என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • வாலாஜா அரசு மருத்து வமனையில் பிரேத பரிசோதனை
    • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை: 

    வாலாஜா சுவர்ண செட்டி தெருவை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 45) இவர் வாலாஜாவில் சூப்பர் மார்க்கெட் உள்பட பல்வேறு தொழில்கள், வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் அமர்நாத் தனது கடையில் உள்ள அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் அமர்நாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட அமர்நாத்திற்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர்.

    • ரேசன் அரிசி கடத்தலை தடுக்க போலீசாருக்கு உத்தரவு
    • கைப்பற்றப்பட்ட வாகனங்களை விரைவில் அப்புறப்படுத்த அறிவுரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை பிரிவில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு கடத்துவதை தடுக்கவும், ரெயில் மூலம் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், மாநிலம் மற்றும் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் அரிசி கடத்தலை தடுக்க சோதனைகளையும்,ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை அரசுக்கு பறிப்பிழக்கம் செய்து விரைவில் அப்புறப்ப டுத்தவும் அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு வேலூர் சரக டி.எஸ்.பி நந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, ராணிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • இளவரசன் கடந்த 6-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
    • போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அத்திப்பட்டு பாலாற்றிலேயே குழி தோண்டி இளவரசன் உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் இளவரசன் (வயது 27), டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் இளவரசன் கடந்த 6-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசனின் தாய் செல்வி(55) காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இளவரசனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்து உடலை பாலாற்றில் புதைத்ததாக, 4 பேர் வாலாஜா போலீசில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்தனர்.

    அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளவரசனும், லோகேஷ் என்கிற லாலு (27), பூவரசன் (24) , வாசுதேவன் (27), அருண்குமார் (33), ஆகியோர் நண்பர்கள்.

    கடந்த ஜனவரி மாதம் நடந்த மயிலாறு திருவிழாவின்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு லோகேஷ் மற்றும் அவரது நண்பர்களான பூவரசன், வாசுதேவன், அருண்குமார் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த இளவரசனை, 4 பேரும் வழிமறித்து தகராறு செய்தனர்.

    இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து பீர் பாட்டிலால் இளவரசன் தலையில் அடித்தனர். உடைந்த பீர் பாட்டிலால் வயிறு மற்றும் பல இடங்களில் குத்தியும் கொலை செய்தனர்.

    மேலும் போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அத்திப்பட்டு பாலாற்றிலேயே குழி தோண்டி இளவரசன் உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    காணாமல் போன இளவரசனை போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் போலீசில் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    முழுமையாக விசாரணை நடத்திய பிறகே கொலை செய்ததற்கான காரணம் தெரியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸரய்யா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    பாலாற்றில் இளவரசன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து வருவாய்த்துறை மற்றும் மருத்துவ குழு முன்னிலையில் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது
    • மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த ராணிப் பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தி யாவசிய மின் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல்புதுப் பேட்டை, பிஞ்சி, அல்லி குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை ராணிப்பேட்டை மின்வாரிய செயற் பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.

    • 10 பேர் காயம்
    • போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரிசெய்தனர்

    ராணிப்பேட்டை:

    சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக அரசு பஸ் சென்றது.

    அப்போது வாலாஜா டோல்கேட் அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். டிரைவர் பஸ்சை கட்டுக்குள் கொண்டு வர முயற்ச்சித்தார்.

    இருப்பினும் பஸ் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மற்றும் எஞ்சின் பாகங்கள் சேதமடைந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று கிரேன் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினர். போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரிசெய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் உதயம் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 36). இவர் சென்னை அருகே உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அருண்பிரசாத்தின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர், அருண்பிரசாத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தார்.

    அதன்படி அவர் விரைந்து வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருண்பிரசாத் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பிஞ்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் நேற்று காலை பார்த்த போது பைக்கை காணவில்லை. வீட்டு முன் நிறுத்தப்பட்டி ருந்த பைக் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து சசிகுமார் ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பைக் தொடர்பாக சோளிங்கர் தாலுகா ஆயல் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 21)என்பவரை கைது செய்தனர். பைக்கை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
    • போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட மேலபுலம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் உள்ள நடுத்தெரு, பெரிய தெரு, வண்ணாரப்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் தெருக்களில் தேங்குவதை தவிர்க்க மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்யும் தொடர்மழையின் காரணமாக, மழை நீருடன் கலந்த கழிவுநீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றத்தை வீசுகிறது.

    அதனால் கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. சுகாதார சீர்கடி ஏற்படுத்தும் வகையில் கால்வாயில் தேங்கிய நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் திரண்டு சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் அனிதா நாராயணன்,பொறியாளர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் கொய்யாமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • அன்னதானம் நடைபெற்றது
    • முருகன் புகைப்படம் பிரசாதமாக வழங்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி பாலா பீடத்தில் அமைந்துள்ள முருகன் சன்னிதியில் 25-வது கந்த சஷ்டி விழா தொடங்கியது.அன்னை பாலாவுக்கும், வள்ளி தெய்வயானை உடனுறை முருகனுக்கும் பாலாபீடத்தில் நிர்வாகி மோகன்ஜி ஷண்முக தீபம் ஏற்றி அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் ஆராதனையை செய்தார்.

    கந்த சஷ்டி விழாவுக்காகவே பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி எழுதி, டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சிந்தையெல்லாம் அந்த கந்தன் வசம், சிந்திப்பதும் கந்த சஷ்டி கவசம் என்ற இசைகுறுந்தகட்டின் மறுவெளியீட்டு விழா நடைபெற்றது. குருஜி பாபாஜி சண்முக மந்திரம் ஓதினார்.

    விழாவுக்கு திரளாக வந்த அன்பர்களுக்கு வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் புகைப்படம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நிறைவாக பாலாபீட செயலாளர் முரளிதரன் முன்னிலையில் அன்னதானம் நடைபெற்றது.

    • ரூ.20 லட்சம் மதிப்புள்ளது
    • போலீசார் ஜெயிலில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த முசிறி சாலையில் தனியார் கல்குவாரி உள்ளது.

    இந்த தனியார் கம்பெனியில் பாறை உடைப்பதற்காக வைத்திருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள ராக் பிரேக்கர் எனப்படும் எந்திரம் திருட்டு போய்விட்டதாக வாலாஜா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து திருட்டு போன பாறை உடைக்கும் எந்திரத்தை தேடி வந்தனர்.

    இதில் திருப்பத்தூரை சேர்ந்த சரத்குமார் (வயது 31) என்பவர் பாறை உடைக்கும் எந்திரத்தை மினிவேனில் ஏற்றி திருடி சென்றது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் சரத்குமாரிடம் இருந்து எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • பட்டாசு துகள்களை தீ வைக்க முயன்ற போது விபரீதம்
    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மகன் நரேஷ் (வயது 13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார்.

    இந்நிலையில் இவர் நேற்று மதியம் வெடிக்காத பட்டாசு துகள்களை ஒன்று சேர்த்து தீ வைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு துகள்கள் பலமாக வெடித்து முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியின் அவசரக்கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மகேஷ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் கோபிநாதன், துணை தலைவர் உஷாராணி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடப்பு ஆண்டில் அம்மூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்ப ட்டுள்ளது.

    இதன்படி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பயனாளிகளை தேர்வு செய்ய கணக்கெடுப்பு பணிகள் மேற்கொ ள்வது, நீர் நிலைகள், நீர்வ ரத்து கால்வாய் பணிகள் மேற்கொ ள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×