என் மலர்
சிவகங்கை
- தேவகோட்டையில் ரத்ததான முகாம் நடந்தது.
- 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி யில் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி (காரைக்குடி), நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் பால முருகன் ஆகியோர் அனை வரையும் வரவேற்றனர்.
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) திருமால் செல்வம் வாழ்த்தி பேசினர். தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் சாம் சேசுரான், மருத்துவர் அழகு தாஸ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ ஆலோசகர் சூசை ராஜ் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.
இதில் ரத்த தானம் செய்தவர்களுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு ரத்த குழுமத்தால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- விளையாட்டு தின விழாவில் பல்வேறு போட்டிகள் நடந்தன.
- 3 ஆண்டுகள் போட்டிகள் நடைபெறாமல் இந்த ஆண்டு நடந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு தினவிழா போட்டிகள் நடந்தன. தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பாட்டிலில் நீர் நிரப்புதல், தவளை ஓட்டம், நொண்டி அடித்து ஓட்டம், மியூசிக்கல் சேர், ஓட்டப் பந்தயம், ஊசி நூல் கோர்த்து ஓட்டம், சாக்கு ஓட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், லெமன் ஸ்பூன் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பரிசுகள் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை மேடையில் நிறுத்தி கை தட்டி பாராட்டினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். கொரோனா காரணமாக 3 ஆண்டுகள் போட்டிகள் நடைபெறாமல் இந்த ஆண்டு நடந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கொலை தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- அக்கம்பக்கத்து வீட்டினர் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள வீரவலசை கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி(வயது 35). விவசாயியான இவரது வீட்டின் அருகே மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏலம்மாள் (65) என்ற மனைவியும், கோவிந்தசாமி (46) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று ஏலம்மாள் தனது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தின் ஓலையை ஆட்களை வைத்து வெட்டினார். அப்போது அந்த ஓலை முனியசாமி வீட்டுக்கு செல்லும் மின்வயர் மீது விழுந்தது. இதன் காரணமாக முனியசாமி வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த முனியசாமி, ஏலம்மாளிடம் அதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை சமரசம் செய்தனர்.
ஆனாலும் பிரச்சினை நீடித்ததால் இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமரசம் செய்து இனிமேல் தகராறு செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் கோபத்தில் இருந்தனர்.
போலீஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த ஏலம்மாள், அவரது மகன் கோவிந்தசாமி ஆகியோர் மீண்டும் முனியசாமியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே தாய், மகன் ஆகியோர் கத்தியால் முனியசாமியை சரமாரியாக குத்தினர்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி முனியசாமி பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முனியசாமியை கத்தியால் குத்திக்கொன்ற ஏலம்மாள், கோவிந்தசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அக்கம்பக்கத்து வீட்டினர் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உடற்கல்வி முக்கியமானதாக கருதப்பட வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கூறினார்.
- உடற்கல்வி ஆசிரியர் லூர்து ராஜ் நன்றி கூறினார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரியில் 53-வது ஆண்டு விளையாட்டு விழா 2 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் லட்சுமணன் செட்டியார், துணைத்தலைவர் சேவுகன் செட்டியார், செயலாளர் சாந்தி ஆச்சி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக கார்த்திக் சிதம்பரம் எம்.பி., கலந்து கொண்டார்.
கல்லூரியில் முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
விழா தொடக்கத்தில் 11 துறைகள் சார்பாக அணி வகுப்பு நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் 18பேர் ஒலிம்பிக் தீபம் ஏந்தி வந்து மைதானத்தில் ஜோதியை ஏற்றி வைத்தனர்.
இங்கு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி. சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
நமது சமூகம் பரீட்சை நடத்தும் சமூகமாக இருக்கிறது. 1 கிலோ மீட்டர் தூரத்தை 6 அல்லது 8 நிமிடத்தில் கடக்கக்கூடிய மாணவ- மாணவிகளை மட்டும்தான் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். உடற்கல்வி என்பது மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும்.
மாணவ-மாணவிகள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க நல்ல உடற்கல்வி ஆசிரியர் தேவை. தமிழ்நாடு அரசு ஸ்போர்ட்ஸ் சென்டர் கட்டப்போவதாக தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். உடற்கல்வி ஆசிரியருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அடிக்கடி விளையாட்டு விழா நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். முடிவில் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் லூர்து ராஜ் நன்றி கூறினார்.
- தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 6 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
- பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 6 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படியும் தலைவர்-முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா வழிகாட்டுதலின் படியும் சிவகங்கை மாவட்டத்தில் 3 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை நீதிமன்றங்களில் போக்சோ நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதிகள் சுந்தரராஜ், கீதா, வக்கீல்கள் ராமலிங்கம், சவுந்திரபாண்டியன், குருமூர்த்தி. சேது ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 102 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 6 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 65 லட்சத்து 60 ஆயிரம் வரை வழக்கா டிகளுக்கு கிடைத்தது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி வழிகாட்டுதலின்படி பணியாளர்கள் செய்திருந்தனர்.
- பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்
- மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி உடையநேந்தல் கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் கண்மாய் நிரம்பியது.
விவசாயத்திற்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். இன்று நடந்த மீன்பிடி திருவிழாவில் செண்பகம் பேட்டை, இரணியூர், கீழசெ வல்பட்டி, குன்றக்குடி கும்மங்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் இருந்து வருகை தந்தவர்கள் மீன் பிடித்தனர்.சிறுவர்கள், பெரிய வர்கள், பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
- 58 அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கியது.
- ராஜ சேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் திருப்பாச்சேத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-முதல்-அமைச்சரால் 2022-23-ம் நிதியாண்டில் ஊரகப் பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளுக்கு தேவையான புதிய வகுப்பறை கட்டிட பணிகளை மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் 58 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 120 வகுப்ப றைகள் எண்ணிக்கையில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.17.25 கோடி மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் வருகிற கல்வி யாண்டு தொடங்குவதற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தர விட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயங்கண்ணி, ராஜ சேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆலோசனை நடந்தது.
- பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடந்தது.
இதில் தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உதய் திட்டம், பிரதமரின் பசல் பீமா யோஜனா, சமக்ர சிக்சா, தேசிய சமூக உதவித் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம், தீன்தயாள் உபாத்தியாய்-அந்தியோதயா யோஜனா, சத்துணவுத் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம்-கிராமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், தேசிய ரூர்பன் திட்டம், பிரதமரின் ஆதர்ஸ் கிராம் யோஜனா, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய, மாநில அரசின் துறைகள் ரீதியாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
இதில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை களையும் முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களை பரிந்துரை செய்து, நிதி மற்றும் சலுகைகளை பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் வெண்ணிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சேகர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மக்கள் நலத்திட்டங்களில் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்.
சிவகங்கை
சிவகங்கை சுற்று வட்டார சாலையில் உள்ள அம்மா திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை நடக்கிறது. இதனை மக்களிடம் சென்று சொல்லிவிடுவோம் என்கிற பயத்தில் அ.தி.மு.க. கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர். அ.தி.மு.க. எனும் இயக்கம் தொண்டர்களால் ஆனது. விவசாய குடும்பத்தில் பிறந்த நானும் ஒரு தொண்டன்தான். தொண்டர்களாக இருந்து இந்த இயக்கத்தை வழி நடத்தி வருகிறோம்.
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது தொண்டர்கள் உள்ளத்தில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் சிதைந்து விடுவார்கள்.
தி.மு.க.வின் 22 மாத ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் எனபதை ஸ்டாலின் உணர வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் ரூ.2கோடி செலவில் நினைவு சின்னமாக எழுதாத பேனாவை வைக்கலாம். மீதமுள்ள ரூ.79 கோடிக்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எழுதும் பேனாவை இலவசமாக வழங்கலாம்.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவில்லை. இதேபோல அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மினி கிளினிக், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்பட பல திட்டங்களை முடக்கி உள்ளது. இதுதான் தி.மு.க..வின் சாதனை.
தற்போது அ.தி.மு.க.வை சிதைக்கும் முயற்சியில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எதையும் எதிர்கொள்ளும் திறன் எங்களுக்கு உள்ளது. எங்களை பற்றி சிந்திப்பதை விடுத்து, மக்கள் நலனில் ஸ்டாலின் அக்கறை காட்ட வேண்டும். நலத்திட்ட உதவிகளை தடுத்து ஏழைகளை வஞ்சிக்கும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சிவங்கை அரண்மனை வாசலில் உள்ள ராணி வேலு நாச்சியார் சிலை, பஸ் நிலையம் முன்புள்ள எம்.ஜி.ஆர். சிலை ஆகியவற்றுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பாஸ்கரன், கோகுல இந்திரா, எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, வி.பி.பரமசிவம், திண்டுக்கல் மாநகராட்சி முதல் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சரவணன், நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், செல்வமணி, சிவாஜி, ஸ்டீபன்அருள்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மகளிரணி வெண்ணிலா சசிக்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே.பி.ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சகாய செல்வராஜ், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மோசஸ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாதவன், சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அன்பு, அமைப்பு சாரா அணி துணை செயலாளர்அழகர்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை ஊரவயல் எஸ்.பி.ராம், காரைக்குடி நகர வட்ட செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் ெஜ.ஷோபியா பிளாரன்ஸ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், நகர நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இந்த கூட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி முன்னதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து சிவகங்கை அரண்மனையில் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலு த்தினார்.
- மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
- முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் பொன்னா டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன்.இவர் அ.திமு.க. மாவட்ட பேரவை துணைச் செயலாள ராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவரது மகள் ஹரிப்பிரியாவுக்கும், மணமகன் ஜெயக்கு மாருக்கும் கடந்த பிப்ரவரி 12-ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தனது சொந்த கிராமத்தில் பிப்ரவரி 26-ந் தேதி நடந்த வரவேற்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச் சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் நடந்ததால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி குன்னத்தூரில் உள்ள ஓ.வி.எம். கார்டனில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பந்தலில் மாவட்ட குழு சேர்மன் முன்னிலையில் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, பாஸ்கரன், விஜய பாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள் உறுப்பி னர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மண மக்களை வாழ்த்திய எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.
- ரவிச்சந்திரன் நகைக்கடை உரிமையாளர்களுக்கு போன் செய்து மர்ம நபர்கள் தன்னை கடத்தி நகை மற்றும் பணத்தை பறித்து சென்று விட்டதை தெரிவித்தார்.
- போலீசார் ரவிச்சந்திரனை மீட்டு அவரை காரில் கடத்தி சென்று நகை-பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமுபிள்ளை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் காரைக்குடியில் உள்ள நகை கடைகளுக்கு மொத்தமாக தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் சென்னை சென்று தங்க நகைகளை வாங்கி கொண்டு ஒரு பஸ்சில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் காரைக்குடி வந்தார். அவரிடம் ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.2½ கோடி ரொக்கம் இருந்தது.
அவர் கழனிவாசல் பகுதியில் சென்றபோது ஒரு சொகுசு காரில் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து டிப்-டாப்பாக சில மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ரவிச்சந்திரனிடம் போலீசார்போல் நடித்து அவரை காரில் ஏறும்படி கூறினர். அவர்கள் போலீசார் என நினைத்து ரவிச்சந்திரனும் காரில் ஏறினார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் திருமயம் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ரவிச்சந்திரனை அழைத்துச் சென்று அவர் வைத்திருந்த ரூ.1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.2½ கோடி ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவரை தனியாக விட்டு விட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் நகைக்கடை உரிமையாளர்களுக்கு போன் செய்து மர்ம நபர்கள் தன்னை கடத்தி நகை மற்றும் பணத்தை பறித்து சென்று விட்டதை தெரிவித்தார். இதுபற்றி நகைக்கடை உரிமையாளர்கள் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் ரவிச்சந்திரனை மீட்டு அவரை காரில் கடத்தி சென்று நகை-பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் அவரை கடத்தி சென்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்ற னர்.
காரைக்குடியில் வியாபாரியை கடத்தி சென்று மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை பறித்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கவுன்சிலர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடும் என்று தலைவர் லதாஅண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
- முடிவில் மேலாளர் தவ மணி நன்றி கூறினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை தலைமை யில் நடைபெற்றது. ஆணை யாளர் சாந்தி வரவேற்றார்.
கூட்டத்தில் முதல் தீர்மானமாக கீழடி அருங்காட்சிய கத்தை திறந்து வைத்த தற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது.
கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. கவுன்சிலர் முருகேசன் பேசும்போது, கீழபசலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசனேந்தல் சாலையை சீரமைக்க வேண் டும்.
கீழபசலை நடுநிலைப் பள்ளி சுற்றுச்சுவரை உடனே கட்டித் தர வேண்டும். எம்.கரிசல்குளம் பகுதியில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை மோச மான சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதே போல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து வலியுறுத்தினர்.
தலைவர் லதா அண்ணா துரை பேசும்போது, கூட்டத்தில் கவுன்சி லர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் திட்ட பணிகள் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் என்றார். முடிவில் மேலாளர் தவ மணி நன்றி கூறினார்.






