search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attemptedmurder"

    • மனைவியை கொலை செய்ய கணவர் முயன்றது பரபரப்பை எற்படுத்தி உள்ளது
    • மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொல்ல முயற்சி

    ஆலங்குடி,

    தோப்புக்கொல்லையை சேர்ந்தவர் வீரமுத்து மனைவி கவிதா (வயது 34). இவர்களுக்கு வீரதரன், தயாளன் என்ற இரு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் வீரமுத்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் வீரமுத்து, கவிதாவின் மீது மண்எண்ணெய் ஊற்றி கொலை செய்ய முன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து வீரமுத்துவும், இவர் பேசி வந்த பெண்ணும் சேர்ந்து கவிதாவை தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்து கவிதா ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிதா தனது மகன்களுடன் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் கவிதா மற்றும் அவரது இரு மகன்களையும் அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளிக்கு செல்லாமல் இருந்த கவிதாவின் மகன்கள் 2 பேரையும் போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்
    • உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் வாய்த்தகராறு காரணமாக அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் சுதாகருக்கு கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சுதாகர் மீது ஆத்திரம் குறையாத நடராஜன், தனது ஆதரவாளர்கள் 2 பேருடன் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையிலிருந்த சுதாகரின் கழுத்தில் பிளேடால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுதாகருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.இதனை கண்டித்து சுதாகரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திற்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அறந்தாங்கி காவல்த்துறையினர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். காவல்த்துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உறவினர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நபரின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் சக நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×