search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்
    X

    செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக வந்தனர்.

    அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்

    • எம்.ஜி.ஆர். நினைவுநாளில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.
    • சிவகங்கை பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.

    வுமான செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக வந்தனர்.

    சிவகங்கை பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசே கரன், நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், முன்னாள் தலைவர் சிவதேவ்குமார், தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தர லிங்கம், ஒன்றிய செய லாளர்கள் கருணா கரன், அருள்ஸ்டிபன், பழனிச்சாமி, சிவாஜி, ஸ்ரீதரன், பாரதிராஜன் ஜெகசுவரன், சோனைரவி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், வக்கீல் பாரதிகண்ணன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சங்கர்ராமநாதன், குழந்தை, நகர, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×