என் மலர்
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 54) விவசாயி. இவர் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார். கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் விவசாய கிணற்றில் மோட்டார் பழுதானது.
மின் மோட்டாரை சரி செய்வதற்காக அவரது மருமகன் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் சுபாஷ் (24) என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று விவசாய நிலத்துக்கு சென்றனர்.
இருவரும் கிணற்றில் இறங்கி மோட்டாரை சரி செய்யும் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் உடல்கள் கிணற்றில் மூழ்கியது.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றனர். அப்போது விவசாய கிணற்றின் அருகில் துணி பொருட்கள் இருந்தன. இதனால் அவர்கள் கிணற்றுக்குள் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து ராணிப்பேட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரம் போராடி 2 பேரின் உடல்களை மீட்டனர். அவலூர் போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாய கிணற்றில் விஷவாயு தாக்கியது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் மின்சாரம் தாக்கி இறந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அவலூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து நாளை மறுநாள் 15-ந் தேதி 2-ம் திருநாள். இதில் கோவில் உள்பிரகாரத்தில் இருக்கும் மேட்டுகிருஷ்ணன் சன்னதியில் சீராப்தி நாதன் சேவை நிகழ்ச்சி நடைபெறும்.
16-ந் தேதி 3-ம் திருநாள் அன்று காலையில் 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகர லக்கினத்தில் இருப்பிடத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி சுந்தர ராச பெருமாள் என்ற கள்ளழகர் மலை பாதை வழியாக செல்கிறார்.
அழகர்மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் காலை 11 மணிக்கு எழுந்தருள்கிறார். தொடர்ந்து 12 மணிக்குள் கும்ப லக்கினத்தில் கள்ளழகர் பெருமாளுக்கு திருத்தைலம் சாத்தப்பட்டு அங்குள்ள நூபுர கங்கையில் தீர்த்தவாரி நடைபெறும்.
மேலும் இந்த உற்சவங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்டு உரிய பாதுகாப்புடன் அரசு வழி காட்டுதல்படி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும். தவிர தீர்த்தவாரி நிகழ்வு முடிந்து பிற்பகல் 1 மணி அளவில் கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து வந்த வழியாகவே சென்று சாமி கோவிலுக்குள் இருப்பிடம் சேருகிறார்.
இந்த திருவிழா நிகழ்ச்சிகளை யூ டியூப், முகநூல் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்து பார்த்து தரிசனம் செய்யலாம். இந்த திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
சுசீந்திரம்:
சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறையை சேர்ந்தவர் பொன் டேனியல்ராஜா (வயது 54). இவர் ராமனாதிச்சன்புதூரில் லாரி டிரைவராக பணி புரிந்து வந்தார். இன்று காலை 5.30 மணியளவில் வழுக்கம்பாறை சந்திப்பு பகுதியில் பொன் டேனியல் ராஜா பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பொன்டேனியல் ராஜா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரின் சகோதரர் பொன் அருள் ஞானஜோஸ் (47), படுகாயமடைந்த பொன் டேனியல் ராஜாவை மீட்டு மயிலாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன் டேனியல் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






