என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • எடை குறைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
    • உணவின் முக்கியத்துவம் குறித்து பெண்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாரத்தில் வட்டார அளவில் 0-6 மாத எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.விராலிமலை தெற்கு தெரு அங்கா–டியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் விராலி மலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காமுமணி தலைமை தாங்கினார்.இதில் அட்மா சேர்மன் இளங்குமரன், வடுகபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றி பெட்டகத்தை வழங்கி–னார்கள். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மேரி ஜெயபிரபா ஊட்டசத்து பெட்டகம், மருத்துவ அட்டையை பற்றியும் ஊட் டச்சத்து தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் இணை உணவின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு வழங் கப்பட்டது.மேலும் இந்த நிகழவில் மேற்பார்வையாளர்கள் பர்வின்பானு, ராஜாமணி, ரோஸ்லின் மேரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சரஸ் வதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாசிப்பயறு, கேழ்வரகு பாயாசம் வழங்கப்பட்டது.

    • போலீசாரின் ரகசிய கண்காணிப்பில் சிக்கினர்
    • 2 செல்போன்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது

    ஆலங்குடி.

    ஆலங்குடி அருகே உள்ள செம்பட்டி விடுதி கடை தெருவில் லாட்டரி சீட்டுக்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் செம்பட்டி விடுதி போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது செம்பட்டிவிடுதி நால்ரோடு தனி யார் ஹோட்டல் அருகில், லாட்டரி விற்று கொண்டிருந்த முக்கம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் முருகானந்தம் (வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், லாட்டரி சீட்டுகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றைபோலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் செம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற வியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார்.இதே போல கூழையன்காடு பஸ் நிறுத்தம் அருகில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்த, கூழையன்காடு கருப்பையா மகன் சேகர் ( வயது 40 ) ஆலங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள், ரூ.9 ஆயிரத்து 150 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் நதியா அவர் மீது வழக்கு பதிந்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய பாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார்.

    • கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
    • பாதுகாப்பு முறையை பயன்படுத்தி மகசூல் அதிகளவு பெற்றிட அழைப்பு

    புதுக்கோட்டை, மார்ச் 26-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதனை கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படுவதற்கான முன் அறிவிப்பு வரப்பெற்று ள்ளது. அதன்படி, புது க்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டு 1541 ெஹக்டர் பரப்பளவில் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி நிலையில் உள்ள உளுந்து மற்றும் பயறு வகைகளை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் ஆகியவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்திட பரிந்துரை கள் பெறப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் கட்டுப்பாட்டு முறைளை கடைபிடித்து உளுந்து மற்றும் பயறு வகைகளில் கூடுதல் மகசூல் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. உளுந்து பயிரினை தாக்கும், காய் நாவாய் பூச்சிகளை ஒரு ஏக்கருக்கு டைமீத்தோயேட் 30 சதம் இசி என்ற மருந்து 200 மிலி, புள்ளி காய்துளைப்பான் மற்றும் பச்சை காய்துளைப்பான் ஆகியவற்றை கட்டுப்ப டுத்திட குளோரான்ட்ரானி லிபுரோல் 18.5 எஸ்சி என்ற மருந்து 60 மிலி, உளுந்து மற்றும் துவரை பயிர்களில் காணப்படும் சாம்பல் நோயினை கட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசின் என்ற மருந்து 200 கிராம் அல்லது நனையும் கந்தகத்தூள் என்ற மருந்து ஒரு ஏக்கருக்கு 600 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். சாகுபடி செய்யப்பட்டுள்ள தட்டை பயிரில் காணப்படும் புள்ளி காய்த்துளைப்பான்களை தயோடிகார்ப் 75 சதம் டபுள்யூ பி என்ற மருந்து 300 கிராம் என்ற அளவும் மற்றும் காய்நாவாய் பூச்சிகளை டைமீத்தோயேட் 30 சதம் இசி 200 மிலி ஆகிய என்ற மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உளுந்து மற்றும் பயறுவகை சாகுபடியில் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு புதுக்கோட்டை வேளா ண்மை இணை இயக்குநர் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

    • எந்நேரமும் விழக்கூடிய அபாயத்தில் சாய்ந்து நிற்கும் மின் கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்
    • அகற்ற போரி பொதுமக்கள் வேண்டுகோள்

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையா ர்கோவில் தாலுகா பில்லுவலசை கிராமத்தைச் சேர்ந்த கண்மாய் பில்லு வலசை, காசாங்குடி, ஏந்தல் உள்ளிட்ட கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த கண்மாய் தண்ணீரை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வகையில் பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆவுடையார்கோவிலி ருந்து மீமிசல் வரைஉயர் மின்னழுத்த மின் கம்ப க்காக, நடப்பட்டுள்ள மின் கம்பங்களில், 8 உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இதில் ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு, சாய்ந்த நிலையில் எந்த நேரத்தில் விழுமோ என்ற அபாய கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. உயிர் அழுத்த மின் கம்பம் சாய்ந்தால், தண்ணீர் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து பல உயிர்கள் காவு வாங்கி விடும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவேஅசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்குள் உடனடியாக மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும், அல்லது கண்மாய் வழி யாக செல்லக்கூடியமின்க ம்பங்களை அகற்றி,பாப்ப னேந்தல் வழியாக செல்ல க்கூடியஉயர் மின்னழுத்த மின்கம்பங்க ளிலிருந்து மின்பாதை அமைத்திட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆலங்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் 56-வது ஆண்டு விழா
    • பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    ஆலங்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பு னித அற்புத மாதா நடுநிலைப் பள்ளியின் 56வது ஆண்டு விழா பள் ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.ஆண்டு விழாவிற்கு வருகை தந்த அரசு அதிகாரிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரையும் பள்ளியின் தாளாளர் ஆர்கே அடிகளா ர் மற்றும் அருட்தந்தை கித்தேரிமுத்து ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.பள்ளியின் தலைமையாசிரியர் சூசைராஜ் நடப்பாண்டிற்கான ஆண் டறிக்கை வாசித்து தலைமை ஏற்றார்.பள்ளி ஆண்டு விழாவிற்கு சிற ப்பு விருந்தினராக வருகை தந்த புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம் ஆண்டறிக்கை மற்றும் கட்டுரை,ஓவியம் பாடல் ஆடல் மற்றும் விளையாட்டு ஆகிய போட்டிகளில் வெற்றி பெ ற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசுகளை வழங்கினார்.ஆண்டு விழாவில் பள்ளியில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றது.ஆண்டு விழாவில் திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர்கள் கருணாகரன் கவிதா தனராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாண வ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் ஆசிரியைகள் அலு வலக பணியாளர்கள் முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் விழாவில் க லந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர் ஜோசப் அ னைவருக்கும் நன்றி கூறினார்.

    • தொடர் இரு சக்கர வாகனத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்
    • 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

    பொன்னமராவதி,

    பொன்னமராவதி மற்றும் சுற்றுக்கிராமங்களில் இரு சக்கர வாகனங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து திருடப்பட்டு வந்தத நிலையில் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வெள்ளையாண்டிபட்டி விளக்கு சாலை அருகே போலீசார் வாகனச்சோதனையின் போது சந்தேகத்திற்குரிய இரு நபர்களை விசாரித்தபோது அவர்கள் தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. ஒருவர் பட்டுக்கோட்டையை சார்ந்த காளிதாஸ்( என்ற விஜய் 28) என்பதும், மற்றொருவர் திருச்சி மாவட்டம் பொருவாய் பாலக்குறிச்சி வடக்கு சொக்கநாதபட்டியை சார்ந்த முத்துப்பாண்டி(19) என்பதும் தெரியவந்தது. காளிதாஸ் என்ற விஜய் பொன்னமராவதி அம்மாநகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தொடர்ந்து பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் தலைமையில், காவல் ஆய்வாளர் தனபாலன், உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் முன்பும் ,நாட்டுக்கல் , பொன்னமராவதி சந்தைவீதி, தொட்டியம்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட இடங்களில் நான்கு இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்ததது. மேலும் நடத்திய விசாரணையில் பொன்னமராவதி சுற்றுக்ராமங்களில் மேலும் 6 இரு சக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து விஜய் என்ற காளிதாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 இரு சக்கர வாகனங்களை போலீசார் கைபற்றி , குற்றவாளிகள் காளிதாஸ் என்ற விஜய் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • மலைத்தேனி கொட்டியதில் கோயில் பூசாரி உயிரிழந்தார்
    • 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பூலாங்குறிச்சியிலிருந்து செவ்வூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள அரசினர் கலைகல்லூரி மாணவர்கள், பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் ஆகியோரை மலைத்ததேனீக்கள் கூட்டமாக வந்து விரட்டி விரட்டி கொட்டியுள்ளது. இதில் செவ்வூர் சோனையன் கோயில் பூசாரி சிவா (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மலைத்தேனீக்கள் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு தம்பதியினர் கீழே விழுந்துள்ளனர். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்களையும் மழை தேனீக்கள் முகம் மற்றும் உடல்களில் கொட்டியதில் வீக்கமடைந்து மயக்கமடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் கார்களில் சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்த சிலரை மீட்டு பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பின்னர் வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுகாயமடைந்த சிலர் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மலைத் தேனீக்கள் கொட்டி உயிரிழந்த சோனையன் கோயில் கோயில் பூசாரி சிவாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மலைத்தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 13 பேர் பொன்னமராவதி மற்றும் பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பூலாங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்
    • செல்போன்கள், பணம் பறிமுதல்

    ஆலங்குடி,

    ஆலங்குடியில் திருட்டு லாட்டரி சீட்டுகள் விற்பதாக ஆலங்குடி போலீ க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்தைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சித்தி விநாயகர் கோவில் அருகில் கம்பர் தெருவை சேர்ந் ராஜா மகன் அய்யனார் (வயது 21) செட்டிகுளம் வடகரையில் லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்தனர்,அப்போது அங்கு வந்த தனிப்படை போலீஸ் சார் கைது செய்தும் மே லும் அவரிடமிருந்து மொபைல் 2, ரூபாய் 7,350 இவைகளை பறிமுதல் செய்த போலீசார் ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்டைத்தனர்.பின்னர் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    • ஆரோக்கியராஜூக்கு சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.
    • விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 11-ந்தேதி காலை 7 மணியளவில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் 172 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இதில் ஆரோக்கியராஜ் (வயது 54) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் மற்றும் அசோக் (28), கருப்பு (22), சக்தி (20) ஆகிய 4 பேரும் சென்றிருந்தனர்.

    அவர்கள் அன்று நள்ளிரவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவை அடுத்த அனலைத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அந்த படகில் இருந்து விரித்திருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    மேலும் ஆரோக்கியராஜூக்கு சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கைதான 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மீண்டும் இதேபோல் எல்லைதாண்டி வந்து மீன் பிடித்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

    இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது
    • கலெக்டர் தலைமையில் நடந்தது

     புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் தலைமையில், மாவட்ட நிலை அலுவலர்களுடன் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்திடவும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, பாதுகாப்பு முறைகள் மற்றும் கல்வி குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கிடவும், குழந்தைகள் அனைவரும் உரிய கல்வியினை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் அறிவுறுத்தினார்.

    குழந்தை இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் வகையில் மருத்துவத்துறையின் மூலமாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளவும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிகள் திட்டத்தின் சார்பில் செயல்படு த்தப்படும் செல்ல ப்பிள்ளை திட்டம் மூலமாக கருவுற்ற தாய்மார்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிடவும், கர்ப்பக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் குறித்தும், உணவு பழக்கவழக்கங்கள் குறித்தும், அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் குழந்தைகளிடையே போதைப் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கும் வகையில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் நடத்தி தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு அவர் அறிவுறுத்தினார்.

    மேலும் எதிர்கால செல்வங்களாகிய குழந்தைகளை ஆரோக்கி யமான முறையில் வளர்த்து நாட்டிற்கும், வீட்டிற்கும் நற்பெயரை ஈட்டித் தரும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளா ரமேஷ் கிருஷ்ணன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) ராமு, வருவாய் கோட்டாட்சியர்கள் சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), குழந்தைசாமி (இலுப்பூர்), துணை இயக்குநர்கள் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), கலைவாணி (அறந்தாங்கி), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,:

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், நடைபெற்ற 'மாபெரும் தமிழ்க் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

    பின்னர்மாவட்ட கலெக்டர் பேசியதாவது,

    தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாகக் கடத்துவதற்கு, 'மாபெரும் தமிழ்க் கனவு" என்னும் இந்தப் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் தாங்கள் உணர்ந்ததை அடுத்த வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்ல முடியும். இதனால் விழிப்புணர்வுள்ள சமூகம் உருவாகும்.

    நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர்மரபும் நாகரிகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெ டுப்புகள், கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள் மற்றும் அதனைச் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு 'மாபெரும் தமிழ்க் கனவு" சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் இந்த நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறுவது நமக்கு பெரிய மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றிப் படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் உரையாற்ற உள்ள இரு சிறந்த ஆளுமைகளின் உரைகளைக் கேட்டு நீங்கள் பயனடைவதுடன், சக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும், புத்தகக் காட்சி அரங்கும் அமைக்க ப்பட்டுள்ளன. மாணவர்கள் இவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்கவிதா ராமு பேசினார்.

    • கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினர்
    • தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து

    புதுக்கோட்டை:

    தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழ நம்பியூர் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலே நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கருப்பு சட்டை அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினார்கள்.

    அதன்படி கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் முத்துக்குமார், செய்தி தொடர்பாளர் ரஹமத்துல்லா, மகளிர் அணி செயலாளர் கலைமணி, ஒன்றிய வட்டார தலைவர் ராஜேந்திரன், வட்டார செயலாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகளும், அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர் .

    புதுக்கோட்டையில் மாவட்ட தலைவர் ராஜாங்கம், செயலாளர் நாயகம், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் ஒருங்கிணைப்பில் மூக்கம்பட்டி, கம்மங்காடு, கிளிக்குடி, திருமயத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முகேஷ் ஒருங்கிணைப்பிலும் பொன்னமராவதி, மேல தானியம் அரசு உயர்நிலைப்பள்ளி, அன்னவாசல், அறந்தாங்கி, விராலிமலை, மணமேல்குடி, கரம்பக்குடி, திருவரங்குளம் ஆவுடையார் கோவில், அரிமளம். குன்னாண்டார் கோவில், மணமேல்குடி ஆகிய ஒன்றியங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் எதிர்ப்பு கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினார்கள்.

    ×