search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
    X

    ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி

    • எடை குறைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
    • உணவின் முக்கியத்துவம் குறித்து பெண்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாரத்தில் வட்டார அளவில் 0-6 மாத எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.விராலிமலை தெற்கு தெரு அங்கா–டியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் விராலி மலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காமுமணி தலைமை தாங்கினார்.இதில் அட்மா சேர்மன் இளங்குமரன், வடுகபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றி பெட்டகத்தை வழங்கி–னார்கள். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மேரி ஜெயபிரபா ஊட்டசத்து பெட்டகம், மருத்துவ அட்டையை பற்றியும் ஊட் டச்சத்து தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் இணை உணவின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு வழங் கப்பட்டது.மேலும் இந்த நிகழவில் மேற்பார்வையாளர்கள் பர்வின்பானு, ராஜாமணி, ரோஸ்லின் மேரி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சரஸ் வதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாசிப்பயறு, கேழ்வரகு பாயாசம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×