என் மலர்tooltip icon

    சிவகங்கை

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் போது மனிதாபிமான அடிப்படையில் பிற நாடுகளை விட இந்தியா அதிகம் உதவிகள் செய்துள்ளது.
    • சேது சமுத்திர திட்டம் குறித்து இந்தியா தான்முடிவு செய்ய வேண்டும்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் இலங்கையின் முன்னாள் முதல்-அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் செந்தில் தொண்டமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் போது மனிதாபிமான அடிப்படையில் பிற நாடுகளை விட இந்தியா அதிகம் உதவிகள் செய்துள்ளது. இதனால் இலங்கை-இந்திய உறவு மேலும் பலப்பட்டுள்ளது. இலங்கையில் டாலர் தட்டுபாடு நிலவி உள்ளதால், பிற நாட்டு கரன்சிகளை பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஐ.எம்.எப். நிதி கிடைத்தால் இலங்கை இன்னும் இரு ஆண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. மேலும் உள்நாட்டு போருக்கு பிறகு இலங்கை அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா அதிக அளவு முதலீடு செய்தது.

    சீனாவிற்கு அதிகளவு வட்டி கட்ட வேண்டி இருந்த காரணத்தினால், இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சியடைய காரணமாக அமைந்தது. சேது சமுத்திர திட்டம் குறித்து இந்தியா தான்முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஜல்லிக்கட்டு மாநில இளைஞர் அணி தலைவர் ராஜேஷ் உடனிருந்தார்.

    • ஜெயலலிதா பிறந்தநாள் கைப்பந்து போட்டியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    • அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் சந்தனமூர்த்தி ஏற்பாட்டில் காளை யார்கோவில் ஒன்றியம் மறவமங்கலம் அரசு மேல்நி லைப்பள்ளி மைதானத்தில் கைபந்து போட்டி நடந்தது.முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி ேபாட்டியை தொடங்கி வைத்தார்.

    காளையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, ஸ்டீபன்அருள்சாமி, இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், பாசறை மாவட்ட இணை செயலாளர் மோசஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய மந்திரி வி.கே.சிங் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
    • மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் மத்திய மந்திரி வி.கே. சிங் கலந்து கொண்டு அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி இந்தி யாவில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவை வளாச்சிப்பாதையில் வழிநடத்தி செல்கிறார். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

    அனைத்து மாநிலங்க ளிலும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன்பெறும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டங்களின் பயன்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒவ்வொரு துறையைச் சார்ந்த அலுவலர்களின் கடமையாகும்.

    தகுதியான பயனா ளிகளுக்கு உரிய பயன்கள் கிடைக்கப் பெறுவதற்கான நடவடிக்கைகளை, அலு வலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர்கள் பாண்டியன் (காரைக்குடி) நாகராஜன் (மதுரை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தினசரி இரு முறை 44 டவுன் பஸ்கள் மூலம் மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இரவு இடைக்காட்டூர் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் நிலைதடுமாறிய பஸ் வீட்டின் சுவற்றில் மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.

    அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டம் சார்பில் திருப்புவனத்தில் கிளை பணிமனை இயங்கி வருகிறது. திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தினசரி இரு முறை 44 டவுன் பஸ்கள் மூலம் மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து இரவு இடைக்காட்டூர் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. உசிலம்பட்டி காசிமாயன் (41) பஸ்சை ஓட்டினார். திருப்புவனத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீதமுள்ள 15 பயணிகளுடன் கிளம்பிய பஸ், புதூரில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டின் சுவற்றில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் பஸ் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மேலும் இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சன் பயோ நேச்சுரல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • வேப்பங்கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது, மூலப்பொருட்களை எவ்வாறு சேமிப்பது குறித்து விவாதம் நடந்தது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயோ ஆராய்ச்சி மற்றும் பூச்சி கட்டுப்பாடு எனும் தலைப்பில் ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக சன் பயோ நேச்சுரல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் டாக்டர் சேது குமணன், சன் பயோ நேச்சுரல்ஸ் நிறுவன அதிகாரி சக்திவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    கல்லூரியின் கூட்ட அரங்கில் பயோ ஆர்கானிக் உரம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு குறித்த விவாதம் நடந்தது. வேப்பங்கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது, மூலப்பொருட்களை எவ்வாறு சேமிப்பது குறித்து விவாதம் நடந்தது. உதவி பேராசிரியர் கருப்புராஜ், ஆர்கானிக் உரம் தொழில்நுட்பத்தை பற்றியும், பூச்சியல் இணை பேராசிரியர் விஷ்ணுபிரியா, ஆர்கானிக் பூச்சிக்கொல்லி பற்றியும் பேசினர். இதில் கல்லூரி தாளாளர் சேதுகுமணன், பயோ நேச்சுரல்ஸ் சக்திவேல், ஆடிட்டர் எழில், இயக்குநர் கோபால் உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் 13 முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சிவகங்கை

    தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் காலமுறை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகக் சிறு கூட்ட ரங்கில் நடந்து. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அவர் பேசியதாவது:-

    பொது மன்னிப்பில் விடுதலையான சிறை வாசிகளின் மறுவா ழ்விற்கென, தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்க ளின் வாழ்வா தாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தமிழக அரசால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைவாசிகள் சிறுதொழில்கள் தொடங்கி, அவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறை மீண்டோர் சங்கத்தின் மூலம் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதனடிப்படையில், நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் பொது மன்னிப்பில் விடுதலையான 13 முன்னாள் சிறை வாசி களுக்கு, அவர்களின் மறுவாழ்விற்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான காசோலைகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த உதவித்தொகையை பெறும் பயனா ளிகள், இதன்மூலம் சிறு தொழில்கள் தொடங்கி, நல்லமுறையில் தங்களது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) சுந்தரராஜ், சிறை மீண்டோர் உதவி சங்கத்தின் செயலாளர் பகீரத நாச்சியப்பன், சிவகங்கை மண்டல நன்னடத்தை அலுவலர் சேதுராமன், நன்னடத்தை அலுவலர்கள் பிரியதர்ஷினி, பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட செயலாளர் அசோகன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகில் ஓ.பி.எஸ்.அணி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தலைமை தாங்கினார்.

    திருச்சி-ராமேசுவரம் சாலையில் சங்கரபதி அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்பு செயலா ளர் மருதுஅழகுராஜ் தலைமையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் தேவகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டனர்.

    திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் அருகே அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாவட்ட செயலாளர் அசோகன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.

    மாநில மாணவரணி செயலாளர் ஆசைத்தம்பி, நகர் செயலாளர்கள் ரவிக்குமார், பாலா, ஒன்றிய செயலாளர்கள் மருத்தாணி வினோத், தியாகராஜன், ராமசந்திரன், பாவாசி கருப்பையா, கண்ணங்குடி ஒன்றிய செயலாளர்கள் உலக்குடி பாலசுப்பிர மணியன், பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர். நினைவுநாளில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.
    • சிவகங்கை பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.

    வுமான செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக வந்தனர்.

    சிவகங்கை பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசே கரன், நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், முன்னாள் தலைவர் சிவதேவ்குமார், தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தர லிங்கம், ஒன்றிய செய லாளர்கள் கருணா கரன், அருள்ஸ்டிபன், பழனிச்சாமி, சிவாஜி, ஸ்ரீதரன், பாரதிராஜன் ஜெகசுவரன், சோனைரவி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், வக்கீல் பாரதிகண்ணன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சங்கர்ராமநாதன், குழந்தை, நகர, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • காரைக்குடியில் மகளிர் குழுக்களுக்கு ரூ.8.61 கோடி கடனுதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா நடந்தது.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்தார்.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், ரகுபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    அரசு கூடுதல் தலைமை செயலாளர், அதுல்யாமிஸ்ரா, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயல் உறுப்பினர் கார்த்திகேயன், மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் பிரியங்கா பங்கஜம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.மாங்குடி, தமிழரசி முன்னிலை வகித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 95 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கல்வித்தகுதிக்கேற்றார் போல் வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

    இளைஞர்கள் எந்த துறையில் ஆர்வ முள்ளவர்கள் என்பதை அறிந்து, அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றார்போல் பயிற்சி அளிக்க சுமார் 95 பதிவு பெற்ற நிறுவனங்களின் மூலம் ஏறத்தாழ 5 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அனைத்துத்துறைகளின் வாயிலாக, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தனிநபர் பயன்பெறுவது மட்டுமன்றி, ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக 113 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த மொத்தம் 1,641 உறுப்பினர்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.8.61 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வங்கிக்கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணை தலைவர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர்.கே.ஆர்.ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், நகர்மன்ற ஆணையாளர் லெட்சுமணன், செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி தலைவர் செல்லப்பன், தாளாளர் சத்யன், பேரூராட்சி தலைவர்கள் முகம்மது மீரா, சாந்தி சிவசங்கர், ராதிகா, சங்கீதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் வேலுநாச்சியார் சிலைக்கு நகரசபை தலைவர் மரியாதை செலுத்தப்பட்டது.
    • பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர், மற்றும் சமுதாய அமைப்பினரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 226-வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. நகர் செயலாளரும், நகர் மன்ற தலைவருமான துரை ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    அவரது தலைமையில் தி.மு.க.வினர் வேலு நாச்சியாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சி லர்கள் கார்த்திகேயன், ராமதாஸ், விஜயக்குமார், சரவணன், ராஜபாண்டி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அவரது வாரிசான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நாகராஜன், நகர செயலாளர் ராஜா ஆகியோர் வேலு நாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கருணாகரன் அருள்ஸ்டிபன், கோபி, சிவாஜி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு வங்கி தலைவர் சங்கர்ரா மநாதன், பாசறை மாவட்ட இணைச்செயலாளர் சதிஷ்.மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர், மற்றும் சமுதாய அமைப்பினரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    • ஜெயலலிதா நினைவு நாள் கபடி போட்டி நடந்தது.
    • பாகனேரிசரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அடுத்துள்ள ஏரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் ஆபரத்தனபட்டி பிரபு, சிங்கம்புணரி ஒன்றிய தலைவர் திவ்யாபிரபு ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கபடி போட்டி நடந்து வருகிறது. இதில் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அனிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

    முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.12 ஆயிரம், 3, 4-ம் பரிசாக தலா ரூ.8 ஆயிரம் ரொக்கமும், அம்மா நினைவு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டியை மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் போட்டி நடக்கிறது. தொடக்க நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் அருள்ஸ்டிபன், வழக்கறிஞர் மணிமாறன், பாகனேரிசரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×