என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை மாவட்டத்தில் 8,553 பயனாளிகளுக்கு ரூ.8¾ கோடி மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதமரின் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம ரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 13 அரசு மருத்துவமனைகள், 16 தனியார்மருத்துவமனைகள் அங்கீகாீக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 1 வருடத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆயிரத்து 553 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 88 லட்சத்து 72 ஆயிரத்து 675 மதிப்பீட்டில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் பயனடையவதற்கு தகுதியாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் பயனடையலாம்.

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர்குடும்ப அட்டை, ஆதார்அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து பெற்ற ஆண்டு வருமானச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மையத்தை அணுகி, இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சாின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 6 அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகள், 7 காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்கள் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளி களுக்கு இனிப்பு மற்றும் பழவகைகள், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் ஆகியவற்றை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, இணை இயக்குநர் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைச்சர் சீருடைகளை வழங்கினார்.
    • ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையையொட்டி சீருடை வழங்குவது வழக்கம்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர்- திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆண்டு தோறும் தனது தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள ஆட்டோ வாகன ஓட்டுநர்களுக்கு ஆயுதபூஜையையொட்டி சீருடை வழங்குவது வழக்கம்.

    அதன்படி சாக்கோட்டை மேற்கு ஒன்றியம் கோட்டையூர் பேரூராட்சியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கிய சீருடையை சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் டாக்டர் கே.ஆர். ஆனந்த் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.சுந்தரம், கோட்டையூர் பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை முன்னிலை வகித்தனர். இதில் கோட்டையூர் பேரூர் செயலாளர் வி.சி.டி.ராசு, மாவட்ட மீனவரணி செயலாளர் ஈஸ்வரன், முன்னாள் நகர் செயலாளர் ராமு, கவுன்சிலர் ராமன் சங்கர், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.ஆர். அழகப்பன், மாவட்ட பிரதிநிதி கானாடுகாத்தான் எஸ்.ஆர்.பி. ரமேஷ், ஒன்றிய பொருளாளர் மணசை பாண்டி, ஒன்றிய துணை செயலாளர் கோட்டையூர் கே. சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

    • நெற்குப்பையில் மலைப்பாம்பு பிடிபட்டது
    • தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள 5-வது வார்டில் பொன்னமராவதி- திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள சாத்தப்பா செட்டியார் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை 10 அடி நீளம் கொண்ட வெங்கனத்தி வகையைச் சேர்ந்த மலை பாம்பு ஒன்று வீட்டின் பின்புறம் இரை தேடி வந்தது.

    இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தீயணைப்பு துறையினர் உடனடியாக வரவில்லை. இதைத்தொடர்ந்து நெற்குப்பை பேரூராட்சி 5-வது வார்டு உறுப்பினர் சேர்க்கப்பன் தூய்மை பணியாளர்களை அழைத்தார். அதன்பேரில் வந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு தலைமையிலான தூய்மைப்பணியாளர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வேலங்குடி வனப் பகுதியில் விட்டனர்.

    • சிங்கம்புணரியில் ரசாயன கலப்பில்லாத பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • கொல்கத்தாவில் இருந்து லாலாட் அரிசி முதல் ரகமும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    சிங்கம்புணரி

    ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை நாளன்று வீடுகள், தொழிற்சாலைகள் மெக்கானிக் கடைகள் வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் ஆயுதங்களை சுத்தம் செய்து சரஸ்வதிக்கு பூஜை செய்வது வழக்கம்.

    அந்த வகையில். நாளை ஆயுதபூஜைக்கு தமிழகம் முழுவதும் பொரி உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 200 ஆண்டுகளாக பாரம்பரிய பொரிக்கு பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொரி உற்பத்தியாளர்கள் ஆயுத பூஜைக்கான பொரி

    தயாரிப்பில் இரவு-பகலாக ஈடுபட்டுள்ளனர்.

    பொரி தயாரிப்பிற்கு தேவையான அரிசி கர்நாடகத்தில் இருந்து ஐ.ஆர். 64 அரிசியும், கொல்கத்தாவில் இருந்து லாலாட் அரிசி முதல் ரகமும் கொள்முதல் செய்யப்படுகிறது. ரசாயன கலப்படம் இல்லாமல் அரிசியில் தண்ணீர், சீனி, உப்பு உள்ளிட்ட பொருட்களின் விகிதாச்சார கலவைகளால் 3 தினங்கள் ஊற வைக்கப்பட்டு எந்திரங்கள் மூலம் சரியான அளவு வெப்பத்துடன் மொரு மொரு தன்மையுடன் பொரி உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு தயார் செய்யப்படும் பொரி ஆயுதபூஜை மட்டுமின்றி விநாயகர்சதுர்த்தி, கோவில் திருவிழாக்கள் உள்பட வழிபாட்டிற்கும், தினசரி சாப்பிடும் உணவு பொருளாகவும் பயன்படுகிறது.

    தற்போது ஆயுத பூஜைக்காக ஒரு நாளைக்கு சுமார் 200 மூடை முதல் 300 மூடைகள் வரை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு மூடையில் 120 லிட்டர் கொண்ட பொரி நிரப்பப்பட்டு அனுப்பப்படுகின்றன.

    ஒரு மூடை பொரி ரூ 480 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2, 3 தலைமுறைகளாக பொரி உற்பத்தி செய்துவருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். பொரி உற்பத்தியாளா் சுந்தரசேகரன் கூறுகையில், சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் பொரி சிங்கப்பூர், அமெரிக்கா இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ''ஸ்டப் ரைஸ்'' என்ற பெயரில் அனுப்பப்படுகிறது.

    திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, மதுரை, தேனி, விருதுநகர் மாவடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. முக்கிய நகரங்களில் சிங்கம்புணரி பொரி கிடைக்கும் என்ற பதாகைகளுடன் விற்பனைசெய்யப்படுவது எங்கள் பொரிக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறோம் என்றார்.

    • அரசு திட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று ஊராட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • இந்த கூட்டத்தில் நிறைவே ற்றப்படும் தீர்மானம் நிலையான ஒன்றாக இருக்கும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கல்லல் யூனியன், பனங்குடி கிராமத்தில் காந்தியடிகள் 154-வது பிறந்தநாளையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    அரசு திட்டத்தின் மூலம் மக்களின் வளர்ச்சிக்கும், ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் பயனாளிப்பட்டியல் தோ்வு செய்வதற்கும் கிராமச்சபைக் கூட்டம் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

    இந்த கூட்டத்தில் நிறைவே ற்றப்படும் தீர்மானம் நிலையான ஒன்றாக இருக்கும். அதன்படி, மக்கள் முன்னிலையில் ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்து எதிர்க்காலத் தேவைகளை நிறைவேற்ற பேசி முடிவு செய்ய இந்தக்கூட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

    ஊராட்சியினுடைய வளர்ச்சிக்கேற்ப பொது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் வழங்க அரசு தயார்நிலையில் உள்ளது. பொதுமக்களாகிய நீங்கள் இது போன்ற திட்டங்களில் முழுஅளவில் கலந்து கொண்டு தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஊராட்சியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து, பி.நடராஜபுரம், ராமசாமி நினைவு அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் மரக்கன்று நட்டார். இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தேவகோட்டை கோட்டாட்சியர்(பொறுப்பு) ரத்தினவேல், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சொர்ணம் அசோகன், பனங்குடி ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் அருண், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, அழகுமீனாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
    • நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர பயன்பாடு இல்லாமல் இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி கூட்டம் சேர்மன் கோகிலாராணி நாராயணன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை சேர்மன் கான் முஹம்மது முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் தமது பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

    வர இருக்கும் பருவமழைையயொட்டி நகர் பகுதி மட்டுமில்லாமல் ஏனைய பிற பகுதிகளிலும் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் மற்றும் அதனை தடுக்கும் வகையில் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அது சம்பந்தமாக ஒலிபெருக்கி மூலமும், சுகாதார பணியாளர்கள் மூலமும், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் பேசப்பட்டது.

    நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர பயன்பாடு இல்லாமல் இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அதற்கு பதில் அளித்த சேர்மன், கடந்த கால நிர்வாகத்தை காட்டிலும் தற்சமயம் நான் பொறுப்பேற்றவுடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் ஒன்றான தெரு விளக்கு மேம்படுத்துதல் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகர் பகுதிகளிலும் மின்விளக்குகளை ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உள்ளேன். வரும் காலங்களில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • பெண் சிசு கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • சமூக ஆர்வலர்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனை, பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் ஆகியோர் ெதாடங்கி வைத்தனர். தனியார் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து நடத்திய இந்த பேரணியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், கல்லூரி மாணவிகள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறிவது, பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசு கொலை செய்வது அரசுக்கு விதிக்கு புறம்பாக செயல் படுவது சட்டப்படி தவறு உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். சுந்தரம்நகர் வீதி, திண்டுக்கல் சாலை, பெரியகடை வீதி வழியாக மருத்துவமனையை சென்றடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை மருத்துவர் அய்யன்ராஜ், சுபசங்கரி, டாக்டகர்கள் ஹரிபிரசாத், கோபிநாத், அருண்பிரசாத், சிவபிரியா, ரங்கமணிகண்டன், சமூக ஆர்வலர்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • காரைக்குடி பகுதியிலும் மாணவர்கள் மத்தியில் நவீன மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசை அதிகரித்துள்ளது.
    • ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் நின்று கொண்டு சென்ற ஒரு வாலிபர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார்.

    காரைக்குடி:

    தமிழகத்தில் தற்போது சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வாகன போக்கு வரத்துக்கு எளிதாக உள்ளது. இந்த நிலையில் இளைஞர்கள் மத்தியில் வெளிநாட்டு மோட்டார் சைக்கிள் மோகம் அதிகரித்து வருகிறது. அவர்கள் அதிக சிசி கொண்ட நவீன மோட்டார் சைக்கிள்களை வாங்கி அதிவேகமாக இயக்கி வருகின்றனர்.

    மற்ற வாகனங்கள் இரைச்சல் இல்லாமல் செல்லும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நவீன மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக சத்தம் எழுப்பியவாறு செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியிலும் மாணவர்கள் மத்தியில் நவீன மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசை அதிகரித்துள்ளது. பலர் இந்த வகை மோட்டார் சைக்கிள்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பாபுரம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவிகள் பலர் வீடு திரும்புவதற்காக பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக 2 நவீன மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் திடீரென சாகசம் செய்ய தொடங்கி விட்டனர்.

    முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த வாலிபர் நின்று கொண்டு சென்றார். அதனை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மாணவர்கள் அதனை செல்போனில் வீடியோ எடுத்தபடி சென்றனர்.

    மாணவிகளை கவருவதற்காக அவர்கள் சாகசம் செய்தபோது ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் நின்று கொண்டு சென்ற ஒரு வாலிபர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதில் லேசான காயத்துடன் தப்பினார். இந்த காட்சிகளை அந்த பகுதியில் நின்ற சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்தனர்.

    பொதுமக்களுக்கு இடையூறாக இந்த சாகசத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களும் அழகப்பா பாலிடெக்னிக் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதற்கிடையே மாணவர்களின் மோட்டார் சைக்கிள் சாகசம் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மாணவர்களின் இந்த அடாவடிக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களையும் கண்டு பிடித்தனர். இதில் 3 பேரை கைது செய்தனர். ஒருவர் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளார். இதில் ஒரு மாணவர் மீது கஞ்சா விற்பனை செய்த வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்தும் புல்லட் வகை மோட்டார் சைக்கிள்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வாகனங்களால் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றனர்.

    • சிவகங்கை ஆதி திராவிடர் நல விடுதியில் மாணவிகளுடன் மதுவிலக்கு ஆணையர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
    • தூய்மைப் பணியாளர்களிடம் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திட அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அலுவலக சிறு கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் மதிவாணன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகள், ஈராண்டு ஆய்வு மற்றும் கள ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, கல்வித்துறை, ஆகியத் துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவி னங்கள் ஆகியவை குறித்தும், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொ ள்ளப்பட்டு வரும் நட வடிக்கைகள் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட துறைகள் ரீதியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள், மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியவை தொடர்பாக எடுத்துரைத்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தவும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை முழு மையாக நிறைவேற்றவும், தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கு அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் எனவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் தற்போது முனைப்போடு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொண்டு திட்டங்களின் பயன்களை முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடையச் செய்ய வேண்டும் என அலுவ லர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையார் மதிவாணன் அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சியிலுள்ள உயிர் எரிவாயு ஆலை, இயற்கை எரிவாயு மின் இயக்கி நிலையத்தில் ஆய்வு செய்து, மின் உற்பத்தித்திறன் மற்றும் தூய்மைப் பணியா ளர்களிடம் பணியின் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திட அறிவுறுத்தி னார்.

    கலெக்டர் அலுவலக வளாக அருகிலுள்ள சிவகங்கை படிப்பக வட்ட மையத்தில், போட்டித் தேர்விற்கான பல்வேறு வகையான புத்தகங்கள் இருப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து சிவகங்கை ஆதிதி ராவிடர் நல மாணவியர் விடுதியில், ஆதிதிராவிடர் பள்ளி, கல்லூரி விடுதி மாணவியர்களுடன் விழிப்புணர்வு கலந்து ரையாடல் நிகழ்ச்சியில் ஆணையர் பங்கேற்றார்.

    இந்த நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி, கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), ரத்தினவேல் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொது சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை போன்ற துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை அருகே அரசுப் பள்ளிக்கு வர்ணம் பூச தலைமை ஆசிரியர் ரூ.1லட்சம் வழங்கினார். இதனால் கட்டிடங்கள் புதுப்பொலிவு பெற்றன.
    • சுவர் முழுவதும் கீறல்கள், கிறுக்கல்களால் அலங்கோலமாக காட்சியளித்தன.

    மானாமதுரை,

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் திருப்புவனம் தாலுகாக்களில் 136 தொடக்கப்பள்ளிகளும், 19 உயர்நிலைப்பள்ளிகளும், 16 மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

    அரசு பள்ளி கட்டிடங்கள் பலவும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. பள்ளி கட்டிடங்களை பராமரிக்க போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. கட்டிடங்களை மராமத்து செய்ய ஆசிரியர்களும் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 150 மாணவ-மாணவிகளும், 10 ஆசிரியர், ஆசிரியைகளும் பணிபுரிந்து வருகின்றனர். 1996-ல் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது ஆய்வு கூடம் உள்ளிட்ட 6 கட்டிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. கட்டிடங்கள் பலவும் சேதமடைந்து வர்ணம் இழந்து காட்சியளித்தன. சுவர் முழுவதும் கீறல்கள், கிறுக்கல்களால் அலங்கோலமாக காட்சிய ளித்தன.

    கடந்த மார்ச் மாதம் அருண்மொழி (வயது47) என்பவர் தலைமையாசிரியராக பொறுப்பேற்றார். அவர் பள்ளி கட்டிடங்களை பராமரிக்க முடிவு செய்து தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் அளித்தார். பின்னர் பெற்றோர், ஆசிரியர் கழகம் மூலம் ரூ.1 லட்சம் நிதி திரட்டி பள்ளி கட்டிடங்களை அனைத்தையும் புதுப்பித்து வர்ணம் பூசி புதுப்பொலிவு பெற செய்தார்.

    30 வருடங்களுக்கு மேலாக பாழ்பட்டு கிடந்த கட்டிடங்கள் புதுப்பொ லிவுடன் காட்சியளிப்பது மாணவ-மாணவியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

    மேலும் பள்ளி மாணவ- மாணவியர்களின் தனித்திறனையும் ஊக்குவித்து பல போட்டிகளில் வெற்றி பெற செய்துள்ளார். பள்ளியில் மாணவர்களுக்கு என தனியாக அமைப்பு உருவாக்கி அதன் மூலம் பள்ளி வளாகங்களில் 50-க்கும் மேற்ப்பட்ட மரங்களை நட்டு ஒவ்வொரு மரத்திற்கும் மாணவ, மாணவியர்கள் பெயர் சூட்டி தினசரி அவர்கள் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க செய்து வருகிறார்.

    பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் பூசியதுடன் சுவர்களில் பொன்மொழி களையும் எழுதி வைத்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்கது 'அறம் செய்ய விரும்புவதை விட மரம் செய விரும்பு' என எழுதி இருப்பதுதான்.

    தலைமை ஆசிரியரின் இந்த முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • சிங்கம்புணரி அருகே சித்த மருத்துவ முகாம் நடந்தது.
    • வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி,

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டாரம், சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மருதிப்பட்டியில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த இந்த முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேசன், துணைத் தலைவர் கமலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார். சூரக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆதித்யா, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சரவணன், சிங்கம்புணரி மருத்துவமனை சித்த மருத்துவர் ரஹீமா பானு ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 225 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மருந்தாளுநர் சோலைசாமி, சுகாதார ஆய்வாளர் எழில் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

    ×