என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயறுவகை பயிர்களை தாக்கும் பூச்சிநோய்
- கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
- பாதுகாப்பு முறையை பயன்படுத்தி மகசூல் அதிகளவு பெற்றிட அழைப்பு
புதுக்கோட்டை, மார்ச் 26-
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதனை கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படுவதற்கான முன் அறிவிப்பு வரப்பெற்று ள்ளது. அதன்படி, புது க்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டு 1541 ெஹக்டர் பரப்பளவில் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி நிலையில் உள்ள உளுந்து மற்றும் பயறு வகைகளை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் ஆகியவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்திட பரிந்துரை கள் பெறப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் கட்டுப்பாட்டு முறைளை கடைபிடித்து உளுந்து மற்றும் பயறு வகைகளில் கூடுதல் மகசூல் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. உளுந்து பயிரினை தாக்கும், காய் நாவாய் பூச்சிகளை ஒரு ஏக்கருக்கு டைமீத்தோயேட் 30 சதம் இசி என்ற மருந்து 200 மிலி, புள்ளி காய்துளைப்பான் மற்றும் பச்சை காய்துளைப்பான் ஆகியவற்றை கட்டுப்ப டுத்திட குளோரான்ட்ரானி லிபுரோல் 18.5 எஸ்சி என்ற மருந்து 60 மிலி, உளுந்து மற்றும் துவரை பயிர்களில் காணப்படும் சாம்பல் நோயினை கட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசின் என்ற மருந்து 200 கிராம் அல்லது நனையும் கந்தகத்தூள் என்ற மருந்து ஒரு ஏக்கருக்கு 600 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். சாகுபடி செய்யப்பட்டுள்ள தட்டை பயிரில் காணப்படும் புள்ளி காய்த்துளைப்பான்களை தயோடிகார்ப் 75 சதம் டபுள்யூ பி என்ற மருந்து 300 கிராம் என்ற அளவும் மற்றும் காய்நாவாய் பூச்சிகளை டைமீத்தோயேட் 30 சதம் இசி 200 மிலி ஆகிய என்ற மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் உளுந்து மற்றும் பயறுவகை சாகுபடியில் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு புதுக்கோட்டை வேளா ண்மை இணை இயக்குநர் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்.






