search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை
    X

    எம்.ஜி.ஆர் சிலைக்கு ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்புச் செயலாளர் மருதுஅழகுராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை

    • தேவகோட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட செயலாளர் அசோகன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகில் ஓ.பி.எஸ்.அணி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தலைமை தாங்கினார்.

    திருச்சி-ராமேசுவரம் சாலையில் சங்கரபதி அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் அசோகன், கொள்கை பரப்பு செயலா ளர் மருதுஅழகுராஜ் தலைமையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் தேவகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டனர்.

    திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் அருகே அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாவட்ட செயலாளர் அசோகன் உறுதிமொழி வாசிக்க அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக்கொண்டனர்.

    மாநில மாணவரணி செயலாளர் ஆசைத்தம்பி, நகர் செயலாளர்கள் ரவிக்குமார், பாலா, ஒன்றிய செயலாளர்கள் மருத்தாணி வினோத், தியாகராஜன், ராமசந்திரன், பாவாசி கருப்பையா, கண்ணங்குடி ஒன்றிய செயலாளர்கள் உலக்குடி பாலசுப்பிர மணியன், பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×