என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • 62 கிலோ எடையில் கிராம மக்களால் செய்யப்பட்டுள்ளது
    • வெற்றி ஆண்டவர் அய்யானார் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஊர்வலம்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி வெற்றி ஆண்டவர் அய்யனார் கோயில் பங்குனி திருவிழா நேற்று காப்பு கட் டுதல் தொடங்கியது. அந்த பகுதிகளில் உள்ள 12 கிராமங்களுக்குச் சொந்தமான இந்த கோயிலில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று பங்குனி உத்திரத்தன்று நிறைவு பெறுவது வழக்கம். மழை வேண்டியும் அக்கி ராமத்தில் வேளாண்மை செழிக்கவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவை முன்னிட்டு இந்தக் கோயிலில் இருந்து 62 கிலோ எடையில் வெள்ளி குதிரை வாகனம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளி குதிரை வாகனத்தை மாட்டு வண்டியில் ஊர்வலமா க எடுத்து சென்று கோயிலூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான அய்யனார் சி லையை அந்த குதிரை வாகனத்தில் அலங்கரித்து அமர வைத்து அத னை மீண்டும் கிராம மக்கள் குப்பகுடி கொண்டுவந்தனர்.வெள்ளி குதிரையில் வீட்டில் இருந்த ஐம்பொன்னாலான அலங்கரி க்கப்பட்ட அய்யனார் சிலைக்கு மக்கள் வழிநெடுகிலும் சிறப்பு பூ ஜைகள் செய்து வழிபட்டனர்..மேலும் கோயிலில் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்த தங்க ஆப ரண பெட்டிகளையும் பலத்த பாதுகாப்போடு எடுத்து வந்த கிராம மக்கள் அதனை ஒவ்வொரு நாள் திருவிழாவின் போதும் அய்யனா ருக்கு அலங்கரித்து சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் ஆராதனை விழாக்களை மேற்கொள்ள உள்ளனர். இன்று தொடங்கிய விழா இன்னும் பத்து நாட்களுக்கு நடைபெறவு ள்ள நிலையில் நாள் தோறும் சுவாமி வீதியுலா காட்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் களைகட்ட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுக ளை 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    • கருங்காடு புலிக்குட்டி அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • திருவாடுதுறை ஆதீனம் பங்கேற்பு

    ஆவுடையார்கோவில்,

    கருங்காடு கிராமத்தில்உள்ள பூர்ணபுஷ்கலா அம்பிகை சமேத ஸ்ரீ புலிக்குட்டி அய்யனார், ஸ்ரீ கருங்காளியம்மன், ஸ்ரீ காத்தான் சாம்பான் ஆகிய சாமி ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 25ம் தேதி சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3நாட்களாக 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் புலிக்குட்டி அய்யனார் சாமி அருள் பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பொன்னமராவதி அமல அன்னை பள்ளியில் நடைபெற்றது
    • 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

    பொன்னமராவதி,

    பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு அருள்சகோதரி லீமா ரோஸ் தலைமைவகித்தார். பள்ளியின் முதல்வர் ச.ம.மரியபுஷ்பம் வரவேற்றார். விழாவில் கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்க்கு தொழிலதிபர் ஏ.பி.மணிகண்டன், மருத்துவர் ஆ.அழகேசன், ஊராட்சி மன்றத்தலைவர் தொட்டியம்பட்டி கீதா சோலையப்பன், கண்டியாநத்தம் செல்வி முருகேசன், கொப்பனாபட்டி மேனகா மகேஸ்வரன், வர்த்தகர் கழகத்தலைவர் எஸ்கேஎஸ்.பழனியப்பன் ஆகியோர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். ஒலியமங்கலம் பங்குத்தந்தை ஏஎம்.லூர்துசாமி, புனித ஆரோக்கிய அன்னை ஆலய செயலர் யு.சிரில் ஞானராஜ் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துணை முதல்வர் ஆர்.பிரின்ஸ் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.ஆசிரியர்கள் செ.பாலமுரளி, ஜெ.வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆசிரியை ரிபினா நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் புத்தக அறிமுக விழா நடைபெற்றது
    • சிறுபான்மையினரின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கவிஞர் நந்தலாலா பேச்சு

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கவிஞர் நந்தலாலா எழுதிய "ஊறும் வரலாறு" புத்தகத்தின் அறிமுக விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் நந்தலாலா பேசியதாவது,ஒருவரை அவர் வாழ்நாளுக்குள் பாராட்டி விடுவதும், கொண்டாடிவிடுவதும் அவசியம். சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியத்தின் இருக்கிறோம்.பெண் படைப்பாளர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது கணவர்கள் மனிதாபிமானத்தோடு துணை நிற்பதை காண்கிறேன். இந்த தொடரில் கவிஞர் வாலி பற்றி ஏன் எழுதவில்லை என கேட்டார்கள். வாலியைப் பற்றி யார் வேண்டுமானாலும் எழுதலாம். குமுதினி போன்றோரை எழுதத்தான் நந்தலாலா வேண்டும் என்றார்.விழாவிற்கு தமுஎகச மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்டாலின் சரவணன் அறிமுக உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் நா.முத்துநிலவன் தொடக்கவுரையாற்றினார். ரமா ராமநாதன், உஷாநந்தினி ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக கபார்க்கான் வரவேற்க, மாவட்ட பொருளாளர் கி. ஜெயபாலன் நன்றி கூறினார். சாமி கிரீஸ் தொகுத்து வழங்கினார்.

    • அரசு திட்டங்களை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அழைப்பு
    • அரசின் திட்டங்களை அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஆயுதப் படை திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 110 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.பின்னர் அவர் கூறியதாவது,தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த நலத்திட்டங்கள் பெறும் பெண்கள் அனைவரும் இதனை தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை அரசு அலுவலர்கள் நல்ல முறையில் செயல்படுத்தி பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. முத்துராஜா வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ் செல்வன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) சியாமளா வட்டாட்சியர் விஜயலெட்சு, சமூக நலத்துறை தொழில் கூட்டுறவு அலுவலர் மனோகரன், விராலிமலை சந்திரசேகரன், எம்.எம்.பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • காதல் திருமணம் ெசய்தவர்களை இரு தரப்பு பெற்றோர்கள் உதறினர்
    • அறிவுரை சொல்லி அனுப்பி வைத்த போலீசார்

    ஆலங்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் தர்மர் கோவில் சேர்ந்த ராஜேந்திரன் மகன் குமாரவேல் (வயது 33). கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார்.இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அண்ணா நகர் பகுதியில் வேலை பார்த்தபோது, அருகில் இருந்த பட்டபிரான் தெருவை சேர்ந்த மகிமைதாஸ் மகள் பிரித்தி (வயது 21) என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கீரமங்கலம் சிவன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தங்களது பெற்றோர்களால் ஆபத்து வரும் என்று உணர்ந்த அவர்கள், பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் கா வல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவகி, பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கு அவர்கள் தேவையில்லை என்று இரு வீட்டாரும் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர். பின்னர் போலீசார் திருமணம் செய்த காதல் ஜோடிக்கு அறிவுரைகள் கூறி அனுப்பிவைத்தனர்.

    • 4 கிராம மக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்
    • கட்லா, விரால், ஜிலேபி வகை மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி

    பொன்னமராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்று வட்டாரத்தில் மதியாணி, தேனூர்,ரெட்டியபட்டி, கண்டியா நத்தம் புதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.நெல் அறுவடைக்கு பின்னர் ஊர் விவசாய பாசன கன்மாய்களில் தண்ணீர் வற்றத் தொடங்கும்.அப்போது ஊர் முக்கியஸ்தர்களால் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீன்பிடித் திருவிழா நடைபெறும். இவ்வாறு நடைபெறும் மீன்பிடித் திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களால் வெள்ளை வீசப்பட்ட பின்னர் கிராம மக்கள் கம்மைகளில் துள்ளி குதித்து தங்கள் கையில் வைத்திருந்த மீன்பிடி உபகரணமான கூடை ,வலை போன்றவற்றை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர்.இதில் நாட்டு வகை மீன்களான 5 கிலோ எடை கொண்ட கட்லா மீனும் , 3 கிலோ எடை கொண்ட விரால் வகை மீன்களும் ஜிலேபி கெண்டை அயிரை மீன்கள் கிடைத்தன இதனை மகிழ்ச்சியோடு பிடித்துச் சென்றனர்.பொன்னமராவதி அருகில் உள்ள உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் இன்று இரவு நடைபெறுவதால் காப்பு கட்டப்பட்ட 15 தினங்களுக்கு எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளோ சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறாது. அவ்வாறு நடைபெறும் சுப தினங்கள் 15 தினங்களுக்குப் பின்னர் தான் நடைபெறும் ஆகையால் இன்று பொன்னமராவதி சுற்று வட்டாரத்தில் நான்கு கிராமங்களில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
    • மாநில செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் கள் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கிட கோரி யும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க கோருதல், பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயா;வு வழங்க கோருதல், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அரங்க.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப.உலகநாதன் முன்னிலை வகித்தார்.இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடை ப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன், சத்தியமூர்த்தி ஆகியோரும், அறந்தாங்கியில் மாவட்ட பொருளாளர் பொய்யா மொழி மற்றும் லோகநாதன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாண்டியன், வசந்த குமார், உதயசூரியன், ஜெகதீஷ், அருண் நேரு, வினோத் குமார், ரமேஷ், வின்சென்ட், ஞானசேகர், ஈடித்ரேனா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    • எடை குறைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
    • உணவின் முக்கியத்துவம் குறித்து பெண்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாரத்தில் வட்டார அளவில் 0-6 மாத எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.விராலிமலை தெற்கு தெரு அங்கா–டியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் விராலி மலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காமுமணி தலைமை தாங்கினார்.இதில் அட்மா சேர்மன் இளங்குமரன், வடுகபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றி பெட்டகத்தை வழங்கி–னார்கள். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மேரி ஜெயபிரபா ஊட்டசத்து பெட்டகம், மருத்துவ அட்டையை பற்றியும் ஊட் டச்சத்து தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் இணை உணவின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு வழங் கப்பட்டது.மேலும் இந்த நிகழவில் மேற்பார்வையாளர்கள் பர்வின்பானு, ராஜாமணி, ரோஸ்லின் மேரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சரஸ் வதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாசிப்பயறு, கேழ்வரகு பாயாசம் வழங்கப்பட்டது.

    • போலீசாரின் ரகசிய கண்காணிப்பில் சிக்கினர்
    • 2 செல்போன்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது

    ஆலங்குடி.

    ஆலங்குடி அருகே உள்ள செம்பட்டி விடுதி கடை தெருவில் லாட்டரி சீட்டுக்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் செம்பட்டி விடுதி போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது செம்பட்டிவிடுதி நால்ரோடு தனி யார் ஹோட்டல் அருகில், லாட்டரி விற்று கொண்டிருந்த முக்கம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் முருகானந்தம் (வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், லாட்டரி சீட்டுகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றைபோலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் செம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற வியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார்.இதே போல கூழையன்காடு பஸ் நிறுத்தம் அருகில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்த, கூழையன்காடு கருப்பையா மகன் சேகர் ( வயது 40 ) ஆலங்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள், ரூ.9 ஆயிரத்து 150 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் நதியா அவர் மீது வழக்கு பதிந்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய பாரதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார்.

    • கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
    • பாதுகாப்பு முறையை பயன்படுத்தி மகசூல் அதிகளவு பெற்றிட அழைப்பு

    புதுக்கோட்டை, மார்ச் 26-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதனை கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படுவதற்கான முன் அறிவிப்பு வரப்பெற்று ள்ளது. அதன்படி, புது க்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டு 1541 ெஹக்டர் பரப்பளவில் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி நிலையில் உள்ள உளுந்து மற்றும் பயறு வகைகளை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் ஆகியவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்திட பரிந்துரை கள் பெறப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் கட்டுப்பாட்டு முறைளை கடைபிடித்து உளுந்து மற்றும் பயறு வகைகளில் கூடுதல் மகசூல் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. உளுந்து பயிரினை தாக்கும், காய் நாவாய் பூச்சிகளை ஒரு ஏக்கருக்கு டைமீத்தோயேட் 30 சதம் இசி என்ற மருந்து 200 மிலி, புள்ளி காய்துளைப்பான் மற்றும் பச்சை காய்துளைப்பான் ஆகியவற்றை கட்டுப்ப டுத்திட குளோரான்ட்ரானி லிபுரோல் 18.5 எஸ்சி என்ற மருந்து 60 மிலி, உளுந்து மற்றும் துவரை பயிர்களில் காணப்படும் சாம்பல் நோயினை கட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசின் என்ற மருந்து 200 கிராம் அல்லது நனையும் கந்தகத்தூள் என்ற மருந்து ஒரு ஏக்கருக்கு 600 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். சாகுபடி செய்யப்பட்டுள்ள தட்டை பயிரில் காணப்படும் புள்ளி காய்த்துளைப்பான்களை தயோடிகார்ப் 75 சதம் டபுள்யூ பி என்ற மருந்து 300 கிராம் என்ற அளவும் மற்றும் காய்நாவாய் பூச்சிகளை டைமீத்தோயேட் 30 சதம் இசி 200 மிலி ஆகிய என்ற மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உளுந்து மற்றும் பயறுவகை சாகுபடியில் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு புதுக்கோட்டை வேளா ண்மை இணை இயக்குநர் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

    • எந்நேரமும் விழக்கூடிய அபாயத்தில் சாய்ந்து நிற்கும் மின் கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்
    • அகற்ற போரி பொதுமக்கள் வேண்டுகோள்

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையா ர்கோவில் தாலுகா பில்லுவலசை கிராமத்தைச் சேர்ந்த கண்மாய் பில்லு வலசை, காசாங்குடி, ஏந்தல் உள்ளிட்ட கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த கண்மாய் தண்ணீரை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வகையில் பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆவுடையார்கோவிலி ருந்து மீமிசல் வரைஉயர் மின்னழுத்த மின் கம்ப க்காக, நடப்பட்டுள்ள மின் கம்பங்களில், 8 உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இதில் ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு, சாய்ந்த நிலையில் எந்த நேரத்தில் விழுமோ என்ற அபாய கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. உயிர் அழுத்த மின் கம்பம் சாய்ந்தால், தண்ணீர் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து பல உயிர்கள் காவு வாங்கி விடும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவேஅசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்குள் உடனடியாக மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும், அல்லது கண்மாய் வழி யாக செல்லக்கூடியமின்க ம்பங்களை அகற்றி,பாப்ப னேந்தல் வழியாக செல்ல க்கூடியஉயர் மின்னழுத்த மின்கம்பங்க ளிலிருந்து மின்பாதை அமைத்திட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×