search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    7 பவுன் நகை கொள்ளை
    X

    7 பவுன் நகை கொள்ளை

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் உதயம் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 36). இவர் சென்னை அருகே உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அருண்பிரசாத்தின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர், அருண்பிரசாத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தார்.

    அதன்படி அவர் விரைந்து வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருண்பிரசாத் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×