என் மலர்
புதுக்கோட்டை
- ஆலங்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் 56-வது ஆண்டு விழா
- பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
ஆலங்குடி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பு னித அற்புத மாதா நடுநிலைப் பள்ளியின் 56வது ஆண்டு விழா பள் ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.ஆண்டு விழாவிற்கு வருகை தந்த அரசு அதிகாரிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரையும் பள்ளியின் தாளாளர் ஆர்கே அடிகளா ர் மற்றும் அருட்தந்தை கித்தேரிமுத்து ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.பள்ளியின் தலைமையாசிரியர் சூசைராஜ் நடப்பாண்டிற்கான ஆண் டறிக்கை வாசித்து தலைமை ஏற்றார்.பள்ளி ஆண்டு விழாவிற்கு சிற ப்பு விருந்தினராக வருகை தந்த புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம் ஆண்டறிக்கை மற்றும் கட்டுரை,ஓவியம் பாடல் ஆடல் மற்றும் விளையாட்டு ஆகிய போட்டிகளில் வெற்றி பெ ற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசுகளை வழங்கினார்.ஆண்டு விழாவில் பள்ளியில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றது.ஆண்டு விழாவில் திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர்கள் கருணாகரன் கவிதா தனராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாண வ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் ஆசிரியைகள் அலு வலக பணியாளர்கள் முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் விழாவில் க லந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர் ஜோசப் அ னைவருக்கும் நன்றி கூறினார்.
- தொடர் இரு சக்கர வாகனத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்
- 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
பொன்னமராவதி,
பொன்னமராவதி மற்றும் சுற்றுக்கிராமங்களில் இரு சக்கர வாகனங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து திருடப்பட்டு வந்தத நிலையில் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வெள்ளையாண்டிபட்டி விளக்கு சாலை அருகே போலீசார் வாகனச்சோதனையின் போது சந்தேகத்திற்குரிய இரு நபர்களை விசாரித்தபோது அவர்கள் தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. ஒருவர் பட்டுக்கோட்டையை சார்ந்த காளிதாஸ்( என்ற விஜய் 28) என்பதும், மற்றொருவர் திருச்சி மாவட்டம் பொருவாய் பாலக்குறிச்சி வடக்கு சொக்கநாதபட்டியை சார்ந்த முத்துப்பாண்டி(19) என்பதும் தெரியவந்தது. காளிதாஸ் என்ற விஜய் பொன்னமராவதி அம்மாநகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தொடர்ந்து பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் தலைமையில், காவல் ஆய்வாளர் தனபாலன், உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் முன்பும் ,நாட்டுக்கல் , பொன்னமராவதி சந்தைவீதி, தொட்டியம்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட இடங்களில் நான்கு இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்ததது. மேலும் நடத்திய விசாரணையில் பொன்னமராவதி சுற்றுக்ராமங்களில் மேலும் 6 இரு சக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து விஜய் என்ற காளிதாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 இரு சக்கர வாகனங்களை போலீசார் கைபற்றி , குற்றவாளிகள் காளிதாஸ் என்ற விஜய் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- மலைத்தேனி கொட்டியதில் கோயில் பூசாரி உயிரிழந்தார்
- 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பூலாங்குறிச்சியிலிருந்து செவ்வூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள அரசினர் கலைகல்லூரி மாணவர்கள், பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் ஆகியோரை மலைத்ததேனீக்கள் கூட்டமாக வந்து விரட்டி விரட்டி கொட்டியுள்ளது. இதில் செவ்வூர் சோனையன் கோயில் பூசாரி சிவா (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மலைத்தேனீக்கள் விரட்டியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு தம்பதியினர் கீழே விழுந்துள்ளனர். மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்களையும் மழை தேனீக்கள் முகம் மற்றும் உடல்களில் கொட்டியதில் வீக்கமடைந்து மயக்கமடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் கார்களில் சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்த சிலரை மீட்டு பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பின்னர் வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுகாயமடைந்த சிலர் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மலைத் தேனீக்கள் கொட்டி உயிரிழந்த சோனையன் கோயில் கோயில் பூசாரி சிவாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மலைத்தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 13 பேர் பொன்னமராவதி மற்றும் பூலாங்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பூலாங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்
- செல்போன்கள், பணம் பறிமுதல்
ஆலங்குடி,
ஆலங்குடியில் திருட்டு லாட்டரி சீட்டுகள் விற்பதாக ஆலங்குடி போலீ க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்தைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சித்தி விநாயகர் கோவில் அருகில் கம்பர் தெருவை சேர்ந் ராஜா மகன் அய்யனார் (வயது 21) செட்டிகுளம் வடகரையில் லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்தனர்,அப்போது அங்கு வந்த தனிப்படை போலீஸ் சார் கைது செய்தும் மே லும் அவரிடமிருந்து மொபைல் 2, ரூபாய் 7,350 இவைகளை பறிமுதல் செய்த போலீசார் ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்டைத்தனர்.பின்னர் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- ஆரோக்கியராஜூக்கு சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.
- விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 11-ந்தேதி காலை 7 மணியளவில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் 172 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இதில் ஆரோக்கியராஜ் (வயது 54) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் மற்றும் அசோக் (28), கருப்பு (22), சக்தி (20) ஆகிய 4 பேரும் சென்றிருந்தனர்.
அவர்கள் அன்று நள்ளிரவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவை அடுத்த அனலைத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அந்த படகில் இருந்து விரித்திருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும் ஆரோக்கியராஜூக்கு சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கைதான 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மீண்டும் இதேபோல் எல்லைதாண்டி வந்து மீன் பிடித்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது
- கலெக்டர் தலைமையில் நடந்தது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் தலைமையில், மாவட்ட நிலை அலுவலர்களுடன் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்திடவும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, பாதுகாப்பு முறைகள் மற்றும் கல்வி குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கிடவும், குழந்தைகள் அனைவரும் உரிய கல்வியினை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் அறிவுறுத்தினார்.
குழந்தை இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் வகையில் மருத்துவத்துறையின் மூலமாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளவும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிகள் திட்டத்தின் சார்பில் செயல்படு த்தப்படும் செல்ல ப்பிள்ளை திட்டம் மூலமாக கருவுற்ற தாய்மார்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிடவும், கர்ப்பக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் குறித்தும், உணவு பழக்கவழக்கங்கள் குறித்தும், அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் குழந்தைகளிடையே போதைப் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கும் வகையில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் நடத்தி தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும் எதிர்கால செல்வங்களாகிய குழந்தைகளை ஆரோக்கி யமான முறையில் வளர்த்து நாட்டிற்கும், வீட்டிற்கும் நற்பெயரை ஈட்டித் தரும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளா ரமேஷ் கிருஷ்ணன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) ராமு, வருவாய் கோட்டாட்சியர்கள் சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), குழந்தைசாமி (இலுப்பூர்), துணை இயக்குநர்கள் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), கலைவாணி (அறந்தாங்கி), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது
- கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,:
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், நடைபெற்ற 'மாபெரும் தமிழ்க் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.
பின்னர்மாவட்ட கலெக்டர் பேசியதாவது,
தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாகக் கடத்துவதற்கு, 'மாபெரும் தமிழ்க் கனவு" என்னும் இந்தப் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் தாங்கள் உணர்ந்ததை அடுத்த வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்ல முடியும். இதனால் விழிப்புணர்வுள்ள சமூகம் உருவாகும்.
நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர்மரபும் நாகரிகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெ டுப்புகள், கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள் மற்றும் அதனைச் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு 'மாபெரும் தமிழ்க் கனவு" சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இந்த நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறுவது நமக்கு பெரிய மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றிப் படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் உரையாற்ற உள்ள இரு சிறந்த ஆளுமைகளின் உரைகளைக் கேட்டு நீங்கள் பயனடைவதுடன், சக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும், புத்தகக் காட்சி அரங்கும் அமைக்க ப்பட்டுள்ளன. மாணவர்கள் இவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்கவிதா ராமு பேசினார்.
- கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினர்
- தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து
புதுக்கோட்டை:
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழ நம்பியூர் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலே நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கருப்பு சட்டை அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினார்கள்.
அதன்படி கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் முத்துக்குமார், செய்தி தொடர்பாளர் ரஹமத்துல்லா, மகளிர் அணி செயலாளர் கலைமணி, ஒன்றிய வட்டார தலைவர் ராஜேந்திரன், வட்டார செயலாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகளும், அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர் .
புதுக்கோட்டையில் மாவட்ட தலைவர் ராஜாங்கம், செயலாளர் நாயகம், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் ஒருங்கிணைப்பில் மூக்கம்பட்டி, கம்மங்காடு, கிளிக்குடி, திருமயத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முகேஷ் ஒருங்கிணைப்பிலும் பொன்னமராவதி, மேல தானியம் அரசு உயர்நிலைப்பள்ளி, அன்னவாசல், அறந்தாங்கி, விராலிமலை, மணமேல்குடி, கரம்பக்குடி, திருவரங்குளம் ஆவுடையார் கோவில், அரிமளம். குன்னாண்டார் கோவில், மணமேல்குடி ஆகிய ஒன்றியங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் எதிர்ப்பு கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினார்கள்.
- மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- தேர்வு எழுத விருப்பமில்லாமல் விபரீதம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள பனங்குளம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் தரணியா (வயது17). இவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தேர்வு எழுத விருப்பமிலலை என்று கூறிவந்துள்ளார். தேர்வு இன்று (24-ந் தேதி) தொடங்க உள்ள நிலையில் நேற்று மாலை மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரசு கல்லூரியில் செஸ் போட்டி நடைபெற்றது
- 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியை, கல்லூரி முதல்வர் திருச்செல்வம் தொடங்கி வைத்தார். 7 வயது முதல் மூத்தோர் வரை 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 200-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- சட்டசபையில் மானியக்கோரிக்கையின்போது அறிவிக்க வேண்டும்
- மாநில ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்
விராலிமலை,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:-கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை என் மீது மக்களுக்கு உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மனுக்கள் என்பது வெறும் காகிதங்கள் அல்ல. மனுக்களை நிறைவேற்றுவது நம் கடமை என அவர் தெரிவித்துள்ளார். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒரு லட்சம் மனுக்களை பகுதிநேர ஆசிரியர்கள் அனுப்பி வருகிறோம்.மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்-அமைச்சர் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வார் என எதிர்பார்ப்போடு உள்ளார்கள். 10 ஆண்டு பணி என்பதையும் கடந்து 12-வது ஆண்டாக அரசு பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம். பெரும்பாலோர் 50 வயதை கடந்து விட்டார்கள்.பணி நிரந்தரம் செய்தால்கூட சிலகாலம் தான் பணியாற்ற முடியும். ரூ.10 ஆயிரம் என்ற குறைந்த சம்பளத்தில் பணி பாதுகாப்பு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம். தி.மு.க. 181-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, முதல்வர் தான் ஆணையிட வேண்டும்.பட்ஜெட்டில் எதிர்பார்த்திருந்த நிலையில், மானியக்கோரிக்கைலாவது பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உலக தண்ணீர் தினத்தை கிராமசபை கூட்டம் நடைபெற்றது
- கலெக்டர் கவிதா ராமு பங்கேற்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், ஒன்றியம், 9பி நத்தம்பண்ணை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, எம்.எல்.ஏ. முத்துராஜா கலந்து கொண்டனர்.உலக தண்ணீர் தினமான நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. நத்தம்பண்ணை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு எம்.எல்.ஏ. முத்துராஜா கலந்து கொண்டனர்.கலெக்டர் பேசும் போது, பொதுமக்கள் அனைவரும் தண்ணீரின் அருமைகருதி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு அவற்றின் மூலம் பயனடைந்து, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர் செல்வி, ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, ஒன்றியக்குழுத் தலைவர் சின்னையா, வருவாய் கோட்டட்சியர் முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சம்பத், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ், துணை இயக்குநர் (தோட்டக்கலை) குருமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன், வட்டா ட்சியர் விஜயலெட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அலுவலலர்கள் கலந்து கொண்டார்கள்.






