என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ராணிப்பேட்டையில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

    ராணிப்பேட்டையில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, காரை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38) கூலித்தொழிலாளி. இவர் காய் கறி வாங்குவதற்காக சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த அஜீத்குமார் (24) என்பவர் முன்விரோதம் காரணமாக முத்துக்குமாரை மடக்கி, ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, அவரை தான் வைத்திருந்த கத்தியால் உடலின் பல பாகங்களில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது குறித்து முத்துக்குமாரின் மனைவி ரேகா கொடுத்த புகாரின் பேரில், ராணிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீத்குமாரை கைது செய்தனர்.
    Next Story
    ×