசன், டாக்டர் கிரிதர்முத்து மற்றும் பொறி யாளர் கலைமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கே.ஜி. மழலையர் பள்ளி மாண வர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

    பின்னர் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. ஆசிரியை ஜோசபின் நன்றி கூறினார். இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • 11-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையில் வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதற்காக சிவகங்கை-மதுரை 4 வழிச்சாலையில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணியை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அ.தி.மு.க. நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், செல்வமணி, ஜெகன், கோபி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச்செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட பாசறை இணைச்செய லாளர் மோசஸ், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரிக்கு இஸ்ரேல் பெண் கவிஞர் வருகை தந்தார்.
    • கல்லூரியின் மாடித்தோட்டத்தை பார்வையிட்ட ஜ்மிரா போரான் ஜியோன் அங்கு பயிரிடப்பட்ட காய்கறி பயிர்களின் முதல் அறுவடையை தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    இஸ்ரேல் நாட்டின் புகழ்பெற்ற பெண் கவிஞர், கலைஞர் மற்றும் பெண் செயற்பாட்டாளருமான ஜ்மிரா போரான் ஜியான் விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தந்தார். அவர் இஸ்ரேல் ராணுவத்திலும் பணியாற்றி உள்ளார்.

    சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியின் தாளாளர் சேது குமணன், முதல்வர் கருணாநிதி, ஆலோசகர் தர்மராஜ், கல்லூரி உதவிப்பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை வரவேற்றனர். விழாவில் புதுக்கோட்டை மௌன்ட் ஜியான் சர்வதேச பள்ளியின் அறங்காவலர் ஜோனதன் ஜெயபரதன் கலந்து கொண்டார். பின்பு மாணவர்கள் மத்தியில் ஜ்மிரா போரான் ஜியோன் சிறப்புரையாற்றினார். ஹீப்ரு மற்றும் ஆங்கில மொழியில்தான் இயற்றிய கவிதைகள் சிலவற்றையும் வாசித்து காட்டினார். முடிவில் கல்லூரியின் மாடித்தோட்டத்தை பார்வையிட்ட ஜ்மிரா போரான் ஜியோன் அங்கு பயிரிடப்பட்ட காய்கறி பயிர்களின் முதல் அறுவடையை தொடங்கி வைத்தார்.

    • தாயமங்கலம் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
    • குளம் சீரமைப்புப் பணிகளை அறங்காவலர் வெங்கடேசன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தாயமங்கலம் கிராமத்தில் தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் விழா பத்து நாட்கள் நடைபெறும். பங்குனி விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீச்சட்டி, கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டு திருவிழா வரும் மார்ச் 29-ந் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி இக்கோவிலில்தற்போது கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் வடக்கு பகுதியில் உள்ள தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக தற்போது தீர்த்த குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிகள் முடிவடைந்த பின்பு அருகே உள்ள வயல்களில் உள்ள மின்மோட்டார் மூலம் தீர்த்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.

    கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் மற்றும் குளம் சீரமைப்புப் பணிகளை அறங்காவலர் வெங்கடேசன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமை-குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.
    • புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டை கொத்த டிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான கொத்தடிமை கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது.

    தற்போது கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிய மற்றும் அவர்கள் தொடர்பான விவரங்களை புகாராக அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் களின்படி, கட்டணமில்லா தொலை பேசி உதவி எண் (1800 4252 650) ஏற்கனவே அறிமுக ப்படுத்தப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தை தொழி லாளர் குறித்த புகார்களை தெரிவிக்க பொது மக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் பொருட்டு, கட்டணமில்லா தொலைபேசி எண் 155214 என்ற எண் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

    கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரி விக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய லாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை அருகே சக்கந்தியில் ரூ.1.69 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை தேர்ந்தெடுத்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சக்கந்தியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பல்வேறு துறைகளின் சார்பில் 288 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இதன் மூலம் பலதரப்பட்ட மக்கள் பயனடைகின்றனர்.

    பொது மக்களுக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவல கத்தை தேர்ந்தெடுத்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தின் கடைகோடிவரை மக்கள் பயனடைவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×