என் மலர்tooltip icon

    சேலம்

    • 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
    • பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

    சேலம்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

    ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை அண்ணா நகரில் சுமார் 100 குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றோம். மேலும் ஆத்தூர் நகராட்சியில் நாங்கள் வீட்டு வரி, மின்சார கட்டணம் ஆகியவை செலுத்தி வருகின்றோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. பட்டா கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அவர் திடீரென வாந்தி எடுத்ததால் லாட்ஜ் ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • தேவ் ஆனந்துக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    சேலம்

    கரூர் மாவட்டம் தோட்டாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் தேவ் ஆனந்த் (29). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் அறை அடுத்து தங்கினார்.

    அப்போது அவர் திடீரென வாந்தி எடுத்ததால் லாட்ஜ் ஊழியர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் தேவ் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தேவ் ஆனந்துக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திரும ணம் நடந்துள்ளது. தற்போது 10 மாத குழந்தை உள்ளது.இந்த நிலையில் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்றும் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தேவ் ஆனந்த் சேலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

    • 4 ரோடு கல்லாங்குத்து புதூர் பகுதியில் 250 சதுர அடி நிலப்பரப்பில் வீடு கட்டுவதற்காக ௫ தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.5.93 லட்சம் கடனாக பெற்றேன்.
    • வாங்கிய கடனுக்கு இது வரை 5 லட்சம் ரூபாய் வரை கட்டி விட்டேன்

    சேலம்

    சேலம் 4 ரோடு அருகே உள்ள கல்லாங்குத்து புதூர் பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 45). இவர் கணவர் அறிவுமணி மற்றும் மகளுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கமலா மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணை கேனை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கமலா நிருபர்களிடம் கூறிய தாவது:-

    4 ரோடு கல்லாங்குத்து புதூர் பகுதியில் 250 சதுர அடி நிலப்பரப்பில் வீடு கட்டுவதற்காக 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.5.93 லட்சம் கடனாக பெற்றேன். வாங்கிய கடனுக்கு இது வரை 5 லட்சம் ரூபாய் வரை கட்டி விட்டேன்.மேலும் ரூ. 7.20 லட்சம் இன்னும் கட்ட வேண்டும் என கூறுகிறார்கள். மேலும் கடனை கட்டு மாறு அடியாட்களை வைத்து கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள். இதனால் என் வீடு பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து விசாரித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் கருத்தரங்கில் சூரிய குடும்பத்தை பற்றியும், கிரகத்தை பற்றியும் உலக அளவில் நடக்கும் ஆராய்ச்சி பற்றியும் விளக்கப்படுகிறது.
    • ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் நிலவில் சுற்றுச்சுற்றி படம் எடுத்து வருகிறது.

    சேலம்:

    சேலம் அரசு கலைகல்லூரி புவி அமைப்பியல் துறை மற்றும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான சூரிய குடும்பம் மற்றும் நிலவு தொடர்பான 2 நாள் அறிவியல் கருத்தரங்கம் சேலம் அரசு கலைக்கல்லூரியில் இன்று தொடங்கியது.

    கருத்தரங்கிற்கு அரசு கல்லூரி முதல்வர் செண்பகலட்சமி தலைமை வகித்தார். இதில் ஐதராபாத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் கலந்து கொண்டு அரசு கலை கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் செயல்பாடுகள் மற்றும் கோள்களில் உள்ள தட்ப வெட்ப நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதில் புவி அமைப்பியல் உள்தர ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், பேராசிரியர்கள், அரசு கலை கல்லூரியில் பயிலும் இயற்பியல், புவியியல் மற்றும் புவி அமைப்பியல் துறை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் கருத்தரங்கில் சூரிய குடும்பத்தை பற்றியும், கிரகத்தை பற்றியும் உலக அளவில் நடக்கும் ஆராய்ச்சி பற்றியும் விளக்கப்படுகிறது. அதே போல இந்தியாவில் எவ்வாறு ஆராய்ச்சி நடைபெற்றது என்பதை குறித்து மாணவர்களிடம் பேச இருக்கிறோம்.

    ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் நிலவில் சுற்றுச்சுற்றி படம் எடுத்து வருகிறது. அதனுடைய டேட்டா வைத்து ஆராய்ச்சி நடத்தி வருகிறோம். தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 லேண்டர் படம் எடுத்து வருகிறது. அந்த டேட்டாவை வைத்து நிலவில் இருக்கும் கனிமம், மண், கல் உள்ளிட்டவை குறித்து விரைவில் ஆராய்ச்சி செய்ய இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சேலம் மாவட்டம் ஓமலூர் மேட்டுப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் கார்த்திக், மகள்கள் நிதியா, வெண்ணிலா ஆகியார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
    • அப்போது கார்த்திக் தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் மேட்டுப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் கார்த்திக், மகள்கள் நிதியா, வெண்ணிலா ஆகியார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

    அப்போது கார்த்திக் தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்தனர். பின்னர் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் நாங்கள் அதே பகுதியில் 3 செண்ட் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். இந்த இடத்தை அருகில் உள்ளவர்கள் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்டுக்கோட்டை ஊராட்சியில் சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் கால்வாய்கள் உள்ளது.
    • சேகோ ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் காட்டுக்கோட்டை ஊராட்சியில் புதிதாக ஜவ்வரிசி ஆலை தொடங்க தனியாருக்கு அரசு அனுமதி அளித்து உள்ளது.

    இதை கைவிட வலியுறுத்தியும், புதிதாக ஆலை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காட்டுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் இன்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பெரியசாமி கிருஷ்ணமூர்த்தி, பரமசிவம், ஆனந்த், உதயகுமார், முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் குருசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து விவசாயிகள் கூறும்போது, காட்டுக்கோட்டை ஊராட்சியில் சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் கால்வாய்கள் உள்ளது. இந்த பகுதியில் சேகோ ஆலை தொடங்குவதால் கால்வாயின் நீர்வழித் தடங்கள் அழியும் அபாயம் ஏற்படும்.

    மேலும் சேகோ ஆலையில் இருந்து வெளியாரும் கழிவினால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும். எனவே இந்த சேகோ ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    இதில் விவசாயி சங்க நிர்வாகிகள் இளங்கீரன், ராமமூர்த்தி தங்கவேல், வெற்றிமணி, பழனியப்பன் சந்திரமோகன், செல்வராஜ், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோமம்பட்டி ஊராட்சி மன்றம், ஏரி வளர்ச்சி குழுவு டன் வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து சோமம்பட்டி ஏரியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் திருவிழா நடைபெற்றது.
    • பனைமரத் தோப்பு உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் பனை விதைகளை விதைத்த தன்னார்வலர்க ளுக்கு பலரும் பாராட்டு தெரி வித்துள்ளனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஊராட்சி மன்றம், ஏரி வளர்ச்சி குழுவு டன் வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து சோமம்பட்டி ஏரியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் திருவிழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மகேஸ்வரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன் முன்னிலையில் வாழப்பாடி அரிமா சங்க பட்டய தலை வர் சந்திரசேகரன், வட்டார தலைவர் ஜவஹர் மற்றும் நிர்வாகிகள் கந்தசாமி, பன்னீர்செல்வன், கலைஞர்புகழ், சிவ.எம்கோ, அன்னை அரிமா சங்க தலைவர் ஷபிராபானு, செயலர் இந்திரா காந்தி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து பனை விதைகளை விதைத்தனர்.

    பனை விதைகளை நடவு செய்த தோடு மட்டுமின்றி, தொடர்ந்து பராமரித்து பனை மரத் தோப்பை உருவாக்குவதென, ஊராட்சி மன்ற தலைவர் பால சுப்பிரமணியம், செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பொது மக்கள் உறுதியேற்றனர். பனைமரத் தோப்பு உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் பனை விதைகளை விதைத்த தன்னார்வலர்க ளுக்கு பலரும் பாராட்டு தெரி வித்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம் எடப்பாடி தேவகிரி அம்மை உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் சாமிகளுக்கு 21 மூலிகைகளால் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது
    • விழாவின் முக்கிய நிகழ்வாக 63 நாயன்மார்கள் அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி தேவகிரி அம்மை உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் சாமிகளுக்கு 21 மூலிகைகளால் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது

    விழாவின் முக்கிய நிகழ்வாக 63 நாயன்மார்கள் அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தது. இதில் சூரியனார் கோவில் ஆதீனம் 28-வது குரு மகா சந்நிதானம் திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம் பரை வாமதேவ ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சந்நிதி அருளாசி வழங்கினார்.

    சிறியவர்கள், பெண்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடினர். மேலும் பெண்கள் கோலாட்டம், இளைஞர்கள் புலி வேஷம் உள்ளிட்ட பல்வேறு வேஷம் அணிந்து ஆடி அசத்தினர். இதனை ஏராளமான பக்தர்கள் கரகோஷம் எழுப்பி பார்த்து ரசித்தனர். மேலும் சிவனடியார்கள் கலந்து கொண்டு பல்வேறு வாத்தியங்கள் முழங்க சிவா சிவா என கோஷமிட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது

    விழாவிற்கான ஏற்பாடுகளை சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை எடப்பாடி சிவமுருகன், கணேசன், சிவனடியார் ஆறுமுகம், அறக்கட்டளை உறுப்பினர்கள் கணேஷ், எடப்பாடி தாவாந்தெரு சிலம்பாட்ட கலைக் குழுவினர், விருத்தாலம், திருச்செங்கோடு, புதுச்சேரி கையிலை வாத்தியக் குழுவினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • சேலம் மாவட்டத்தில் 1,418 பள்ளி களில் இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த திட்டம் மாநிலம் முழுவதும் கடந்த 25-ந் தேதி விரிவு படுத்தப்பட்டது.

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் 1,418 பள்ளி களில் இந்த திட்டம் தற்போது செயல்ப டுத்தப்படுகிறது. இதன் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ-மாணவிகள் பயன் பெறுகிறார்கள். இதனால் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ள னர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றி யம் நெரிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் கலெக்டர் கார் மேகம் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். மேலும் ஓமலூர் ஒன்றியம் மாங்குப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ததுடன் ஊழி யர்களிடமும் கேட்டறிந்தார்.

    ஆணைக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் கார்மேகம் அந்த பகுதியில் மாணவர்க ளுடன் அமர்ந்து உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் துணை கலெக்டர் தலைமையிலான அதிகாரி கள் திடீர் ஆய்வு செய்தனர். 

    • வலியால் அலறி துடித்த 4 பேரையும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
    • வீரகனூர் பகுதியில் பதட்டம் நீடிப்பதால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கலியன். இவரது மகன் புகழேந்தி என்ற ரவிக்குமார் (37), எம்.பி.ஏ. பட்டதாரி.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு மாலில் பெயிண்ட் அடிக்கும் பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தனர். இவர்களுடன் ரவிக்குமாரின் அண்ணன் செல்வக்குமார் (44), இவர்களது சித்தப்பா மகன் யவுன் (27) ஆகியோரும் பெயிண்ட் அடித்து வந்தனர்.

    இந்நிலையில் சதீசுக்கு தெரியாமல் புதிதாக ஒரு மாலில் பெயிண்ட் அடிக்கும் காண்டிராக்டை ரவிக்குமார் எடுத்துள்ளார். இது சதீசுக்கு தெரிய வந்ததால் இது குறித்து பேசுவதற்காக பா.ஜனதா கட்சியின் தொழில் நுட்ப பிரிவு சேலம் மாவட்ட செயலாளர் சாமுவேல் (37) என்பவரை அழைத்தனர்.

    இதையடுத்து நேற்றிரவு 7 மணியளவில் வீரகனூர் அருகே பெரம்பலுர் தேசிய நெடுஞ்சாலையில் சதீஷ், ரவிக்குமார், சாமுவேல் ஆகியோர் கூடினர். அப்போது சதீசுக்கு தெரியாமல் ஏன் காண்டிராக்ட் எடுத்து செய்கிறாய் அவருடன் சேர்ந்து செய் என ரவிக்குமாரிடம், சாமுவேல் கூறினார். இதனை ரவிக்குமார் ஏற்காததால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    அப்போது ரவிக்குமார் அங்கிருந்த கல்லை எடுத்து சாமுவேலை தலையில் தாக்கினார். இதில் சாமுவேல் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து ரவிக்குமாரை கழுத்து, முகம், தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக குத்தினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு செல்வகுமாரும், யுவனும் அங்கு வந்து தடுக்க முயன்றனர். அப்போது செல்வகுமாரையும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாமுவேல் கத்தியால் குத்தினார். யுவனுக்கும் நெற்றியில் வெட்டு விழுந்தது. இதையடுத்து வலியால் அலறி துடித்த 4 பேரையும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இந்த மோதலில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார், செல்வக்குமார், யுவன் ஆகிய 3 பேரையும் மேல் சிசிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சாமுவேல் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டாக்டரிடம் கருத்து கேட்டு அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து வீரகனூர் பகுதியில் பதட்டம் நீடிப்பதால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • மேட்டூர் அணை மூலம் டெல்டாவில் 12 மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடந்து வருகிறது.
    • அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு பாளம் பாளமாக உடைந்து காணப்படுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை மூலம் டெல்டா மாவட்டத்தில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் திட்டம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இதுதவிர அணையில் இருந்து பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணை மூலம் டெல்டாவில் 12 மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடந்து வருகிறது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை நிறைவேற்றி வரும் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாகவும், மழை இல்லாததால் தண்ணீர் வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. இதன் காரணமாக அணையில் மூழ்கி இருந்த நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை வெளியே முழுமையாக தெரிகிறது.

    மேலும் அணை குட்டை போல் மாறியது. அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு பாளம் பாளமாக உடைந்து காணப்படுகிறது. மேலும் கால்நடைகள் மேய்ச்சல் பகுதியாக நீர்தேக்க பகுதிகள் மாறிவிட்டது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 17-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. அதிகபட்சமாக அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரும் குறைய தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.78 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1024 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 19.60 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 13.6 டி.எம்.சி. தண்ணீரே திறக்கப்படும். மீதி உள்ள 6 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன் வளத்துக்கு பயன்படுத்தப்படும். தற்போது திறந்து விடப்படும் 10 ஆயிரம் கனஅடியே தொடர்ந்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தால் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 13 நாட்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர். 

    • சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றது.
    • இந்த தினத்தை முன்னிட்டு நாளை (28-ந் தேதி)திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைப்பெற உள்ளது.

    சேலம்;

    சேலம் சுகவனேஷ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றது. இந்த தினத்தை முன்னிட்டு நாளை (28-ந் தேதி)திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைப்பெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் இந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். சுகவனேஷ்வரர் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா, அறங்காவலர்கள் மற்றும் கோவிலின் நிர்வாகத்தினர் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

    ×