என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரியில் பாறை உடைக்கும் எந்திரத்தை திருடிய வாலிபர் கைது
    X

    கல்குவாரியில் பாறை உடைக்கும் எந்திரத்தை திருடிய வாலிபர் கைது

    • ரூ.20 லட்சம் மதிப்புள்ளது
    • போலீசார் ஜெயிலில் அடைத்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த முசிறி சாலையில் தனியார் கல்குவாரி உள்ளது.

    இந்த தனியார் கம்பெனியில் பாறை உடைப்பதற்காக வைத்திருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள ராக் பிரேக்கர் எனப்படும் எந்திரம் திருட்டு போய்விட்டதாக வாலாஜா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து திருட்டு போன பாறை உடைக்கும் எந்திரத்தை தேடி வந்தனர்.

    இதில் திருப்பத்தூரை சேர்ந்த சரத்குமார் (வயது 31) என்பவர் பாறை உடைக்கும் எந்திரத்தை மினிவேனில் ஏற்றி திருடி சென்றது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் சரத்குமாரிடம் இருந்து எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×