என் மலர்
சிவகங்கை
- செய்களத்தூர் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி உற்சவத்தையொட்டி திருவிளக்கு வழிபாடு நடந்தது.
- 2-வது நாளில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் கடம்பவன காமாட்சி அம்மன் கோவிலில் மாசி வருடாந்திர உற்சவ விழா 2 நாட்கள் நடந்தது. இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதல் நாள் காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கோவிலில் இருந்து பூஜை பெட்டி களுடன் அருகே உள்ள வைகை ஆற்றுக்கு சென்று பூஜைகள் செய்து கரகம் சுமந்து சாமியாடி படி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு பக்தர்கள் அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினர். பின்னர் அம்மனுக்கு பூஜைகள் நடந்தன.
2-வது நாளில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர். அதைத்தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இரவு கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் கோவில் குடிமக்கள் உள்ளிட்ட திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி பூஜை செய்தனர்.
மங்கள ஆராத்தி முடிந்ததும் அலங்காரத்துடன் எழுந்தருளிய உற்சவர் காமாட்சி யம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதை ணத்தொடர்ந்து காமாட்சி யம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- ஆய்வாளர் முத்துமீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிங்கம்புணரி, பிப்.20-
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாரதிநகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகள் சுவாதிஸ்ரீ (வயது 18). சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பயோமேக்ஸ் பிரிவில் படித்து வந்தார்.
சுவாதிஸ்ரீயிடம் அவரது தாயார் மரகதவல்லி வீட்டு வேலை ஒழுங்காக செய்வதில்லை என்றும், சரியாக படிக்கவில்லை என்றும் கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதில் மன உளைச்சலுடன் இருந்த சுவாதி ஸ்ரீ வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுவாதிஸ்ரீயின் பாட்டி அறையின் கதவை திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த சுவாதி ஸ்ரீயை பார்த்து அலறினார்.தகவல் அறிந்த சிங்கம்புணரி போலீசார் பிளஸ்-2 மாணவி சுவாதி ஸ்ரீ யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி சுவாதிஸ்ரீயின் தற்கொலைக்கான காரணம் குறித்து சிங்கம்புணரி காவல் நிலைய ஆய்வாளர் முத்துமீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தச்சு எந்திரங்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சிங்கம்புணரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காசியா பிள்ளை நகரில் கார்த்திக் என்பவர் வீடு கட்டி வருகிறார். இங்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 35) என்பவர் அந்த வீட்டுக்கு மரத்தால் ஆன பொருட்களை கொண்டு கதவு, நிலை போன்ற வேலைகள் செய்து வந்தார்.
2 நாட்களுக்கு முன்பு சசிகுமார் வேலையை முடித்துவிட்டு தச்சு வேலைக்கான எந்திரங்களை அங்கேயே பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது எந்திரங்கள் காணாததை கண்டு திடுக்கிட்டார்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தீபா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஏட்டு சிவராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் காணாமல் போன எந்திரங்களை அதே கட்டிடத்தில் வேலை பார்த்த சிங்கம்புணரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா (22), அவரது நண்பர் ஸ்டாலின் (30) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். சிங்கம்புணரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அ டைத்தனர்.
- சிங்கம்புணரியில் பள்ளி கட்டிடம் கட்ட இடம் கிடைக்காமல் வருவாய்த்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
- 14 ஆண்டுகளிலேயே அரசு பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கை பட்டியில் நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் 14 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் இந்த பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று அதிகாரிகளால் பூட்டி வைக்கப்பட்டது.
கட்டப்பட்ட 14 ஆண்டுகளிலேயே அரசு பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பில்லாத ஓட்டு கட்டிடத்தில் இந்த நடு நிலைப்பள்ளி தற்காலி கமாக செயல்பட்டு வரு கிறது. இங்கு மாணவ-மாண விகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி சாலையோரத்தில் மரத்தடியில் காம்பவுண்டு சுவர் இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில் இந்த பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளி கட்டிடம் கட்ட தகுந்த இடம் கிடைக்காததால் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சுமார் ரூ.92 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டும், புதிய பள்ளிக்கட்டிட பணி தொடங்காமல் தாமதமாகி வருகிறது.
எனவே மாணவ-மாணவிகளின் பெற்றோர் விரைவில் புதிய பள்ளி கட்டிடம் அமைத்து மாண வர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
- செட்டிநாடு கலைநயத்துடன் கீழடி அகழ் வைப்பக கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
- சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி அகழ் வைப்பகக் கட்டிடத்தில், தொல்பொருட்களை காட்சிப்படு த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர்(பொறுப்பு) மணிவண்ணன் முன்னிலையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் சங்ககால தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்ப டுத்திய பொருட்களை உலகத்தமிழர்கள் பார்த்து, அறிந்து கொள்ளும் வகையில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது.
கீழடி அகழாய்வுப் பணியில் கிடைக்கும் தொல்பொருட்களை பார்க்கின்ற வகையில், தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னதாகவே, நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்ப டுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொது மக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டிடம் அமைப்பதற்கு தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது நிறைவுற்றுள்ளது.அகழாய்வு பணிகளின் போது கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
சங்க காலத்தமிழர்களின் பெருமைகளை பறைச்சாற்றும் வகையில் உலகளவில் புகழ் பெறவுள்ள கீழடி அகழ் வைப்பக கட்டி டத்தில் நடைபெற்று வரும் நிறைவுப்பணிகள் தொடர்பாக இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்துப்பணிகளும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது தொல்லியியல் துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு)சிவானந்தம், கீழடி கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்ட (சென்னை) செயற்பொ றியாளர் மணிகண்டன், மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
- ஊராட்சி செயலர் தேன்மொழி, வார்டு உறுப்பினர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் என். மேலையூர் கிராமத்தில் பழவகை மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமூக சேவகர் வல்லத்தரசு காளிதாசன், தமிழ்செல்வி லெட்சுமணன் ஆகியோர் ஏற்பாட்டில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா சோமன் ஒவ்வொருவருக்கும் கொய்யா, எலுமிச்சை,நெல்லி சீத்தா மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் "ஊர்கூடி ஊரணி காப்போம்" என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வள்ளி துரைராஜ்,கலைஞர் கிராம திட்ட பொறுப்பு அலுவலர் விஜயகுமார், உதவி தோட்டகலை அலுவலர் ஜீவிதா, ஊராட்சி செயலர் தேன்மொழி, வார்டு உறுப்பினர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஆரம்ப சுகாதார நிலையம், உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இளையான்குடி வட்டாரம், சாலைக்கிராமம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சூராணம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சுற்று வட்டாரத்திலுள்ள 22 ஆயிரம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் 8 துணை சுகாதார நிலையங்கள் மூலம் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் தொற்றா நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருகிலுள்ள கிராமங்களில் இருந்தும், தினசரி சுமார் 120 பேர் வெளிநோயாளிகள் சிகிச்சைக்காகவும், மாதந்தோறும் சராசரியாக 5 பிரசவங்களும் நடைபெறு கிறது. இதன்மூலம் அருகில் உள்ள கிராமங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மதிப்பீட்டு அறிக்கை பொதுப்பணித்துறையின் சார்பில் பெறப்பட்டு, அரசிற்கு கருத்துரு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை கலெக்டர் வழங்கி னார். துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) விஜய்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன் அரவிந்த்ரேசிஸ், மருத்துவ அலுவலர் செந்தில்குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
- சிங்கம்புணரியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
- இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு குடியிருப்பு பகுதியில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது. அங்கு கடந்த 2 ஆண்டுகளாக தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
இதுபற்றி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த பருவமழை காலத்தில் தேங்கிய மழைநீருடன் அப்பகுதி குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் சேர்ந்து சுமார் 2 ஏக்கருக்கும் மேற்பட்ட காலி மனையிடங்களில் தேங்கிள்ளது.
இதன் காரணமாக கடுமை யான துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லையால் குடியிருப்பு வாசிகள் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், ஒவ்வாமை மற்றும் தோல் அரிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே இந்தப்பகுதியில வசித்து வரும் மக்கள் தங்களுடைய வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பல மாதங்களாக தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி குடியிருப்பு பகுதிகளுக்கு அரசு கழிவுநீர் கால்வாய் அமைத்து தரும்படி இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- வேம்பத்தூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- இதில் பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினார்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேம்பத்தூர் கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமையில் நடந்தது. இந்த முகாமில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் (சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர்கள் காளைஈஸ்வரன், கிரன்காளை ஆகியோர் சொத்துஉரிமைச்சட்டம், அடிப்படை உரிமைகள் பற்றி எடுத்துரைத்தனர். வேம்பத்தூர் ஊராட்சி தலைவர் சமயமுத்து வரவேற்று பேசினார். இதில் பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினார்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா தொடங்கியது.
- விழா நாட்களில் மானாமதுரையில் இருந்து ஏனாதி செங்கோட்டைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் ஏனாதி செங்கோட்டையில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளாக நடந்த கொடியேற்ற உற்சவத்தை முன்னிட்டு கோவில் முன் மண்டபத்தில் கலச நீர் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் காலை 6மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டு பின்னர் கொடி மரத்திற்கு தர்ப்பைபுல் மலர் மாலைகள் சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் மற்றும் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனைகள் நடைபெற்றன. தலைமை பூசாரி சண்முகசுந்தரம் கொடியேற்ற நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து அம்மனுக்கான பூஜைகளை செய்தார்.
கொடியேற்ற விழாவில் கோவில் குடிமக்கள் மற்றும் ஏனாதி செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர். 21-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின்போது தினமும் மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடாகி பல்வேறு மண்டகப் பணிகளில் எழுந்தருளுல் வைபவம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக 20-ந் தேதி பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது. 21-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் படைப்பு வகைகள் சாற்றி சிவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை பூசாரி சண்முகசுந்தரம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர். விழா நாட்களில் மானாமதுரையில் இருந்து ஏனாதி செங்கோட்டைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகிறது.
- தேவகோட்டையில் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக 48 இடங்களில் 140 கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அதன்படி காமிரா அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய்-மகளை கொலை செய்து 60 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொலையில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தேவ கோட்டையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், குற்றவாளி களை கண்காணிக்கவும் போலீசார் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கும்படி வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து தேவகோட்டையில் 48 இட ங்களில் 140 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தப் பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் சாலையில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து கொ ள்ளை சம்பவம் நடந்தது. இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் ஆலோசனைபடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலையில், வர்த்தக சங்க தலைவர் காஜா ஏற்பாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தற்போது நகரில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வில்லை. இதனால் குற்ற சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்றும், எனவே நகர் பகுதிகளில் முதல் கட்டமாக 41 இடங்களில் 140 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று இன்ஸ்பெ க்டர் சரவணன் கேட்டுக் கொண்டார். அதன்படி காமிரா அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.
- மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.
- மாணவ-மாணவிகள் பண்பாட்டின் பெருமைகளை அறிய வைக்கும்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அரங்கில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.
நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைகளாகிய கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது என்பது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும், அதன் நாகரீகம் குறித்தும் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டையகால தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான அடை யாளங்களை வெளிக் கொண்டு வரும் வகையில் தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில்
முனைவுக்கான முன்னெடுப்புகள் மற்றும் வாய்ப்புகள், கல்விப்புரட்சி மற்றும் அதன் திட்டங்கள், அதனை செயல்படுத்தும் முறைகள் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு திறமை மிக்க சொற்பொழிவாளர்களை கொண்ட மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி இங்கு நடைபெற்று வருவது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய ஒன்றாகும். இதில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்பட உள்ளது.
இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பண்பாட்டிற்கும் எதிர்காலத்திற்கும் வழிகாட்டிடும் வகையில் அடிப்படையாகத் திகழும் நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழிவாளர்கள் வாயிலாகஎடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து பயன்பெறசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தமிழ் இணைய கல்விக்கழக ஆய்வு வளமையர் கே.டி.காந்திராஜன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சொற்பொழிவாளர்கள் பேராசிரியர் அருணன் மற்றும் சிவராஜா, ராம நாதன் காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ் துறைத்தலைவர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






