என் மலர்tooltip icon

    சேலம்

    • ராஜாராம் சம்பவத்தன்று மொபட்டில் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார்.
    • வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் சின்ன திருப்பதி கந்தசாமி கோவில் அருகில் வசிப்பவர் ராஜாராம் (36). இவர் சம்பவத்தன்று மொபட்டில் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார். அங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு சென்றனர்.

    சினிமா பார்த்துவிட்டு திரும்பியபோது மொபட்டின் சீட்டின் அடியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம் மாயமானது தெரியவந்து. இது குறித்து ராஜாராம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மொபட்டில் இருந்த பணத்தை திருடியது அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (21) என்பது  தெரியவந்தது.இதையடுத்து வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டுக்கு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்
    • ரொக்கம், 1/2 மற்றும் 2 பவுன் தங்கச் செயின்கள் கொள்ளை

    சேலம்

    சேலம் கிச்சிபாளையம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார். இவரது மனைவி கலா (49). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் வீட்டுக்கு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், 1/2 மற்றும் 2 பவுன் தங்கச் செயின்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து கலா கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் கல்லூரியில் சிஸ்டம் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.
    • வந்த லாரி எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாசிநாயக்கன்பட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாக்ரடீஸ். இவரது மகன் சந்தோஷ்குமார் (27). இவர் அம்மாபேட்டை கடலூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் சிஸ்டம் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கந்தாஸ்ரமத்திலிருந்து அம்மாபேட்டை டன்லப் ஜங்ஷனில் திரும்பியபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷ்குமார் உடலை

    மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • கைதிகளின் அறைகளில் ஜெய்லர் மதிவாணன் மற்றும் சிறை காவலர்கள் திடீர் சோதனை
    • சிம் கார்டு மற்றும் செல்போனை கழிவறையில் வைத்தது யார் என்பது குறித்து விசாரணை

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் உள்ள 7-வது பிளாக்கில் கைதிகளின் அறைகளில் ஜெய்லர் மதிவாணன் மற்றும் சிறை காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த கழிவறையில் ஒரு செல்போன் மற்றும் சிம் கார்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்து சிம் கார்டு மற்றும் செல்போனை கழிவறையில் வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து ஜெயிலர் மதிவாணன் சேலம் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொடநாடு கொலை வழக்கில் முக்கிய தடயமாக இருந்த இரண்டு செல்போன்களை போலீசார் தான் வாங்கி அதனை அழித்தனர்.
    • என்னை விசாரணைக்கு அழைத்தால் உரிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் அளிப்பேன்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பணிக்கனூரைச் சேர்ந்தவர் தனபால். இவரது தம்பி கனகராஜ், ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தார். கொடநாடு எஸ்டேட் வழக்கில் முக்கிய குற்றவாளியான அவர் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இறந்தார்.

    இதையடுத்து கொடநாடு வழக்கில் ஆவணங்களை அழித்ததாக, அவரது அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் மேச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

    இன்று அவர் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

    நில மோசடி வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை, ஆனால் மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னிடம் 10 லட்சம் கேட்டு தொந்தரவு செய்தார். இதனை நான் கொடுக்காததால் என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். அது மட்டும் இல்லாமல் என்னை தனி அறையில் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்ததுடன் இரும்பு ராடால் பல்லையும் அடித்து உடைத்து புடுங்கினர்.

    இதே போல ஜாமினில் இருந்து வெளிவர மேச்சேரி இன்ஸ்பெக்டர் எனது சான்றிதழ் வழங்காமல் அலைகழித்தார். மேலும் அதற்காக 50ஆயிரம் பெற்றுக்கொண்டு பின்னர் தான் ஜாமீன் வழங்கினார்.

    கொடநாடு கொலை வழக்கில் முக்கிய தடயமாக இருந்த இரண்டு செல்போன்களை போலீசார் தான் வாங்கி அதனை அழித்தனர். ஆனால் நான் தடயங்களை அழித்ததாக என் மீது அந்த வழக்கிலும் பொய் வழக்கு போடப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் கொடநாடு கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக எனது தம்பி ஏற்கனவே என்னிடம் தெரிவித்திருந்தார்.

    ஆனால் இதுவரை போலீசார் என்னை அழைத்து விசாரிக்கவில்லை. இனிமேலாவது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அப்போது என்னை விசாரணைக்கு அழைத்தால் உரிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் அளிப்பேன்.

    முதல்வரை சந்திக்கவும் தயாராக உள்ளேன். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக சந்திப்பேன், கொடநாடு கொள்ளை சம்பவத்தில் ஐந்து பேக்குகளில் இருந்த ஆவணங்களை சங்ககிரியில் ஒரு நபரிடம் 3 பேக்குகளும் சேலத்தில் உள்ள ஒருவரிடமும் 2 பேக்குகளையும் எனது சகோதரர் கொடுத்ததாக என்னிடம் கூறினார். அப்போது சயனும் உடன் இருந்தார்.

    இதற்கிடையே 2 நாட்களில் மர்மமான நிலையில் அவர் இறந்து விட்டார். முறையாக விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும். இந்த வழக்கில் இந்த கால தாமதம் ஏன்? என்று தெரியவில்லை. எனக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் வழக்கு விசாரணையை முறையாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி கிராமம் பாலமலையான் காட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து
    • மாரிமுத்து என்னிடமும், ஊரில் உள்ள மற்ற பெண்களிடமும் தவறாக பேசுவதும், இரவு நேரத்தில் வீடுகளின் கதவுகளை தட்டுவதுமாக இருந்தார்.

    சங்ககிரி;

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கஸ்தூரிபட்டி கிராமம் பாலமலையான் காட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து (52).

    தொழிலாளி

    தறித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். இவர் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு கஸ்தூரிபட்டியில் வசிக்கும் சண்முகம் (41) என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சண்முகம், அவரது மனைவி கவிதா (34) ஆகியோருடன் மாரிமுத்துக்கு தகராறு ஏற்பட்டது.

    இது குறித்தும் சண்மு கம் உறவினர்களான பூபதி, குமார், ராஜமாணிக்கம் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் சண்முகம் வீட்டிற்கு வந்தனர். இதை பார்த்த மாரிமுத்து தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோடினார்.

    கொலை

    அவரை துரத்தி சென்று வண்டியுடன் மடக்கிப் பிடித்து 5 பேரும் கஸ்தூரிபட்டி வாட்டர் டேங்க் அருகே அழைத்து சென்று மாரிமுத்துவை கட்டையாலும், கையாளும் மாறி மாறி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து மயங்கினார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்துவிட்டார்.

    புகார்

    இதுகுறித்து மாரிமுத்து வின் அண்ணன் மகன் மோகன்ராஜ் (32) சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் நேரில் சென்று பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்படி டி.எஸ்.பி. ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து கவிதா, சண்முகம், பூபதி, குமார், ராஜமாணிக்கம் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது போலீசில் கவிதா அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    வாக்குமூலம்

    மாரிமுத்து என்னிடமும், ஊரில் உள்ள மற்ற பெண்களிடமும் தவறாக பேசுவதும், இரவு நேரத்தில் வீடுகளின் கதவுகளை தட்டுவதுமாக இருந்தார். இதேபோல் கடந்த 2 வருடத்திற்கு முன்பு இரவில் வீட்டின் கதவை தட்டியபோது மாரிமுத்துவின் முகத்தில் மிளகாய் பொடி தூவினேன்.

    கோபம்

    இதனால் எங்களுக்கு அவர் மீது கோபம் இருந்து வந்தது. அடுத்த முறை இம்மாதிரி பிரச்சினை செய்தால் உயிரோடு விடக்கூடாது என முடிவு செய்தோம். அதன்படி நேற்று அதிகாலை எங்கள் வீட்டுக்கு வந்த மாரிமுத்து தகாத வார்த்தையில் பேசி பிரச்சனை செய்தார்.

    இதனால் ஆத்திரத்தில் கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மாரிமுத்துவை கீழே தள்ளிவிட்டு நீ உயிரோடு இருக்க கூடாது உயிரோடு இருந்தால் அடிக்கடி ஊரில் உள்ள பெண்களிடம் தொந்தரவு பண்ணுவ என்று சொல்லி, நான் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற தறிக்கு நாடா தள்ளும் கட்டையால் மாறி மாறி அடித்தோம். அதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் வந்து சத்தம் போடவே மாரிமுத்துவை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டோம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இதையடுத்து கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மேற்கண்ட நபர்க ளின் பட்டியலை அந்தந்த காவல் நிலைய போலீசார் தயாரித்து ஒப்படைக்க கூறப்பட்டுள்ளது.
    • இதை தனிப்பிரிவு போலீ சார் உறுதிப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் கூறியதாவது :-

    சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மேற்கண்ட நபர்க ளின் பட்டியலை அந்தந்த காவல் நிலைய போலீசார் தயாரித்து ஒப்படைக்க கூறப்பட்டுள்ளது.

    இதை தனிப்பிரிவு போலீ சார் உறுதிப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்க ளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேற்படி குற்றங்களை தடுக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    ரவுடி பட்டியலில் உள்ள வர்களை தீவிர கண்கா ணிப்பில் வைக்கவும், மாவட்டத்தில் போதை வஸ்துக்களின் புழக்கத்தை அறவே ஒழிக்க கடும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அடிதடி சம்பவத்தில் காயமடைந்த வர்கள் மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக வழக்கு பதிவு செய்து நட வடிக்கைகளை மேற்கொள்ளவும்,கடந்த 6 மாத காலமாக மருத்துவ மனைகளில் இருந்து வந்த தகவல்களின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து அந்தந்த காவல் நிலை யங்க ளில் கேட்கப்பட்டுள்ளது.

    காவல் நிலையங்களுக்கு வரும் சாமானியர்களின் புகார் மனுக்கள் மீது புகார் தன்மைக்கேற்ப உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும், குற்றவாளிகளுடன் கைகோர்க்கும் காவலர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும்,அதே சமயம் காவலர்கள் தங்கள் குறைகளை என்னிடம் கூற எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம் என்றும் அவர்களின் குறைகளின் தன்மை கேட்ப உடனடி தீர்வு காணப்படும் என்று தெரி வித்தார்.போக்குவரத்து விபத்துக்களை தடுக்கவும், விபத்தினால் ஏற்படும் மர ணங்களை குறைக்கவும், விபத்துக்கள் அதிகமாக ஏற்படும் இடங்களை தேர்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.

    மலையோர கிரா மங்களில் அன்னியர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலை யங்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    • மேட்டூர் அருகே கோல்நாயக்கன்பட்டியில் தமிழ்நாடு போலீசார் சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மரியமுத்து, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தி.மு.க மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    மேட்டூர் அருகே கோல்நாயக்கன்பட்டியில் தமிழ்நாடு போலீசார் சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மரியமுத்து, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தி.மு.க மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தங்கள் பகுதிகளில் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெற்றால் அதனை உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    • சங்ககிரி அருகே உள்ள சின்னாக்கவுண்டனூர் ஊராட்சி ஜேஜே நகரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஆதிதிராவிட நலத்துறை தனி வருவாய் ஆய்வாளர் மலர்விழி, தனி சார் ஆய்வாளர் பிரேமலதா உட்பட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    சங்ககிரி அருகே உள்ள சின்னாக்கவுண்டனூர் ஊராட்சி ஜேஜே நகரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இவ்விழாவில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமை வகித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் கல்வி, பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஆதிதிராவிட நலத்துறை தனி வருவாய் ஆய்வாளர் மலர்விழி, தனி சார் ஆய்வாளர் பிரேமலதா உட்பட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    தொடக்க விழா

    சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே உள்ள காமலா பும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை காலை இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிர மணி, ரமேஷ், என்ஜினீயர் காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் பழனிகவுண்டர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 1,418 பள்ளி களில் தொடங்கப்படுகிறது. இதனை அந்தந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைக்கிறார்கள். இதன் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ-மாணவிகள் பயன் பெறு வார்கள். இதனால் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக கொல்லி மலை வட்டாரத்தில் உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான 1,588 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    தற்போது முதல்-அமைச்சரின் காலை உண வுத் திட்டம் 15 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 673 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை யிலான 27,128 மாணவ-மாணவிகளும் மற்றும் 15 பேரூராட்சிகளில் உள்ள 59 பள்ளிகளில் படிக்கும் 3,751 மாணவ-மாணவிகளும் பயன்பெறும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 773 பள்ளிகளில் 32,497 மாணவ-மாண விகள் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் பயன்பெற உள்ளனர். முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல் பாட்டிற்கான சமையல் கூடங்களின் தயார் நிலை, உணவுப்பொட்களின் வினியோகம் மற்றும் கைபேசி செயலியில் தகவல் பதிவேற்றம் செய்வது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி டவும், கண்காணித்திடவும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா கூறி உள்ளார்.

    • ஓமலூர் கோட்டத்திற்கு உட்பட்ட தொப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ளது.
    • பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    ஓமலூர் கோட்டத்திற்கு உட்பட்ட தொப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்பட்டி, எலத்தூர், சென்னா ரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்தி மொழியில் சட்டம் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், இந்திய குற்றவியல் சட்ட ஆகிய முப்பெரும் சட்டங்களை இந்தி மொழியில் சட்டம் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் வக்கீல்கள் சிவராமன், இனியன், பீட்டர் ராஜ், பூபதி , கோகிலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×